மணவாளனின் கரங்கள், அங்கம்

Previous.....மணவாளனின் கன்னங்கள், உதடுகள்

மணவாளனின் கரங்கள், அங்கம்

"அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது", என்று தொடர்ந்து மணவாளி தன் தோழிகளிடம் மணவாளனின் மகத்துவ ஆள்தத்துவத்தை புகழ்ந்து பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 5:14).சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது. கரங்கள், கனத்த சிலுவை மரத்தை இழுத்து சிவந்துவிட்டது. இரத்தம் தோய்ந்த கரங்கள் பார்ப்பதற்கு படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் தோன்றுகிறது.

அவரின் சிலுவையில் அறையப்பட்ட அங்கம் சிவந்து இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவரின் சிலுவையில் அறையப்பட்ட அங்கத்திலிருந்து நமக்கு பாவமன்னிப்பு, பரிசுத்தாவியானவரின் அபிஷேகம் போன்ற ஆசிர்வாதங்கள் கிடைக்கின்றன. மரணத்திற்குப்பின் யானைத் தந்தங்கள் மனித குலத்திற்கு உதவுகிறது. யானைக்கு உயிரோடு இருக்கும்போது பாதுகாப்பு கொடுப்பது அதன் தந்தங்கள்! இயேசுவின் சரீரம் சிலுவை மரணத்திற்குப்பின் மரணத்தை வென்று உயிர்த்தெழுதலின் மூலம் மகிமையடைந்து, பலனடைந்து நமக்கு யானைத் தந்தத்தைப்போல நமக்கு உதவுகிறது.

Next..... மணவாளனின் கால்கள், ரூபம்