உன் இதழ்க்கொடியில்..!
Post date: Apr 28, 2011 4:21:11 AM
கொடியின் இடையில் மலர்கள்
பூக்கும் போதுதான்
மனதில் மகிழ்ச்சி நிறையும்...
அவைகள் உதிரும் போது
என்மனதில் துன்பம் துண்டை விரிக்கும்..!
இதற்கு மாறாக
உன் இதழ்க்கொடியில்
புன்னகை பூ பூத்தாலும் சரி...
உதிர்ந்தாலும் சரி...
என் மனதில் மகிழ்ச்சி நிறையும்..!
-மோகனன்