FILM : MANIMEGALAI
SONG : UNDIDA NAAZHI UDUTHIDA
SINGER : SEERKAZHI GOVINDARAJAN
MUSIC : G.RAMANATHAN
LYRICS : KAMBATHASAN
YEAR : 1959
உண்டிட நாழி உடுத்திட நான்கு முழம் கொண்டிடச் சிறு குடிலும்
எவர்க்கும் உதவுதல் கடமையடி
ஞானப் பெண்ணே
உண்டிட நாழி உடுத்திட நான்கு முழம் கொண்டிடச் சிறு குடிலும்
எவர்க்கும் உதவுதல் கடமையடி
ஞானப் பெண்ணே
உண்டிட நாழி
பன்னும் தானங்களில் பரமனைக் காண்பதற்கு
பன்னும் தானங்களில் பரமனைக் காண்பதற்கு
அன்ன தானம் ஒன்றே
பன்னும் தானங்களில் பரமனைக் காண்பதற்கு
அன்ன தானம் ஒன்றே
பெரிதாம்
அன்புவழியாகுமடி ஞானப் பெண்ணே
அன்புவழியாகுமடி ஞானப் பெண்ணே
அன்புவழியாகுமடி
கூன்குருடு முடங்கள் கொண்ட பசியைத் தீர்த்து
ஆன்ம சேவை புரிவாய் இங்கே
கூன்குருடு முடங்கள் கொண்ட பசியைத் தீர்த்து
ஆன்ம சேவை புரிவாய் இங்கே
அமரபதம் பெறுவாய் ஞானப்பெண்ணே
அமரபதம் பெறுவாய் ஞானப்பெண்ணே
பஞ்சமும் நோயும் இல்லாப் பரிவுள்ள நாட்டினிலே
பஞ்சமும் நோயும் இல்லாப் பரிவுள்ள நாட்டினிலே
வெஞ்சமர் இல்லையடி ஞானப் பெண்ணே
வெஞ்சமர் இல்லை யடி
உழைப்பினில் விளங்கிடும் சாந்தியடி ஞானப்பெண்ணே
உழைப்பினில் விளங்கிடும் சாந்தியடி ஞானப்பெண்ணே
உண்டிட நாழி உடுத்திட நான்குமுழம்
* * * * *
நாழி - காற் படி. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் (நல்வழி - 28).
' "அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்'
மணிமேகலை 25,228-231
If one asks, "What does it mean to gain merit?"
remember this: it is none other than
providing for food, clothing and shelter
to all of earth's creatures.
Manimekalai 25,228-231
அறம் – புண்ணியம், Merit (in this context);
உண்டி – உணவு, Food;
உறையுள் – தங்குமிடம், Abode, resting place;
YouTube பதிவுக்கு நன்றி: திரு. Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI