உன்னைச் சுற்றியே..!t

Post date: May 18, 2011 2:21:00 PM

அன்பை திகட்டத் திகட்டப்

புகட்டி விட்டு...

அலைகடல் தாண்டி

அயல்நாடு சென்று விட்டாய்..!

ஆறு நாட்களுக்கொரு முறை

அலைபேசியில் அழைத்து

மறந்தாயா என் அன்பே..?

என்ற கேள்வியை என்னிடம்

மறவாமல் கேட்கிறாய்..!

உன்னை மறந்தால் தானே

நான் நினைப்பதற்கு..!

அன்னையை மறந்தேன் எனில்

அகிலத்தை மறந்தவனாவேன்..!

அய்யனை மறந்தேன் எனில்

அறிவை மறந்தவனாவேன்..!

உன்னை மறந்தேன் எனில்

உயிரையே மறந்தவனாவேன்..!

என்னுடல் கூடு மட்டும்தானிங்கே...

என்னுயிரும் உறவும் நினைவும்

எக்கணமும் உன்னைச் சுற்றியே..!