தேவதை தேவையில்லை...
Post date: Feb 13, 2011 9:45:13 AM
தேவதை தேவையில்லைதெளிந்த நல் வதனம் போதும்வைர நகையெதற்கு?வழித்துணையாதல் இன்பம்படிக்கிற பழக்கமுண்டுஅடிக்கடி திட்ட மாட்டேன்பாதியாய் இருக்க வேண்டாம்முழுவதும் நீயே ஆகு!
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்!
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்!
சமையலில் உதவி செய்வேன்!
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்!
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு..
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்!
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!