மாற்றுத்திறனாளிகள்...

Post date: Jul 12, 2011 3:10:09 AM


சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளால்

மாற்றுத்திறனாளிகள் என்று

பெயர் மாற்றம் செய்யப்பட்டு

வரும் ஒரு சிசிக்குழந்தை

ஊனம்...!

எங்களின் தாய்தந்தை செய்த

தவற்றினால் நாங்கள்

கருப்பை தவறிவிட்டோம் ...

எக்காலத்தில் செய்த ஊழோ

தெரியவில்லை...

இன்று,

எம் ஊழுடம்பைச் சுற்றி

வாதை கூடாரமிட்டுள்ளது...!

அனாதைகள் அனைவரும்

கடவுளின் குழந்தைகளாம்....

நாங்கள் அனாதைகளல்ல ..

பெற்றோரிருந்தும் பிரயோசனப்படாத

பிரகஸ்பதிகள்...!

உடல் உறுப்புகள் மட்டுமே

உதிர்ந்துள்ளது எங்களிடம்...

மனவுறுதியை மட்டும்

குன்றம் போல் குவித்திருக்கிறோம்...!

எங்களின் கண்கள்

மனிதனை மனிதனாகத்தான்

பிரதிபலிக்கும் ...

ஆனால் ,

உடலுறுப்புகள் அனைத்தும்

ஒருங்கமைக்கப்பட்ட

மானசீக மனிதங்களின்

பார்வையில் நாங்கள்

"மனிதப் பிறவியெடுத்து

நெளியும் மண்புழு வகையினர்"

எங்களைப் பரிதாபப் படுத்தி

பாத்திரத்தைக் கொடுத்துவிடாதீர்....

பழகிவிடும் என் சாதியினருக்கு,

உழைக்கும் வர்க்கத்திடமிருந்து

பிழைக்கக் கற்றுக்கொள்ளும் வித்தை...!

ஊனம் என் உடம்பில் மட்டுமே..!

உழைப்பிற்கு இல்லை,

எத்தனை முறை விழுந்தாலும்

எழுந்துகொண்டே இருப்போம் ,

எங்கள் மனவுறுதியை

ஊன்றுகோலாக்கி....!

-திருமதி.வனிதா வடிவேலன்.