மணவாளியின் உதடும், நாவும், ஆடைகளும்

Previous.....மணவாளியின் நேசம்

மணவாளியின் உதடும், நாவும், ஆடைகளும்

"என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது" (உன்னதப்பாட்டு 4:11). மணவாளியே, உன் உதடுகளிலிருந்து வரும் இனிய வார்த்தைகள் அன்பான வார்த்தைகளையும், ஆறுதலையும் அளிக்க வேண்டும். உன் உதடுகளை தேன் கூட்டோடு ஒப்பிடுகிறார் யாராவது துன்பம் அல்லது நோயில் அனுபவிக்கும்போது அவர்களைப் பயப்படுத்தாமல், ஆண்டவரின் ஜீவனுள்ள வார்த்தைகளைக் கூறவேண்டும். நீ "சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப்" போதிக்கிறவனாக இருக்கவேண்டும் (II தீமோத்தேயு 2:15). ஆண்டவரின் வார்த்தைகளை திரித்து வளைத்து ஒடித்து பேசும் இந்த காலத்தில் நீ சத்திய வசனத்தை வாயின் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கவேண்டும். "உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது". பாலானது பெலனில்லாதவர்களான புதிய விசுவாசிகளுக்கு பலன் கொடுக்கிறது. (1 கொ 3:2). ஆவியில் வளரும்படி, புதிய விசுவாசிகளுக்கு அடிப்படை சத்தியங்களைப் போதிக்கவேண்டும் (1 பேது 2:3). "கர்த்தருடைய நியாயங்கள் உண்மை" சம்பந்தமான வார்த்தைகளை தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கும்படி போதிக்கவேண்டும் (சங் 19:8-10). கர்த்தருடைய நியாயங்கள் உண்மையை விளக்கும் சத்தியங்களை தைரியமாக போதிக்கவேண்டும். வெறும் ஆசிர்வதிக்கும் கர்த்தர் என்று மாத்திரம் போதிக்கவேண்டாம். உன் வஸ்திரங்களின் வாசனையைக் குறித்து மணவாளன் லீபனோனின் வாசனைக்கு ஒப்பிடுகிறார். உன் வஸ்திரங்களின் வாசனையைக் குறித்து மணவாளன் லீபனோனின் வாசனைக்கு ஒப்பிடுகிறார். தேவன் உனக்கு கிறிஸ்துவின் நீதியின் ஆடையை அணிவித்திருக்கிறார். லீபனோனிலிருந்து சாலமோனின் ஆலயம் கட்டுவதற்கு மரங்களும், கற்களும் கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் வாசனையை வீசுகின்றன. உன் ஆடைகள் கிறிஸ்துவின் நீதியை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலம் உனக்கு இந்த நீதி கிடைத்தது. சாத்தானாலோ, வேறு எந்த மனிதனோ இந்த ஆடையை கறைப்படுத்த முடியாது. ஆனால் நீ பாவத்தால் இதை கறைபடுத்தலாம்.

Next.....அடைக்கப்பட்ட தோட்டம்