கொட்டும் மழைக்காலம்..!

Post date: Mar 16, 2011 4:00:09 AM

அதுவோ கொட்டும்

மழைக்காலம்…

அலுவலகம் செல்ல வேண்டி

அவசர அவசரமாய்க்

குளித்து முடித்து துணியைத்

தேடுகிறேன்…

தலை துவட்டக் கூட

துணியில்லையடா...

அத்துனையும்

நேற்று பெய்த மழையில்

நனைந்து விட்டதடா

எனகிறாய்….

அலுவலகம் போக வேண்டுமடி

இப்போது என்ன செய்ய..?

என நான் சத்தமிட…

சாந்தமாய் என்னருகே வந்து

உன் நீள் கூந்தலால்

என் தலை துவட்டி

உடல் துடைத்து விடும் போது

உன் கூந்தல் ஸ்பரிசத்தில்

என்னை நான் மறந்து விட …

உன் கூந்தல் வாசத்தில்

என் கோபமெல்லாம் மறைந்து விட

நம் காதல் அங்கே மீண்டும் மீண்டும்

உயிர்த்தெழுகிறது அன்பே..!