காதலுக்காக

Post date: Apr 23, 2011 4:38:11 AM

உன்னில் மிச்சமும்

என்னில் சொச்சமும் தான்

கவலைகள்.....!ஆனால்

மீத மொத்தமும் காதல்தான்

கரைந்துகொண்டு இருக்கிறது நம்முள்......!

      நீ நின்றுசென்ற இடத்தில் நின்று ஆழ்ந்து சுவாசிப்பேன்....! உன் மூச்சுக்காற்று என் நுரையிரல் வரை பாயும் வரை...!

உனக்கு பரிசலிக்கவே காத்திருகின்றன என் ஓவ்வொரு எழுத்துக்களும்....! ப்ரம்மனுக்கும் எமனுக்கும் ஏதோ

ஒரு தொடர்புபோலும்.....!

உன்னை படைத்து பலரை

இறக்கச்செய்கிரான்....!

உன் அழகில்....!

உன் மொட்டைமாடி துணிகளிடம் கேட்டுப்பார்.....? எவ்வளவு முறை நான் உன் வீட்டை கடந்து சென்றேன் என்று.....!

நீ எனக்கு பிடிக்கும் முந்தானைக் குடைக்காகவே மழையில் நனையா வேண்டும் உன்னுடன்.....!

வார்த்தைகளால் எழுதமுடியாத கவிதைகள் இன்னும் மிச்சம் இருக்கிறது என் கன்னத்திலும்..... உதடுகளிலும்..... நீ எழுதிவிட்டு சென்ற கவிதைகள் சில....!