சுனித்தர் - சாதிவிலக்குண்டவர்

சுனித்தர் - சாதிவிலக்குண்டவர்

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு

Sunita the Outcaste

translated from the Pali by Thanissaro Bhikkhu

Theragatha 12.2 தேரகதா 12.2


பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - வண. நாரத தேரர் அவர்கள். (தமிழில் செல்வி யசோதரா நடராசா)

அடிமைத்தளையை அறுத்தெறியப் புத்த தேவர் தாம் முதன் முதலில் அரும் பாடுபட்டார். அவர் இந்திய மண்ணில் ஆழமாக வேரூன்றியிருந்த இழிவான சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். புத்த தேவர் வாக்கின்படி ஒருவன் ஒதுக்கப்பட்டவனாகவோ அல்லது பெருமகனாகவோ ஆவது அவனுடைய செயல்களினாலேயே அல்லாமல் பிறப்பினாலன்று. ஒருவன் பௌத்தனாக விரும்பினால் அல்லது துறவிகளின் சங்கத்தில் சேர விரும்பினால், அவனுடைய சாதியோ, நிறமோ, தடையாக இருக்க மாட்டாது. மீனவர், தோட்டிகள், தாசியர், முதலியவர்கள் போர் வீரர், பிராமணர் முதலியவர்களோடு, பௌத்த சந்நியாசிகள் சங்கத்தில் எவ்விதத் தங்கு தடையுமின்றி அநுமதிக்கப்பட்டுச் சரிசமமான உரிமைகளைப் பெற்று, உயர்பதவிகளில் நியமிக்கப் பட்டனர். உதாரணமாக மற்ற எல்லோரையும் தவிர்த்து நாவிதரான உபாலி என்பவர் விநயக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத் தலைவராக நியமிக்கப் பட்டார். பயந்த சுபாவமுடைய சுனித்தன் என்ற தோட்டி புத்த தேவராலேயே துறவுக் குழுவில் அநுமதிக்கப்பட்டபின் அரகந்து நிலையை அடைந்தார். திருடனும் கொலைகாரனுமான அங்குலிமாலா என்பவன் புத்ததேவரிடம் அடைக்கலம் புகுந்து ஒரு கருணை மிகுந்த புனிதனானார். மூர்க்கனான ஆலவக்கன் புத்த தேவரிடம் அடைக்கலம் புகுந்து ஒரு பரிசுத்தனானார். தாசியான அம்பபாலி என்பவள் சந்நியாசினி சங்கத்தில் சேர்ந்து அரகந்து தன்மையை அடைந்தார். சாதி, நிற, பதவி, பேதமின்றி எல்லோருக்கும் பௌத்தத்தின் திருக்கோயில் வாயில்கள் எப்பொழுதும் திறக்கப் பட்டுள்ளன எனக் காட்டுவதற்கு இப்படிப்பட்ட சான்றுகள் பலவற்றைத் திரிபிடகத்தில் பரக்கக் காணலாம்.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களின் அந்தஸ்தை உயர்த்தி சமூகத்துக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தியதோடமையாது முதன் முதலில் பெண்களுக்காக ஒரு பிரமச்சரிய சமய சங்கத்தைச் சட்ட திட்டங்களுடன் உருவாக்கியவரும் பகவான் புத்தரேயாவர்.

தேரகதா (ஞானம் பெற்ற/அரகந்த நிலை அடைந்த ஆண் துறவிகளின் சொற்கள்)

தேரிகதா (ஞானம் பெற்ற/அரகந்த நிலை அடைந்த பெண் துறவிகளின் /அறச்செல்விகளின் சொற்கள்)

