மணவாளனின் மாறாத நேசம்

Previous......மணவாளன் அணைத்து தேற்றுகிறார்

மணவாளனின் மாறாத நேசம்

"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்", என்று மணவாளன் அவரது மணவாட்டியின் மேல் வைத்திருக்கும் அன்பையும், அக்கறையையும் பற்றி அவளது தோழிகளை நோக்கி கூறுகிறார் (உன்னதப்பாட்டு 8:4).

உன்னதப்பாட்டு 2:7 ல், இதே வசனம் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாம் அதிகாரத்தில் மணவாளி பின் தங்கிய நிலையில் இருந்தாள். ஆனால் இந்த அதிகாரத்தில் அவள் பின்மாற்றத்திலிருந்து மனம்திரும்பி மணவாளனை பின்பற்றுகின்றாள். மணவாளனின் அன்பு எப்போதும் மாறாகவே இருக்கிறது.

"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்", என்று மணவாளன் அவரது மணவாட்டியின் மேல் வைத்திருக்கும் அன்பையும், அக்கறையையும் பற்றி அவளது தோழிகளை நோக்கி கூறுகிறார் (உன்னதப்பாட்டு 2:7). அவள், மணவாளனின் அன்பில் மூழ்கி ரசித்துக்கொண்டிருக்கும் மணவாளியை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி அவளது தோழிகளுக்கு கட்டளை இடுகிறார். அவளின் தோழிகள் இந்த நேசத்தை பெறவிடாமல் இடையில் நிற்கும்போது மணவாளன் அவர்களை இவ்விதம் வேண்டுகிறார்.

ஒரு தனிப்பட்ட தேவபிள்ளை தனது எசமானனான கிறிஸ்துவிடமிருந்து தனிப்பட்ட முறையில் நேசத்தை பெறுகிறார்.

ஏன் மணவாளன் "வெளிமான்களையும், வெளியின் மரைகளையும் அழைத்து ஆணையிடுகிறார்? இந்த மிருகங்கள் மென்மையான அடக்கமான குணங்களை உடையவைகள். பரிசுத்தாவியானவரும் இந்த நற்குணங்களை உடையவராகும். இங்கே ஒரு கவிதையின் நயத்தை காண்கிறோம். உன்னதப்பாட்டின் புத்தகமே ஒரு உன்னத கவிதை தான்.

Next......வனாந்தரத்திலிருந்து வருகிற மணவாளி