ஒரு நொடி - திரை விமர்சனம் - 4/5

“ஒரு நொடி” படம் இன்று (ஏப்ரல் 26) தியேட்டரில் வெளியாகியுள்ளது. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா என பலரும் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை மிக அதிகம் கவர்ந்த நிலையில், “ஒரு நொடி” படத்தின் விமர்சனத்தை காணலாம்.

ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்ற அடிப்படை தத்துவத்தை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்காக கடன் வாங்கி அதற்கு பதிலாக வேல ராமமூர்த்தியிடம் தன்னுடைய நிலத்தை அடமானம் வைக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். குறித்த காலத்திற்குள் பணத்தை தயார் செய்து அவர் திரும்ப கொடுக்கப் போகும் நேரத்தில் காணாமல் போகிறார். இதுதொடர்பாக எம்.எஸ். பாஸ்கர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த வழக்கை இன்ஸ்பெக்டரான தமன்குமார் விசாரிக்கும் நிலையில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.


இந்த இரண்டு சம்பவங்களிலும் தமன்குமார் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க, அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. உண்மையில் இரண்டு சம்பவங்களிலும் நடந்தது என்ன?  என்பதை தொடக்கம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்ல முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.


படம் முழுக்க தமன் குமாரின் போலீஸ் விசாரணையில் பயணிக்கும் நிலையில் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் குரல் நடிகர் அர்ஜூனை நியாகப்படுத்துவதோடு, மேனரிசங்கள் பல ஹீரோக்களின் போலீஸ் கேரக்டரை நினைவூட்டுகிறது. மேலும் வேல ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர், எம் எஸ் பாஸ்கர், டீக்கடைக்காரர், சலூன் கடைக்காரராக நடித்தவர்கள் என அத்தனை கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளார்கள். 

TwitterFacebookInstagramLinkLinkLink