சுனித்தர் என்ற சாதிவிலக்குண்டவர்

கீழ்க்கண்ட சொற்கள் போற்றுதற்குரிய சுனித்தர் மொழிந்தது தேரகதா 12.2
[பிறப்பு]
ஏழ்மையில், உணவுக்குத் தடுமாறியகீழான குடும்பத்தில் நான் பிறந்தேன்.எனது வேலை இழிவானது:அழுகிப்போன பொருட்களையும், ஆலயங்களில் சேர்ந்த வாடிய பூக்களையும்கூட்டிப் பெருக்குவதே எனது வேலை.மக்கள் என்னைப் பார்த்து அருவருப்படைந்தனர்.எள்ளி நகையாடினர், அவதூறு பேசினர்.உள்ளத்தைத் தாழ்த்தி, அவர்களுள் பலருக்கும் மரியாதை செலுத்தினேன்.
In a lowly family I was born,poor, with next to no food.My work was degrading:I gathered the spoiled,the withered flowers from shrinesand threw them away.People found me disgusting,despised me, disparaged me.Lowering my heart,I showed reverence to many.
[துறவு]
பின் சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்ற அந்த ஒருவர், மாவீரர், துறவிகள் அணிசூழ மகதர் தலைநகருக்குள் நுழைவதைக் கண்டேன்.என்னிடமிருந்த உறியை விசிறி விட்டு,மரியாதை செலுத்த அவரை அணுகினேன்.அவர் - அந்த மாமனிதர் - எனக்காக மட்டுமேகருணையோடுஅசையாமல் நின்றார்.அவர் திருவடிகளில் மரியாதை செலுத்திய பின் ஒருபுறமாக நின்றேன்உயிரினங்களில் தலை சிறந்த அவரிடம்துறவறம் பூண வேண்டியவாறு.அந்தக் கருணை மிக்க ஆசான்,உலகம் அனைத்துக்கும் அனுதாபமுள்ள அவர்: "வாரும் துறவியே!"என்று கூறி என்னை அழைத்தார்.அதுவே என்னை அவர் சங்கத்தில் ஏற்றுக் கொண்டார் என்பதற்கான அடையாளம்.
Then I saw the One Self-awakened,arrayed with a squadron of monks,the Great Hero, entering the city,supreme, of the Magadhans.Throwing down my carrying pole,I approached him to do reverence.He — the supreme man — stood stillout of sympathyjustfor me.After paying homageto the feet of the teacher,I stood to one sideand requested the Going Forth from him,supreme among all living beings.The compassionate Teacher,sympathetic to all the world, said:"Come, monk."That was my formal Acceptance.
[பயிற்சி]
தனிமையில் நான் வனத்தில் வசித்தேன். அயராமல்அந்த வெற்றியாளன் எனக்குக் கற்பித்த சொற்படி பயின்றேன்.
Alone, I stayed in the wilds,untiring,I followed the Teacher's words,just as he, the Conqueror, had taught me.
[விடுதலை]
இரவின் முதல் ஜாமத்தில்,முற்பிறவிகளை நினைத்துப் பார்த்தேன்.நடு ஜாமத்தில்,ஞானக்கண் தூய்மையானது.கடை ஜாமத்தில்,மனத்தில் இருந்த இருளை அகற்றினேன்.
In the first watch of the night,I recollected previous lives;in the middle watch,purified the divine eye;in the last,burst the mass of darkness.
[தேவர்கள் அஞ்சலி]
பின் இரவு முடிகிற வேளையில்கதிரவன் தோன்றும் நேரத்தில்,இந்திரரும், பிரம்மரும் அவர்கள் நெஞ்சருகில் கை சேர்த்தவர்களாகஎனக்கு மரியாதை செலுத்த வந்தனர்:"மனிதருள் மேன்மையானவரே! உமக்கு எங்கள் அஞ்சலி!மனிதருள் தலைசிறந்தவரே! உமக்கு எங்கள் அஞ்சலி! உமது மனமாசுகள் நீக்கப்பட்டு விட்டன. அன்புடையவரே, நீங்கள் உபசரிக்கத் தக்கவர்!"
Then, as night was endingand the sun returning,Indra and Brahma came to pay homage to me,hands palm-to-palm at their hearts:"Homage to you, O thoroughbred of men,Homage to you, O man supreme,whose fermentations are ended.You, dear sir, are worthy of offerings."
[புத்தர்]
தேவர்கள் சூழ இருந்த என்னைப் பார்த்துஆசான் புன்னகையோடு கூறினார்:"எளிமையும் துறவும், பிரமச்சரியமும் மேற்கொண்டு,தன்னடக்கமும், சுயகட்டுப்பாட்டோடும் இருக்கும் ஒருவர்: பிராமணராகிறார். அவரே ஒரு ஒப்புயர்வற்ற பிராமணர்!"
Seeing me, arrayed with a squadron of devas,the Teacher smiled and said:"Through austerity, celibacy,restraint, and self-control:That's how one is a brahman.He is a brahman supreme."

* * *