நேசர் எங்கே போனார்

Previous....இவரே என் நேசர்

நேசர் எங்கே போனார்

மணவாளனின் மகத்துவமான ஆள்தத்துவத்தை மணவாளியின் சாட்சியின் மூலம் கேட்ட தோழியர்கள், "உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்", என்று சொல்கிறார்கள் (உன்னதப்பாட்டு 6:1). மணவாட்டியே, நீ உன் நேசரின் முழு ஆள்தத்துவத்தை அறிந்து அவரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து புகழ்ந்து துதிக்கும்போது.இயேசுவை பற்றி அரைகுறையாக அறிந்த மற்ற தேவ பிள்ளைகள் உன்னோடு சேர்ந்து முழுமையாக வேதத்தில் வெளிப்பட்ட இயேசுவை நீ அறிந்த வண்ணம் அவரை அறிய விரும்புகிறார்கள். இந்த தேவ பிள்ளைகள் தங்களின் போதகர்கள், சுவிசேடர்கள் மூலமாக கிறிஸ்துவை பற்றி அரைகுறையாக அறிந்திருக்கிறார்கள். இயேசுவை பாவத்திலிருந்து இரட்சிப்பவர், சரீர சுகம் அளிப்பவர், அற்புதங்கள் செய்பவர் என்று மாத்திரம் அறிந்திருக்கிறார்கள். இந்த தேவ பிள்ளைகள் தங்கள் இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பாமல், வெறுமனே விசுவாசிகள் என்று அழைக்கப்படுவதை விரும்புகினர். இவர்கள் எப்போதும் மேடைகளிலிருந்து வரும் செய்திகளை வெறுமனே கேட்கும் விசுவாசிகள் தான்! எந்த விதமான தேவ பணிகளிலும் அமர்த்தப்படாமல் தலைகளை ஆட்டும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள்!

உன்னதப்பாட்டின் மணவாளிக்கோ, எல்லாமே அவள் நேசர்தான். கிறிஸ்துவே எல்லாம்! அவளுடைய ஒவ்வொரு பொருளும் அவளது நேசரே! ஆண்டவர், இரட்சகர், மணவாளன், நண்பன், பிதா, தாய், சகோதரன், எல்லாமே அவர்தான்! அவளுடைய ஒவ்வொரு பொருளும் அவளது நேசரே! அவள் மூச்சே அவர்தான்! வெறும் இரட்சகர், சுகம் அளிப்பவர் என்று மாத்திரம் அல்ல!

Next...... தோட்டங்களில் மேயும் நேசர்