அழகே....!
Post date: Apr 23, 2011 4:30:24 AM
நீ கைக்குள் அடக்கி
வைத்துப்போகும் புத்தகத்திடம்
கேட்டுப்பார்....!
உன் இளமையின் முழுமை புரியும்....!
நீ இடப்க்கமாய் திரும்பி
என்னைபார்த்த
முதல் பார்வையிலேயே....!
வலப்பக்கம் சரிந்துவிட்டதடி
என் இதயம்.....!
நீ சுழித்துவிட்டு சென்ற
உதட்டு மடிப்பில்
ஒட்டிக்கொண்டுள்ளது எனது மனசு...!
உன்னுள் ஒன்றாக விரும்பினால்....! இதயத்தில் கருவுற்று.... கண்களில் பிறந்து.... கன்னத்தில் வாழ்ந்து .... உதட்டில் மடியும்..... கண்ணீராக விரும்புகிறேன்....!
சாலையில் வேகமாக செல்லும் பேருந்தை நோக்கி காற்றில் அதன் பின் பறக்கும் காகிதம் போல்தான்..! என் கவிதைகளும் உன்னை நோக்கியே பயணிக்கிறது...!
விதவிதமாய் வெட்கங்களை எங்கே சேர்த்து வைத்திருக்கிறாய்....! நான் உன்னை தீண்டும்போது மட்டும் அழகாய் அளவாய் வெளிப்படுதுகின்றாய்...!
துருவங்களில் உரைந்து நிற்கும் நீராய் என்னுள் உரைந்து நிற்கிறது நம் காதல்.....!
நீ என்னிடம் பேசும்போது உன் காதோரம் விளையாடும் தோட்டின் மீதுதான் என் கோபப்பார்வை......! உன் காதோரம் சரிந்து விளையாட என் இதழுக்கு மட்டுமே உரிமை உள்ளது.....!
நீ தலை சாய்த்து சிரிக்கும்
அழகுச் சிரிப்பில்....!
மலர்ந்து இருப்பது உன் இதழ்
மட்டும் அல்ல என் இதயமும் தான்....!
என் ஒவ்வொரு கவிதையும் படித்துவிட்டு ....! கவிதைக்கு நீ கொடுக்கும் முத்தம்களில்தான் என் அடுத்த கவிதைகளின் ஆரம்பம்.....!
ஒவ்வொரு மின்னலிலும் 23 லட்சம் வோல்ட் மின்சாரம் பாய்கிறாதம்...! உன் மின்னல் பார்வையை விட இது ஒன்றும் அதிகம் இல்லை....!
எங்கே கற்றுக்கொண்டாய் தேவதையே....! கண்ணில் தந்தியடிக்கும் வித்தையை......!