மற்றுமொரு தூங்காத இரவு

Post date: Feb 25, 2011 7:33:21 AM

மற்றுமொரு தூங்காத இரவு

உன்னால்.... நீயோ நித்திரையில்...!

என்ன பிழை கண்டாய் என்னில்...?

நீ எழுதும் எந்த வரியும், எனக்கு

தோன்றுமே கவிதையாய்...,

நீ எழுதும்போது என் பெயரும்

கூட அழகுதான் , வியந்திருக்கிறேன்

பலமுறை....! உனக்கு அப்படி

தோன்றாதது விந்தையே..?!

ஒத்துகொள் இன்றே, நான்

உன்னில் கொண்டிருக்கும் அன்பே

பெரிதென்று...! மன்னித்து

விட்டு விடுகிறேன் உன்னை...!!