Welcome..! Join us to Develop your Humanity
S.M.முத்து ஜப்பானிய தபால் தலையில் வந்த கதை
1980 களில் தமிழகத்தைச் சேர்ந்த S.M.முத்து மற்றும் ஜப்பானிய குடிமகனான ஷுஜோ மத்சுங்கா இலக்கியத்தின் மேலுள்ள தங்களின் பொதுவான அன்பு காரணமாக ஒரு சாத்தியம் இல்லாத நட்பினை ஏற்படுத்திக் கொண்டனர். 2007 ஆம் ஆண்டு, இந்த நட்பின் காரணமாக ஜப்பானிய அரசு முத்துவை கௌரவிக்க அவருக்கு தபால் தலை வெளியிட்டது.
ஜப்பானில் காணப்படும் நூலகங்களில், ஜப்பானியர்களின் இலக்கிய புத்தகங்களுக்கு நடுவே ஷுஜோ மத்சுங்கா எழுதிய திருக்குறள் என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தை கண்டு பலர் தடுமாறி நிற்பர். இந்தப் புத்தகம் அதே பெயரில் உள்ள தமிழ் இலக்கிய நூலின் ஜப்பானிய மொழிபெயர்ப்பு.
தொடர்ச்சியாக நடைபெற்ற அற்புதமான நிகழ்வுகளின் காரணமாக, திருக்குறள் புத்தகத்தின் காரணமாக இந்திய வம்சாவளியை சேர்ந்த முத்துவை வாழ்த்தும் விதமாக ஜப்பானிய அரசு அவர் நினைவாக தபால் தலை வெளியிட்டது.
இந்தக்கதை 1970களில் ஜப்பானை சேர்ந்த ஷுஜோ மத்சுங்கா எதிர்பாராதவிதமாக திருக்குறளின் சில மொழிபெயர்ப்பு வரிகளை படிக்கும் பொழுது தொடங்கியது.
இந்தப் புத்தகத்தின் உள்ளொளி உரை உலகளாவிய பொதுமையை விளங்குவதால், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஷுஜோ பல வருடங்களுக்கு முன்பு திருக்குறளின் வரிகளைப் படித்திருந்தாலும், அவருக்கு இப்பொழுதும் திருக்குறள் கவர்ந்திழுப்பதாக அமைகிறது.
இந்த ஆர்வத்தின் காரணமாக இந்தியாவில் உள்ள தனது பேனா நண்பரான சேகரை ஷுஜோ நாடினார். சேகர், அவரை தனது தந்தையான S M முத்துவின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பிறந்த S M முத்து தமிழ் இலக்கியங்களில் தீராத வெற்றியுடன் விரும்பினார். முத்து திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பினார்.இதனால் அவர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு மலர்ந்தது.
ஷுஜோ திருக்குறளை மொழி பெயர்க்க ஆரம்பித்தவுடன், முத்து மற்றும் ஷுஜோவிற்கு இடையே நிறைய எண்ணிக்கைகளில் கடிதங்கள் பரிமாறப்பட்டன.
ஷுஜோ திருக்குறளின் வேலையை தொடங்கிய பின் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 50 கடிதங்களுக்கு மேல் பரிமாறிக்கொண்டோம். அவர் தனக்கு சந்தேகம் உள்ள பக்கங்களை புகைப்பட நகல் எடுத்து எனக்கு அனுப்புவார் நான் மறுபடியும் அவருக்கு பதில் கடிதம் எழுதுவேன்", என்று முத்து தி ஹிந்து நாளிதழிடம் தெரிவித்தார்.
1980 ஆம் ஆண்டு, ஷுஜோ திருக்குறளின் மொழிபெயர்ப்பை முடித்தவுடன், 1981 ஆம் ஆண்டு ஷூஜோ முதல் முறையாக இந்தியாவிற்கு வந்தார். முத்து அவரை மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்க வழிவகை செய்தார்.
"அவர் பார்ப்பதற்கு அழகாகவும் உயரமாகவும் இருந்தார். அவர் என்னை பார்த்தவுடன், தலைகுனிந்து கைக்கூப்பி எனக்கு வணக்கம் வைத்தார்", என்று முத்து தனது நினைவுகளை பகிர்ந்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக கடிதம் மூலம் தகவல் பரிமாறிக் கொண்ட இரண்டு நண்பர்களும் சந்திப்பது அதுவே முதல் முறை.
