தொலைத்த பின்னும் நிம்மதி..!

Post date: Jul 19, 2011 3:35:22 AM

யாரேனும் தனக்குரிய

பொருளைத் தொலைத்து விட்டால்

நிம்மதியாய் உறங்குவார்களா..?

ஆனால் நான் உறங்குகிறேன்..!

என் மனதை தொலைத்து

விட்ட பின்பும்

நிம்மதியாய் உறங்குகிறேன்..!

ஏனெனில்…

என் மனதை

உன்னிடம்தான்  - அதுவும்

உரியவளிடம்தான்

தொலைத்திருக்கிறேன்

என் மன நிம்மதியோடு..!

-Courtesy Mohanan.