உன் இதழ்க்கொடியில்..!

Post date: Apr 28, 2011 4:21:11 AM

கொடியின் இடையில் மலர்கள்

பூக்கும் போதுதான்

மனதில் மகிழ்ச்சி நிறையும்...

அவைகள் உதிரும் போது

என்மனதில் துன்பம் துண்டை விரிக்கும்..!

இதற்கு மாறாக

உன் இதழ்க்கொடியில்

புன்னகை பூ பூத்தாலும் சரி...

உதிர்ந்தாலும் சரி...

என் மனதில் மகிழ்ச்சி நிறையும்..!

-மோகனன்