#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
இப்படம் கடந்த 1983-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் டி.ராஜேந்தர் உடன் சரிதா, நளினி, ராதா ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இதில் செயின் ஜெயபாலாக டிஆர் நடித்திருந்தார். இப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி, அதற்கு இசையமைத்ததும் டி.ராஜேந்தர் தான். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன........
உயிருள்ளவரை உஷா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை, டி.ராஜேந்தர் தன்னுடைய மனைவியை பிரிந்த வேதனையோடு எழுதி இருக்கிறார். அப்படம் உருவான சமயத்தில் தான் டி.ராஜேந்தருக்கு கல்யாணம் ஆகி இருந்தது. அவர் தன்னுடைய காதலியான உஷாவையே திருமணம் செய்துகொண்டார். கல்யாணம் ஆன புதிதில் அவருடைய மனைவி உஷா, அவரைப் பிரிந்து சில நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தாராம். அவர் பிரிந்து சென்ற சோகத்தில் டி.ராஜேந்தர் சில வரிகளை எழுதி இருக்கிறார். கங்கைக் கரை காத்தே நில்லு, மங்கை தனை பார்த்தால் சொல்லு என எழுதி இருக்கிறார்........
மனைவிக்காக எழுதிய இந்த பாடலை படத்தில் வைக்க வேண்டும் என சொன்னதால், அதில் கங்கை கரை என எழுதியதை வைகை கரை என மாற்றி அந்தப் பாடலை கே.ஜே.யேசுதாஸை பாட வைத்தாராம் டி.ராஜேந்தர். அவரின் குரல் அப்பாடலுக்கு மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது. மனைவிக்காக டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணி எழுதிய அந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளதற்கு அவர் எழுதிய உணர்வுப்பூர்வமான வரிகளும் ஒரு காரணம். இந்த கதையை சமீபத்திய பேட்டியில் டி.ராஜேந்தர் கூறி இருந்தார்இப்படம் கடந்த 1983-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் டி.ராஜேந்தர் உடன் சரிதா, நளினி, ராதா ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இதில் செயின் ஜெயபாலாக டிஆர் நடித்திருந்தார். இப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி, அதற்கு இசையமைத்ததும் டி.ராஜேந்தர் தான். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன........
உயிருள்ளவரை உஷா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை, டி.ராஜேந்தர் தன்னுடைய மனைவியை பிரிந்த வேதனையோடு எழுதி இருக்கிறார். அப்படம் உருவான சமயத்தில் தான் டி.ராஜேந்தருக்கு கல்யாணம் ஆகி இருந்தது. அவர் தன்னுடைய காதலியான உஷாவையே திருமணம் செய்துகொண்டார். கல்யாணம் ஆன புதிதில் அவருடைய மனைவி உஷா, அவரைப் பிரிந்து சில நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தாராம். அவர் பிரிந்து சென்ற சோகத்தில் டி.ராஜேந்தர் சில வரிகளை எழுதி இருக்கிறார். கங்கைக் கரை காத்தே நில்லு, மங்கை தனை பார்த்தால் சொல்லு என எழுதி இருக்கிறார்........
மனைவிக்காக எழுதிய இந்த பாடலை படத்தில் வைக்க வேண்டும் என சொன்னதால், அதில் கங்கை கரை என எழுதியதை வைகை கரை என மாற்றி அந்தப் பாடலை கே.ஜே.யேசுதாஸை பாட வைத்தாராம் டி.ராஜேந்தர். அவரின் குரல் அப்பாடலுக்கு மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது. மனைவிக்காக டி.ராஜேந்தர் ஃபீல் பண்ணி எழுதிய அந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளதற்கு அவர் எழுதிய உணர்வுப்பூர்வமான வரிகளும் ஒரு காரணம். இந்த கதையை சமீபத்திய பேட்டியில் டி.ராஜேந்தர் கூறி இருந்தார்