மணவாளனின் திராட்சத்தோட்டம்

Previous.....மணவாளி ஒரு மதில்

மணவாளனின் திராட்சத்தோட்டம்

"பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்", என்று சூலமேத்தியாள் சாலொமோனின் திராட்சத்தோட்டத்தை பற்றி தோழிகளிடம் கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 8:11).பாவிகள் இரட்சிக்கும்படி,மெய்யான திராட்சச்செடியானா இயேசு கிறிஸ்து கல்வாரியில் மரித்து ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டு பண்ணினார். அவரின் ரத்தத் துளிகள் திராட்சரசம் போல தன் சரீரத்திலிருந்து விழுந்து, இந்த இடத்தில் விதை விதைத்து ஒரு திராட்சத்தோட்டத்தை உருவாக்கியது. இந்த தோட்டத்தை கிறிஸ்து தன் தோட்டத்தின் காவலாளிகள் வசத்திலே கொடுத்து ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி கட்டளையிட்டார். ஆத்துமாக்களின் இரட்சிப்பு தான் இந்த தோட்டத்தின் பலன் ஆகும். ஒவ்வொரு சீடனும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்து இந்த பலனை தோட்டக்காரருக்கு கொண்டுவரவேண்டும். ஒரு ஆத்துமாவின் விலையை மதிப்பிடமுடியாது. ஆயிரம் வெள்ளிக்காசு என்பது ஒரு ஆத்துமாவின் பலன். ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படும்போது தேவ ராஜ்ஜியத்திற்கு ஆயிரம் வெள்ளிக்காசு கிடைக்கிறது. இது ஒரு உலகரீதியான பணமோ, டாலரோ அல்ல. ஒரு பாவியின் மனம்திரும்பதிலினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாக்குகிறது.

Next..... மணவாளியின் திராட்சத்தோட்டம்