மரணவலியினும் கொடுமை

Post date: Mar 31, 2011 3:52:54 AM

மரணம் வரை இருப்பாயா என்றாய்இதோ நான் மட்டுமே இருக்கிறேன்இன்னும் உன்னை தேடிக்கொண்டுஉன் மொழிகளில் எதை மறக்கஎன எனக்கு தெரியவில்லைமறக்கவும் முடியவில்லைநீ பேசிய வார்த்தைகளெல்லாம்வேதவாக்காய் நான் என் இதயத்தில் வைத்து இன்னும் பூஜிக்க உனக்கு மட்டும் என்னிடம் எப்படி சலிப்பு வந்ததுஎந்த உறவும் உன்னை கடந்துஎன் நினைவை தொட அனுமதிக்காமல் நானஅதிகபட்ச எதிர்பார்ப்பு

உன் அன்பான வார்த்தைகள் மட்டுமே

என்னை அழவைக்காதது நீ மட்டுமே

என பெருமிதமாய் கழிந்த நாட்கள் போய்

அழதா நாட்கள் இல்லை என்ற நிலை.

சின்ன சின்ன சந்தோஷங்களில்

என் கண்ணாடி கனவு மாளிகை

பல நேரம் நீ சொல்வது பொய்

என அறியும் போது உடைந்து

சிதிலமாகும் இதயம் இருப்பினும்

இணைத்திடுவேன் அதனுள்ளே நீ

வாழ்வதால்

எவர் வந்தார் குறுக்கே?

எது தடுக்கிறது உன்னை?

ஏன் மாறினாய் இப்படி?

அன்று நீயாக தந்த அன்பும் அக்கறையும்

இன்று நானாய் கேட்டு வாங்குவது

மரணவலியினும் கொடுமை

- Courtesy Mano