நாம் நின்று பேசிய...

Post date: Feb 13, 2011 9:45:14 AM

நாம் நின்று பேசிய நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்..நீ விட்டுப்போன சுவடுகளில் வெயில் படுமே என்றுதான் வருத்தப்படும் அந்த மரமும்!

#################################

  ஒரு வழிக் கண்ணாடி

  மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது

  என் காதல்;

 ஆற்றாமை பூசிய பாதரசம்

அழிந்து உனக்கது 

புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன்  நான்!                                   

                                       

திசைகாட்டிகள் நிறைந்த பாதைகளிலும் தொலைந்து போகும் நான் மிகச்சரியாக பிரயாணித்து உனை அடைந்தது இந்த காதல் பயணத்தில்தான்!**                                                                                                                                                        பழங்கஞ்சியுமபயத்தந் துவையலும்ஏர் உழும் மாமனுக்குஎடுத்துப் போவாள்..அவளுக்குப் பிடிக்குமென்றுஈச்சம் பழங்களைதுண்டில் மூடித் தருவான்அவன்..வானம் பார்த்த பூமியில்எப்போதும் பெய்தபடிபிரிய மழை...