ராஜ குமாரத்தியின் பாதங்கள்

Previous.....திரும்பிவா

ராஜகுமாரத்தியின் பாதங்கள்

"ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது", என்று சூலமித்தியாளின் தோழிகள் மணவாளியின் கவர்ந்திழுக்கும் ஆளுமையை புகழ்கிறார்கள் (உன்னதப்பாட்டு 7:11). தோழிகள் அவளை ராஜகுமாரத்தியே என்று அழைக்கின்றனர். மணவாளியே, உன்னைச்சுற்றிலுமுள்ள உண்மையாக கிறிஸ்துவை தேடும் தேவப்பிள்ளைகள் உனது விசேஷித்த ஆளுமையை கண்டு புகழ்வார்கள். நீ பண செல்வாக்கு இல்லாமலிருந்தாலும், உன்னை ராஜகுமாரத்தியே என்று அழைப்பார்கள். உனது பாதங்களை இவ்விதம் புகழ்வார்கள். "சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய்" அறிவிக்கிற உன் பாதங்கள் "மலைகளின்" மேல் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே (ரோ. 10:15). (ஏசா 52:7). உன் ஊழியத்தின் மூலமாகத்தான் உண்மையான, கலப்படம் இல்லாத சுவிசேஷம் பிரசிங்கப்படும். ஒரு மனிதன் பண்ணிய மேடையிலிருந்து நீ இந்த மகிமையான சுவிசேஷத்தை அறிவிக்கமாட்டாய்! உனக்கென்று உன் நேசர் ஒரு பாதரட்சைகளை உண்டுபண்ணிக்கொடுப்பார்! இந்த பாதரட்சைகள் இல்லாமல் உன் பாதங்கள் அழகாக இருக்காது! இந்த பாதரட்சைகளை உனக்கு வாங்கிக்கொடுப்பது செல்வந்தர்கள் அல்ல! நன்கொடைகளோ (Donations), பழையஏற்பாட்டின் தசமபாகமோ (tithes) அல்ல! இன்று எல்லா மேடை ஊழியங்களும் கெட்டுப்போய்விட்டது. இந்த கெட்டுப்போன ஊழியங்களின் மூலம் எழுப்புதல் வரவே வராது. அநேக ஊழியர்களின் பாதரட்சைகள் பணத்தால் செய்யப்பட்டவைகள். தேவ வார்த்தைகளைத் திரித்து பணம் வசூலித்து, பெரிய கட்டிடங்களை கட்டி, மேடைகளை அமைந்து, வெறும் செய்திகளைக் கொடுத்து, பரலோகத்திலிருந்து, வேல்ஸ் (wales) நாட்டின் நடந்த எழுப்புதலை இந்தியாவில் கண்டிப்பாக கொண்டுவர முடியாது! கிறிஸ்துவை உண்மையாக நேசிக்கும் மக்கள், நீ வாய்திறந்து கேட்காமலே, உனக்காக ஜெபத்தில் தாங்கவும், பண உதவி செய்யவும் முன் வருவார்கள்.

"ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது", என்று சூலமித்தியாளின் தோழிகள் மணவாளியின் கவர்ந்திழுக்கும் ஆளுமையை புகழ்கிறார்கள் (உன்னதப்பாட்டு 7:11).

இடுப்பின் வடிவு ஒரு பெண்ணின் சரீரத்திற்கு அழகைக் கொடுக்கிறது. நீதியும் பாரிசுத்தமும் உள்ள வாழ்க்கையை வாழும் ஒவ்வொரு கிறிஸ்துவின் சீடனும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம் போன்ற அழகைக் கொடுக்கிறது. ஒரு கிறிஸ்துவின் ஊழியரின் தனிப்படட வாழ்க்கையை உலக மக்கள் காண்கிறார்கள். இவர்களது தனிப்படட வாழ்க்கைகளை வைத்துத்தான் உலக மக்கள் கிறிஸ்துவை நியாயப்படுத்துகிறார்கள்.

கிறிஸ்துவின் மணவாட்டியின் இடுப்பின் வடிவு மணவாளனாகிய கிறிஸ்துவுக்கு மகிமை கொண்டுவருகிறது. மணவாட்டியின் வாழ்க்கையே வித்தியாசமாக இருக்கவேண்டும். மணவாளியின் தோழிகள், அவளின் இடுப்பின் வடிவை புகழ்ந்து பாடுகிறார்கள்.

Next..... மணவாளியின் நாபி, வயிறு