இவரே என் நேசர்

Previous.....மணவாளனின் கால்கள், ரூபம்

இவரே என் நேசர்

"அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்", என்று தொடர்ந்து மணவாளி தன் தோழிகளிடம் மணவாளனின் வாயையும், அழகையையும் புகழ்ந்து மணவாளி தன் தோழிகளிடம் கூறுகிறாள். (உன்னதப்பாட்டு 5:16).

அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது. ஏனென்றால் அவரின் வாயின் வார்த்தைகளை நீங்கள் இந்த புத்தகத்தின் மூலம் கேட்கும்போது மதுரமாயிருக்கிறது. அவர் முற்றிலும் அழகுள்ளவர். நீங்கள் சூலேமத்தேயாளொடு சேர்ந்து, "இவரே என் நேசர், இவரே என் சிநேகிதர்", என்று கூறுவீர்களா!

இயேசுவின் அழகை நாம் ஒரு ஓவியத்தின் மூலம் விவரிக்கமுடியாது. ஆகவே நான் அவரின் படத்தை இங்கே காண்பிக்கவில்லை. இவர்தான் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும், சுவிசேஷத்திலும், அப்போஸ்தலர் நடபடிக்கையிலும், நிரூபங்களிலும், வெளிப்படுத்தலின் விசேஷத்திலும் வெளிப்படுத்தப்பட்டவர். இவர் முற்றிலும் அழகுள்ளவர். கிறிஸ்தவ உலகத்தில் கள்ள பிரசங்கியார்கள் வெளிப்படுத்தும் கிறிஸ்துவிலிருந்து வேறுபட்டவர். இஸ்லாமியர்கள் பிரசிங்கிக்கும் இயேசு இவர் அல்ல. இவர் உனது நேசர் மாத்திரம் அல்ல. இவர் ஒரு உண்மையான நண்பனும் கூட. நண்பனைப்போல பேசுகிறார்.

Next.....நேசர் எங்கே போனார்