எதைக் கட்டிப் போட முடியும்..

Post date: Feb 15, 2011 12:24:33 PM

தொலைந்து போன

காகிதங்கள்

மீண்டும் கிடைத்தது போல்

மகிழ்ச்சி!

மனசு வெட்கப் படாமல்

சில சமயம்

தனக்குத் தானே

குளித்து கொள்ளும்..

ரகசியமாய்க் கனவை

அடைகாத்து வைத்து

குஞ்சு பொறிப்பது போல்

சில துளி நிகழ்வுகள்..

தங்காது எனத் தெரிந்தும்

தென்றலை சுகிக்கும் மனம்..

எதைக்

கட்டிப் போட முடியும்..

கட்டுப்படுகிறவை

தானாய் விரும்பாமல்...!

 

 

 

உன் நினைவு...

 

யாரோ சொன்னார்கள் , " சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."என்று... ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்

"என்றும் உன் நினைவு " மட்டும் தான் ....

காரணம்....

நான் நேசிப்பவளும் நீ தான்.....

என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்...