திரளான தண்ணீர்கள்

Previous....இருதய, புயத்தின் முத்திரைகள்

திரளான தண்ணீர்கள்

"திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்", என்று மணவாளி மணவாளனின் அளவில்லா நேசத்தை புகழ்ந்து பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 8:7).

கிறிஸ்துவின் மணவாட்டியே, நீ, வெள்ளம்போல் வரும் அநேக, சொல்லிலடங்கா துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். தேவன் உன்னை நியாயமாக தண்டிக்க இந்த வெள்ளத்தை அனுப்பியிருக்கலாம். இது ஒரு பெரிய இழப்பாக இருக்கலாம். இந்த உபத்திரவ குகையில், நீ அவருடைய பிரசன்னத்தை உணரலாம். "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது" (ஏசாயா 43:2). வேதத்தை திறக்கும்போதோ, ஜெபிக்கும்போதோ நீ அவருடைய மெல்லிய குரலை கேட்பாய். தேவபிள்ளைகள் உனக்கு ஆறுதலளிக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகளை கொடுப்பார்கள். தேவனுடைய அன்பை பல வழிகளில் பெறுவாய். திரளான தண்ணீர்கள் அவருடைய நேசத்தை அவிக்கமாட்டாது. உன் ஆஸ்திகளோ, பணமோ அல்லது இந்த உலகத்திலுள்ள எந்தவிதமான பொருளோ, அந்தஸ்தோ ஒரு எடையில் வைத்து தேவ நேசத்தோடு ஒப்பிட்டால், நேசத்திற்கு ஈடாகாது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோ 3:16). தேவன் தந்தருளின ஒரேபேறான குமாரனுக்கு ஈடாக நீ என்ன கைமாறு கொடுக்கமுடியும்?

Next.... சிறிய சகோதரி