மணவாட்டியின் பற்கள்

Previous.....நீ ருபவதி

மணவாட்டியின் பற்கள்

உன் பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக்குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது", என்று மணவாளன் தன் மணவாட்டியின் பற்களைப்பற்றி புகழ்ந்து பாடுகிறார் (உன்னதப்பாட்டு 4:2). மணவாட்டியின் பற்கள் ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. இந்த ஆட்டுமந்தையில் ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக்குட்டியீன்றவைகளுமானது. அந்த ஆடுகள் மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளுமாக இருக்கிறது. மணவாட்டி பழுதில்லாத, ஆவிக்குரிய பற்கள் மூலம் தேவ வார்த்தைகளை உட்கொண்டு, தியானித்து தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டும். ".....அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து: மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது" (எசேக்கியேல் 3 :1-3).

Next...... மணவாட்டியின் உதடும் கன்னங்களும்