ஆயுள் கைதி

Post date: May 25, 2011 8:52:42 AM

உள்ளத்தால் இணைந்து

உறவில் கலந்திட்ட

உள்ளங்கள் இரண்டிங்கு

உண்மை உணர்வினை சொல்லிட

உதடுகள் துடிக்குது

உள்ளே ஏதோ தடுக்குது

காதலின் விதியா?

காலத்தின் சதியா?

உணர்ந்திட்ட போதிலும்

உரைக்க மறுக்குது

உள்ளம் உண்மைதனை இங்கு.

நிலையது என்ன

நெஞ்சத்தில் ஏக்கம்

நினைவினில் தாக்கம்

தூக்கமும் போச்சு

வேதனையே வாழ்வின்

அடுத்த நிலையாச்சு

சொல்லவும் முடியாமல்

மெல்லவும் முடியாமல்

மெளனத்தினை துணைக்கழைத்து

விழிநீரை பலியாக்கி

கனவுலகில் காலத்தை கழித்து

காதல் என்னும் இராச்சியத்தில்

ஆயுள் கைதியாக

இன்று நானிங்கு..

-Courtesy தோழி பிரஷா