இப்படிக்கு நான்…!

Post date: May 31, 2011 3:10:04 AM

என் கண்கள் காட்டிக் கொடுத்த

உண்மைகளை விட என் காதுகள்

கேட்ட பொய்களே அதிகம்.

*

எனது கல்லை எப்போதும்

இரண்டு விடயங்களை

நோக்கியே வீசுகிறேன்

தவறினால்

ஒன்றாவது விழும்

என்பதால்

*

இந்த உலகத்துக்கு நான்

ஒரு புத்தகமாகவாவது

இல்லாமல் இறந்தாலும்

ஒரு தத்துவத்தையாவது

விட்டுத்தான் இறப்பேன்.

*

நான் எதையும்

சம்பாதிக்கவில்லை

என்னைத் தவிர எனக்கு.

*

நான் எதையும் இழக்கத் தயார்

இழப்பதைவிட பெறுவது பெறுமதி

வாய்ந்ததாக இருக்குமானால்.

*

என்னை விளங்கப்படுத்த

கரும்பலகை தேவையில்லை

ஒரு காரணம் போதும்.

*

நான் வற்றிப் போனபின் தான்

தெரிந்து கொண்டேன் என்னை

எத்தனைபேர் குடி நீராகா

பாவித்தார்கள் என்பதை

*

என்னிடம் இருப்பதே அதிகம்

என்பதை தெரிந்து கொண்டபின் தான்

இறைவனை நான் திட்டுவதில்லை.

*

என் இறந்த காலம் என்ற கண்ணாடியே

நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்

நடக்க உதவி செய்கிறது.

*

இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்

எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்

என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.

*

ஆசைபட்டால் கடன்பட்டாவது

அனுபவிப்பேன்.

*

பிரைச்சனைகள் என்னை குளப்பும்

போதுதான் நான் குளம்பாமல்

இருப்பேன்

*

சின்ன வாய்ப்புகளையும்

தவறவிட மாட்டேன்

அனாலும் பெரிய

வாய்புகளுக்காய்

காத்திருக்கிறேன்

*

நான் தெய்வம் இருக்கு என்பதை

நம்புகிறேன் அனால் மததின்

மூடனம்பிக்கையை பின்பற்றுவதில்லை.

*

என் விரல்கள் உள்ளவரை மோதிரங்கள்

தொலைந்ததற்காய் கவலைப்படமாட்டேன்.

*

உனக்கு நான் உதாரணமல்ல

உனக்கு நான் ஒரு தத்துவம்

*

தினமும் தோற்றுப்போகிறேன்

பேசாமலிருக்க நினைத்து

பேசிக்கொண்டிருப்பதால்

*

கடவுள் இருக்கிறார இல்லையா என்று

சந்தேகப்பட்டு வாழ்வதைவிட

கடவுள் இருக்கிறார் என்று

நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது.

*

என் வாழ்வில் நான் ஒரு போதும்

விழவே மாட்டேன் என்பதை  நம்பவில்லை

எத்தனை தடவை விழுந்தாலும்

எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்

*

வாழும்வரை

நிழல் தருவேன்

இறந்தால்

என் காதல்

துணைவியே

என்னை

விறகாக்கி

உன் பசி தீர்ப்பேன்