மணவாளியின் தோட்டம்

Previous.....அடைக்கப்பட்ட தோட்டம்

மணவாளியின் தோட்டம்

"உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது.தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது", என்று மணவாளன் மணவாளியின் தோட்டத்தைக்குறித்து சாட்சி கொடுக்கிறார் (உன்னதப்பாட்டு 5:13-15).மணவாளிக்கு ஒரு தோட்டம் உண்டு. அந்த தோட்டத்தில் நீ தேவனுக்கு உடன்வேலையாளனாக இருக்கிறாய். பின்பு நீ தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறாய் (I கொரிந்தியர் 3:9. நீ தேவனுடைய தோட்டமாகயிருப்பதால் தேவன் தாமே இதன் மேல் அக்கறை கொள்வார்.

உன்னுடைய தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது. இந்தவிதமான நற்மணம் வீசும் அப்போஸ்தல, தீர்க்கதரிசன, சுவிசேட, தேவ வசனத்தைப் போதிக்கும் ஊழியர்கள் உண்டு. இவர்களுக்காக பரிந்துபேசி ஜெபிக்கவும், பொருளுதவி செய்யவும், தப்பான பாதைகளில் இந்த ஊழியர்கள்

செல்ல முற்படும்போது, எச்சரிப்பு செய்யவும் கடமைப்பட்டிருக்கிறாய். இன்று எச்சரிப்பு ஊழியம் செய்பவர் மிக சிலரே! இந்த ஊழியர்கள் எல்லோரும் உன் தோட்டத்திலுள்ள செடிகளே!

மாதளஞ்செடிகளை போல ஊழியர்கள் உன் தோட்டத்தில் உண்டு. மாதளம்பழம் ஒரு பழமையானதும் வெப்பமான பூமியிவ் வளரும் பழ வர்க்கத்தை சேர்ந்தது. இந்த பழத்திற்கு நோயைத் தடுக்கவும், குணமாக்கும் மருத்துவத் தன்மையும் உண்டு. ஆத்துமாவில் பாவத்தை நீக்கவும், சரீரத்தின் நோயை குணமாக்கும் அப்போஸ்தல, தீர்க்கதரிசன, சுவிசேடக ஊழியர்கள் உண்டு.

உனது தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது. தோட்டம் சிங்காரவனமாக மாற, இந்த விதமான செடிகளும், அருமையான கனிமரங்களும், சகலவித தூபவர்க்க மரங்களும், இந்த மரங்கள் உண்டாக்கும் நளதம், குங்குமம், வசம்பு, லவங்கம், போன்ற விசேஷித்த பொருட்கள் மிகவும் அவசியம். இந்த விதமான செடிகளும், மரங்களும் உலகில் அரிதாக காணப்படுகின்றன. இவைகளைப்போன்ற ஊழியர்களும் அரிதாகவே காணப்படுகின்றனர். இந்தவிதமான விசேஷித்த நறுமணம் வீசி நம்மை கிறிஸ்துவண்டை கொண்டுப்போய் சேர்க்கும் ஊழியர்கள் வெறுசிலரே.

இதுப்போன்ற ஊழியர்களை நாம் காண்கிறோமோ? கிறிஸ்துவை இந்த ஊழியர்களின் வாழ்க்கைகளில் காணலாம். இவர்கள் வெறும் மேடை பிரசங்கிமார்கள் அல்ல. இவர்கள் வெறும் அற்புதத்திற்காகவும், தெய்வீக சுகத்திற்காகவும் ஜெபிக்கிற ஊழியர்கள் அல்ல. இவர்கள் கூட்டத்தை விரும்புகிறவர்கள் அல்ல. பணத்தை வைத்து உலகம் சுற்றி வலம் வந்து கூட்டங்கள் நடத்தும் ஊழியர்கள் அல்ல. இவர்கள் நற்மணம் அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து உலகமெங்கும் பரவும். அவர்களின் வாழ்கை கிறிஸ்துவின் வாழ்க்கையை கண்ணாடிபோல பிரதிபலிக்கும்.

