மற்றுமொரு தூங்காத இரவு
Post date: Feb 25, 2011 7:33:21 AM
மற்றுமொரு தூங்காத இரவு
உன்னால்.... நீயோ நித்திரையில்...!
என்ன பிழை கண்டாய் என்னில்...?
நீ எழுதும் எந்த வரியும், எனக்கு
தோன்றுமே கவிதையாய்...,
நீ எழுதும்போது என் பெயரும்
கூட அழகுதான் , வியந்திருக்கிறேன்
பலமுறை....! உனக்கு அப்படி
தோன்றாதது விந்தையே..?!
ஒத்துகொள் இன்றே, நான்
உன்னில் கொண்டிருக்கும் அன்பே
பெரிதென்று...! மன்னித்து
விட்டு விடுகிறேன் உன்னை...!!