நேசர் கனிகளைப் புசிப்பது

Previous......மணவாளியின் தோட்டம்

நேசர் கனிகளைப் புசிப்பது

"வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக". என்று மணவாளன் காற்றை நோக்கி ஆணையிடுகிறார் . (உன்னதப்பாட்டு 4:16).பரிசுத்தாவியானவர் காற்றைப்போல செயல்படுகிறார் (யோவான் 3:8). பரிசுத்தாவியானவர் மணவாளனின் தோட்டத்தில் மேல் அசைவாடுகிறார். ஆவர் காற்றாக வீசி தோட்டத்திலுள்ள கந்தப்பிசின்களை வடிய செய்கிறார். மணவாளியே, பரிசுத்தாவியானவர் உனது தோட்டத்திலுள்ள பலவிதமான ஊழியர்களுக்கு, உனது ஜெபத்தாலும், தொண்டாலும், கிறிஸ்துவின் நற்மணத்தை எங்கும் பரவ செய்கிறார். உன் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிக்க வருவார். உன் தோட்டத்தில் நாட்டப்பட்டிருக்கும் ஊழியர்கள் மணவாளன் விரும்பும் கனிகளை கொடுக்கவேண்டும். இன்று நீ ஒரு பிரபல ஊழியருக்காக ஜெபித்து, பண உதவி செய்யக்கூடும். ஆனால் இந்த ஊழியர் மணவாளன் விரும்பும் கனிகளை கொடுக்காவிட்டால், தோட்டத்தின் சொந்தக்காரர் இந்த மரத்தின் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (யோவான் 15:2). "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்" (யோவான் 15:8).

பின்பு நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போட்டுவிடுவார் (மத்தேயு 7:19).

"எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி உன் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு. என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று" (யோவேல் 1:4-7). இந்த கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆவி உனது அருமையான தோட்டத்தில் பிரவேசித்து திராட்சச்செடியை அழித்து, அத்திமரத்தை உரித்து அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது. திராட்சச்செடி போன்ற ஊழியர்கள் இன்று காட்டுச் செடியாக மாறிவிட்டார்கள். சத்துருவானவன் அவர்களின் ஊழிய

ங்களை அழித்து அவர்களின் இடங்களில் காட்டுச் செடிகளை நீங்கள் அறியாத சமயம் நட்டிவிட்டு போய்விட்டான். அத்திமரம் போன்ற வல்லமையான ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்டு தங்கள் பட்டைகளை உரிக்க இடம் கொடுத்து வாடிப்போய் நின்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்திக்கிறிஸ்துவின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள்! யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறி வருகிறது.

உன் நேசர் எப்படி தன் கனிகளை இந்த திராட்சச்செடிகளிலிருந்தும், இந்த அத்திமரங்களிலிருந்தும் புசிப்பார்? உன் தோட்டத்தை மணவாளனோடு சேர்ந்து இருந்து உரம் போட்டு, களைகளை எடுத்து பராமரிப்பு செய்யவேண்டும். வெட்டப்பட்ட மரங்களின் வேர்களை முற்றிலும் களைந்து எடுத்து, புதிய நாற்றுக்களை நடுவதற்கு மணவாளனிற்கு உதவி செய்யவேண்டும்.

Next......மணவாளன் தோட்டத்தில்