அந்த மாநாட்டில், ஷுஜோ திருக்குறள் குறித்த தனது ஆய்வுக் கட்டுரையை முன்வைத்தார்.
அவரது வருகையின் போது,புகழ்பெற்ற தமிழ் கவிஞரான பாரதியாரை தனது ஜப்பானிய நண்பருக்கு அறிமுகப்படுத்த முத்து எண்ணினார்.ஷுஜோவிற்கு தமிழ் இலக்கியத்தின் மீது உள்ள பற்றின் காரணமாக, அவர் தந்த விண்ணப்பத்தை உடனே ஏற்றார்.
அவர்கள் பரிமாறிக் கொண்ட ஒவ்வொரு கடிதம் மூலமாகவும், அவர்களின் நட்பு உயர்ந்தது, இலக்கியத்தின் மேல் அவர்கள் இருவருக்கும் உள்ள பொதுவான அன்பு, ஒருவர் மற்றவரது கலாச்சாரத்தை மதிக்கும் குணம் ஆகியவை அவர்களின் உறவை மேலும் வலுவாக்கியது.
முத்துவின் சூழர்ச்சியான, கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மூலம், ஷுஜோ இந்தியாவின் மீது அளவற்ற பற்று கொண்டார். தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள், திருமணம் மற்றும் இறப்பின் போது செய்யப்படும் சடங்குகள் பற்றிய ஞானம், ஆகியவை முத்துவின் கடிதங்கள் மூலமாக அவருக்கு கிடைத்து. மேலும் அவரது கடிதங்கள் அவரை இந்தியா முழுவதும் ஒரு மறக்கமுடியாத பயணத்திற்கு அழைத்துச் சென்றது.
ஷுஜோ இந்த கடிதங்களை தொகுத்து, கடிதங்கள் மூலமாக பார்த்த என் இந்தியா ,என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டார்.ஷுஜோவிடம் இருந்து வந்த பதில் கடிதங்களும் ஜப்பானைப் பற்றிய பல கதைகளும் அதன் விழாக்கள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றி அமைந்திருந்தது.
அடுத்த இருபது ஆண்டுகளில், முத்து ஷுஜோவிற்கு தமிழின் பிரபலமான இலக்கியங்களான மணிமேகலை, நாலடியார், பஞ்சதந்திர கதைகள் மற்றும் வள்ளலாரின் குரல் போன்றவைகளை மொழிபெயர்க்க உதவினார்.
இதற்குப் பிரதியுபகாரமாக, ஷுஜோ ஜப்பானிய புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழில் மொழிபெயர்க்க முத்துவிற்கு அனுப்பினார். முத்துவின் படைப்புகள் செய்தித்தாள், பருவ இதழ் மற்றும் பதிப்பகம் வாயிலாக வெளியாயின.
5,956 கிலோமீட்டர் தாண்டியும், 30 ஆண்டுகால இணைபிரியாத நட்பு தத்தம் நாடுகளில் இலக்கிய பிரசங்கத்திற்கு பெரும் நன்கொடையாக அமைந்தது.
2007 ஆம் ஆண்டு,ஜப்பான் அரசு,ஜப்பானின் இலக்கியங்களுக்கு முத்து அளித்த நன்கொடைகளை நினைவு படுத்தும் விதமாக அவரின் புகைப்படத்தில் தபால் தலை வெளியிட்டது.
2012 ஆம் ஆண்டு முழுவதும் நடந்த நேர்காணலில் நண்பர்கள் இருவரும் இதுவரை வாழ்வில் ஒருமுறை சந்தித்தனர் என்ற உண்மையை கூறினார். மேலும் அவர்,"நாங்கள் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கின்றோம். நாங்கள் இனிமேலும் சந்திப்போம் என்ற எண்ணம் என்னிடம் இல்லை.என் மனைவி இறந்த பிறகு அவர் என்னை அழைத்தார். ஆனால் தற்போது, அவரால் சரியாக கேட்க முடியவில்லை மற்றும் என்னாலும் அவர் கூறியதை பின்பற்ற முடியவில்லை", எனக் கூறினார்.
முதுமை அவர்கள் இருவரையும் துரத்த ஆரம்பித்தாலும், அந்த இரு நண்பர்களும் தொடர்ந்து கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை.
2016 ஆம் ஆண்டு முத்து காலமானார். ஆனால் அதற்கு முன் நட்பும் இலக்கியமும் எல்லா கலாச்சார, மொழி எல்லைகளையும் கடந்து ஊடுருவும் என்று நிரூபித்தார்.