இப்படிக்கு நான்…!
Post date: May 31, 2011 3:10:04 AM
என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்.
*
எனது கல்லை எப்போதும்
இரண்டு விடயங்களை
நோக்கியே வீசுகிறேன்
தவறினால்
ஒன்றாவது விழும்
என்பதால்
*
இந்த உலகத்துக்கு நான்
ஒரு புத்தகமாகவாவது
இல்லாமல் இறந்தாலும்
ஒரு தத்துவத்தையாவது
விட்டுத்தான் இறப்பேன்.
*
நான் எதையும்
சம்பாதிக்கவில்லை
என்னைத் தவிர எனக்கு.
*
நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது பெறுமதி
வாய்ந்ததாக இருக்குமானால்.
*
என்னை விளங்கப்படுத்த
கரும்பலகை தேவையில்லை
ஒரு காரணம் போதும்.
*
நான் வற்றிப் போனபின் தான்
தெரிந்து கொண்டேன் என்னை
எத்தனைபேர் குடி நீராகா
பாவித்தார்கள் என்பதை
*
என்னிடம் இருப்பதே அதிகம்
என்பதை தெரிந்து கொண்டபின் தான்
இறைவனை நான் திட்டுவதில்லை.
*
என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது.
*
இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.
*
ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.
*
பிரைச்சனைகள் என்னை குளப்பும்
போதுதான் நான் குளம்பாமல்
இருப்பேன்
*
சின்ன வாய்ப்புகளையும்
தவறவிட மாட்டேன்
அனாலும் பெரிய
வாய்புகளுக்காய்
காத்திருக்கிறேன்
*
நான் தெய்வம் இருக்கு என்பதை
நம்புகிறேன் அனால் மததின்
மூடனம்பிக்கையை பின்பற்றுவதில்லை.
*
என் விரல்கள் உள்ளவரை மோதிரங்கள்
தொலைந்ததற்காய் கவலைப்படமாட்டேன்.
*
உனக்கு நான் உதாரணமல்ல
உனக்கு நான் ஒரு தத்துவம்
*
தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்
*
கடவுள் இருக்கிறார இல்லையா என்று
சந்தேகப்பட்டு வாழ்வதைவிட
கடவுள் இருக்கிறார் என்று
நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது.
*
என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை நம்பவில்லை
எத்தனை தடவை விழுந்தாலும்
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்
*
வாழும்வரை
நிழல் தருவேன்
இறந்தால்
என் காதல்
துணைவியே
என்னை
விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்