மணவாளியின் பற்கள்

Previous.....மணவாளியின் மயக்கும் கண்கள்

மணவாளியின் பற்கள்

"உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும் ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது", என்று மணவாளன் தன் மணவாளியின் பற்களை புகழ்ந்து பாடுகிறார் (உன்னதப்பாட்டு 6:6).

பற்கள் ஆகாரம் உண்பதற்கு உதவுகிறது. அதேபோல நமது மனதின் மூலம் தேவ வசனத்தை தியானித்து நமது ஆத்துமாவில் உட்க்கொள்ளவேண்டும். "அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.....இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.....நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.....நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு" (எசேக்கியேல் 3:1-4).

மணவாளியே உனது அழகான பற்கள் மூலம் தீர்க்கதரிசன வார்த்தைகளை தியானித்து உன் மனதை நிரப்புவாயாக. பின்பு இந்த வார்த்தைகளுக்கு விரோதமாக செயல்படும் தேவ மக்களை எச்சரிக்கவேண்டும். இது தான் உனக்கு கிறிஸ்துவின் சபைகளில் பரிசுத்தாவியானவர் கொடுக்கும் பணி!

குளித்து கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப் போல கிறிஸ்துவின் ஆட்டுமந்தை விளங்கவேண்டும். இந்த பொறுப்பு சபை போதகர்களிடம் காணப்படவேண்டும். மணவாளியான நீ இஸ்ரவேல் மேய்ப்பர்களுக்கு தேவனின் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசுவாயாக.

Next..... மணவாளியின் கன்னங்கள்