காதல்

Post date: Apr 27, 2011 5:40:52 AM

கவிதையாய் சிலருக்கு.....

காயமாய் சிலருக்கு ......

மாயமாய் சிலருக்கு.....

மலரினும் மெல்லிய ஒன்று....

மயில்தோகையாய் இன்றும்...!

கனவிலும் கவிதையிலும்

தவிர்க்க முடியாத ஒன்று...!

தாயிடமும் உண்டு....

நண்பர்களிடமும் உண்டு....!

சில வெற்றியிலும் பங்குபெறும்....!

சில தோல்விகளிலும் பங்குபெறும்...!

உயரத்தையும் காட்டும்...!

மரணத்தையும் காட்டும்...!

உள்ளே வர அனுமதி தேவையில்லை ....!

வெளியே செல்ல அனுமதி கொடுப்பதில்லை...!

மண்ணில் பிறந்த ஒவ்வொரு

ஆணும் பெண்ணும் சுவாசித்த ஒன்று...!

உள்ளுக்குள் இருக்கும்வரை பட்டாம்பூச்சி ....!

வெளியே வந்துவிட்டால்  கம்பளி பூச்சி...!

ஒற்றை ரோஜாவில் உலகையே உலுக்கும்...!

ஒற்றை வார்த்தையில் உலகையே கலக்கும்...!

இதயத்தின் பெண்டுலத்தை

தட்டிவிட்டு ஒளிந்துகொள்ளும் .....!

உனக்குள்ளும்  உண்டு...!

எனக்குள்ளும் உண்டு ...!

உலகறிந்த ஒன்று....!