கீழே எழுதப்பட்டிருக்கும் செடிகள், பூக்கள், வேர் போன்றவைகள் தேவன் நமக்கு பல்வேறு விதங்களில் தரும் பரிசுத்தாவியானவரின் தூய வரங்கள். நமக்கு ஆவிக்குரிய வாழ்க்கையின் பக்தி விருத்திக்கும், பூரணம் அடைவதற்கும் பலவித வரங்கள் உண்டு. பின்பு சரீர சுகங்களுக்காக அநேக வரங்கள் உண்டு. சரீர சுகம் பெற வெறும் சுகமளிக்கும் வரத்தைப் பெற்ற போதகர்களை மாத்திரம் அல்ல, ஆண்டவர் மருத்துவர்களையும் உபயோகிக்கிறார். விஞ்ஞானிகள் அநேக மருந்துகளைக் கண்டுப் பிடித்திருக்கிறார்கள். பெரும்பாலான மருந்துக்கள் கீழே கூறப்படும் செடிகளிலிருந்தும், பூக்களிலிருந்தும், வேர்களிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.

மருத்துவ மனைகளில் சேவை செய்யும் மருத்துவர்களுக்காவும், மருந்துக்களை கண்டுப்பிடிக்கும் விஞ்ஞானிகளுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும்.

மாதளம்பழம் இருதய நோயை குணப்படுத்துகிறது.

மருதாணி பூக்கள் ( henna/camphire) அழகுப்பொருட்களாக மட்டும் அல்ல சரீர ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இலாமிச்சை (spikenard) ஒருவகை மணமுள்ள வேர். பழங்காலந்தொட்டே மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தரையடித் தண்டும், வேரும் முக்கிய பயன்கொண்டவை, கிருமி நாசினி, நறுமணங்கொண்டது, சிறுநீரைத் தூண்டும் போன்ற தன்மைகள் உடையது. சிறுநீர் வியாதிகளைக் குணப்படுத்துகிறது (urinary diseases).

இறக்கைக்கீழ்த்தண்டு (calamus) மருத்துவத்திற்கு உதவுகிறது வயிற்று நோய்களிலிருந்து விடுதலை கொடுக்கிறது. இலவங்க பட்டை (cinnamon) அதிக அளவில் மருத்துவ உலகில் உபயோகப்படுகிறது. குங்குமப்பூ தூள் (saffron powder) புற்று நோயிலிருந்து சுகம்பெற உதவுகிறது. கலமஸ் ஆலை (calamus plant) நீரில் வளருகிறது. ஒருவகை செடி இது, மருத்துவத்தில் நல்ல முறையில் உபயோகப்படுகிறது. கண்ணீரினால் செய்யும் ஊழியங்கள் நமக்கு சரீரத்தில் சுகம் கொண்டுவருகிறது. கிறிஸ்துவின் நற்மணம் இந்த ஊழியர்களின் மூலம் எங்கும் பரவுகிறது.

சந்தனம் (aloes) ஒரு சுத்திகரிக்கும் மருந்தாக உதவுகிறது. தீர்க்கதரிசன ஊழியங்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை கள்ள தத்துவங்களிலிருந்து நீக்கி சுத்திகரிக்கிறது.

இந்த தோட்டங்களை நமது கண்களின் நீரூற்றால் பராமரிக்கவேண்டும். நமது ஆவிக்குரிய வாழ்க்கைகளிலிருந்து எப்பொதும் கிறிஸ்துவின் ஜீவ தண்ணீர் சுரந்துக்கொண்டே இருக்கவேண்டும். எப்பொது நாம் பாவம் செய்வோமோ அப்போதே இந்த ஜீவ தண்ணீர் வற்றிவிடும். நமக்கும், நமது தோட்டங்களிலுள்ள மரங்களுக்கும், செடிகளுக்கும் இடையே உள்ள உறவு அறுந்துவிடும். ஆவியானவர்தாமே நமது தோட்டங்களிலுள்ள மரங்களையும், செடிகளையும் அகற்றிவிடுவார். நமது தோட்டங்கள் வெறுமனே காணப்படும்.

Next.....நேசர் கனிகளைப் புசிப்பது