எனக்கு சொல்லித்தா.......!!

Post date: Mar 28, 2011 3:21:34 AM

இருவரும் விடை பெறுவோம் பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...! காதுகளுக்குள் கேட்ட உன் குரலின் இனிய ரகசியங்களை, சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...! உனது பாடல்களை, கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....! முதன்முதல் நீ தந்த முத்தத்தை, ஒரு உணவாக சாப்பிட்டாகிவிட்டது! எதுவுமில்லை உன் அடையாளங்கள்!!?

ஆனால் என்னை கொஞ்சி அளித்த கணங்கள்

நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்

பறந்து திரிவதை

எப்படி கொல்வது...?

எனக்கு சொல்லித்தா.......!!