எனைப் பிரிந்தது உன்..! -

Post date: May 4, 2011 4:18:16 AM

எனை மறந்தது உன் மனமென்றால்

இறந்து போனது என் மனமன்றோ...

எனைப் பிரிந்தது உன் உறவென்றால்

பிரிந்து போனது என் உயிரன்றோ...

எனை துறந்தது உன் இதயமென்றால்

துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...

எனை தொலைத்தது உன் கண்களென்றால்

தொலைந்து போனது என் கண்களன்றோ...

ஒரு கணமும் உனைப் பிரியேன்...

உன் துணையாய் நானிருப்பேன்...

என்றாயே பெண்ணே..!

இன்றோ வேறொருவன் துணையாகி

உனக்கு பதில் எனக்கு

துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!

உன்னைப் போலென்னால்

மாற முடியவில்லையே...

வேறொருத்தியை துணையாக ஏற்க

என் மனதில் இடமுமில்லையே...

என் செய்வேன் பெண்ணே...

காலமெனை மாற்றும் என்றார்கள்

காலம்தான் மாறியது...

உன்னால் ஏற்பட்ட காயம்...

இன்னும்... இன்னும் என் மனதில்...

ஆறவில்லையடி...

அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...

காயத்தை ஆற்றி விட்டால்

உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்

பொய்யாகிவிடுமடி...

என் மெய் இடுகாடு போகும் வரை

என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!

-Courtesy Mohanan