மணவாளனின் கால்கள், ரூபம்

Previous.....மணவாளனின் கரங்கள், அங்கம்

மணவாளனின் கால்கள், ரூபம்

"அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது", என்று தொடர்ந்து மணவாளி தன் தோழிகளிடம் மணவாளனின் மகத்துவ ஆள்தத்துவத்தை புகழ்ந்து பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 5:15). உயிர்த்தெழுதலின் மூலம் மகிமையடைந்த கிறிஸ்துவின் கால்கள் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது. "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்" (ரோமர் 16:20). கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கிறிஸ்து மகிமையடைந்தவுடன் அவரோடு கூட மகிமையடைந்துவிட்டது. கிறிஸ்து நமது கால்களின் கீழே சாத்தானை நசுக்குகிறார். நமது கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது.

கிறிஸ்துவின் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. லீபனோன் ஒரு உயர்ந்தமலை சிகரம்! கிறிஸ்து எல்லா தேவர்களைவிட உயர்ந்தவர். அவரின் நித்திய ராஜ்ஜியம் எல்லா உலக ராஜ்யங்களைவிட மிக உயர்ந்தது. ஏசாயா தீர்க்கனின் கண்களின் மூலம் ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பதைக் காண்போமாக! (ஏசாயா 6:1).

Next.....இவரே என் நேசர்

.