அம்மினதாபின் இரதங்கள்

Previous.... மணவாளி வாதுமைத் தோட்டத்தில்

அம்மினதாபின் இரதங்கள்

"நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று", என்று மணவாட்டி தன்னைப்பற்றி தோழிகளிடம் மேலும் கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 6:12).அம்மினதாப் என்றால் புத்திசாலிகள் என்ற அர்த்தமாம். சுலேமேத்தியாளின் சொந்த மக்கள் புத்திசாலிகள்! அவர்களின் இரதங்கள் துரிதமாக பறக்கும். மணவாட்டியே உன்னைச்சுற்றிலும் ஒரு தேவதூத சேனையே எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. இந்த இரதங்கள் தேவனின் தெரிந்தெடுக்கப்படட மக்களுக்காக பணிவிடை செய்வதற்காக தயாராகவே இருக்கின்றது. மணவாட்டியே, உனக்கு அந்நிய பாஷை வரம் இருக்குமானால், சில சமயங்களில், நீ உனக்கு அறியாத பாஷையில் பரிசுத்தாவியானவரால் உந்தப்பட்டு ஜெபிக்க வழி நடத்தப்படுவாய். இந்த ஜெப விண்ணப்பம் நீ அறியாத ஒரு உயிருக்காக போராடும் தேவ பிள்ளைக்காக இருக்கலாம். அல்லது சுவிசேஷத்திற்காக சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு தேவ ஊழியனுக்காக இருக்கலாம். இந்த ஜெபம் பண்ணினபின்பு நீ தேவனின் உதவியோடு இந்த ஜெபத்தின் அர்த்தத்தையும் அறிந்துக்கொள்ளலாம். (I கொரிந்தியர் 14:13,14).

உனக்கு அந்நிய பாஷை வரம் இல்லாவிட்டாலும், பரிசுத்தாவியானவரால் உந்தப்பட்டு மற்ற துன்பம் அனுபவிக்கும் தேவ பிள்ளைகளுக்கவோ அல்லது தங்களின் சொந்த காரியங்களுக்கவோ நீ ஜெபிக்கக்கூடும். இந்த ஜெபவிண்ணப்பங்களை சுமர்ந்து பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல அநேக அம்மினதாபின் இரதங்கள் உனக்கு அருகிலே இருக்கின்றது.

Next..... திரும்பிவா