வசியம் நிறைந்த பூமி (Inchanted Ground)

Home

முந்திய பகுதி ...... மூன்று கொள்ளையர்களுடன் சத்தியத்திற்கான யுத்தம்

வசியம் நிறைந்த பூமி (Inchanted Ground)

பின்பு, பயணிகள் வசியம் நிறைந்த பூமியை வந்தடைகிறார்கள். இந்த பூமியின் காற்று தூங்கிவிழ வைப்பதற்கு ஏதுவாகவும், முட்செடியும் நெரிஞ்சிலும் நிறைந்ததாகவும் இருந்தது. இங்கே ஒரு வசியம் நிறைந்த இளைப்பாறும் ஸ்தலம் (Arbor) இருக்கிறதாம். இதில் ஓய்வு எடுத்தாலோ, உறங்கியாலோ, உயிரோடு இந்த உலகத்தில் எழும்பமாட்டோமாம். இந்தக் காட்டில் முதலாவது பாதுகாப்பிற்காக கிரேட் ஹார்ட் முன்செல்கிறார், அவருக்குப்பின் சத்தியத்திற்கான தைரியம் (Valiant For Truth) செல்கிறார். அவர்களுக்குப்பின் மற்ற எல்லோரும் தொடர்ந்து செல்கிறார்கள். கிரேட் ஹார்ட் தன் கண்ணை பலவீன மனது (Feeble Mind) மேலும், Valiant For Truth தன் கண்ணை "மனச்சோர்வு" (Despondency) என்ற பயணியின் மேலும் வைத்துக்கொள்கிறார்கள். Feeble Mind ஐ தன்பின்னால் வரும்படி கிரேட் ஹார்ட் கட்டளையிடுகிறார். பயங்கர பிசாசு மூலமாகவோ வேறு இந்த வழியிலோ ஆபத்து வராமலிருக்க, எல்லோரும் பட்டயங்களை ஏந்தி, விழிப்போடும் ஜெபத்துடனும், ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லி நடந்து செல்கிறார்கள்.

சற்று தூரம் போனவுடன், ஒரு மேகமூட்டமும் இருளும் அவர்களை மூட, அவர்கள் பயந்து நடந்தனர். ஒன்றையும் காணமுடியாமல் அவர்கள் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடந்தனர். ஒவ்வொருவருடன் குரலை மாத்திரம் கேட்கமுடிந்தது. பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும், தங்களின் பாதங்களும் உள்ளங்களும் மென்மையாக இருப்பதால், மூத்தவர்கள் அவர்கள் மேல் அக்கறை செலுத்தினர். பாதைகள் அழுக்காலும், சகதியாலும் நிறைந்து இருந்தன. ஒருவர் செடி மீது மோதினால் அடுத்தவரின் கால்களோ சேற்றில் சிக்கிக்கொள்கிறது. பிள்ளைகளோ தங்கள் பாதணிகளை சகதியில் விட்டுவிட்டனர்.

வழியில் ஒரு அழகான ஊஞ்சல், நாற்காலிகள், கட்டில்கள் உள்ள ஒரு பசுமை மிக்க இளைப்பாறும் ஸ்தலத்தை (Arbor) கண்டவுடன் அவர்களுக்கு அங்கே இளைப்பாறலாம் என்ற சோதனை வந்தது. இந்த இளைப்பாறும் ஸ்தலத்தின் பெயர் சோம்பேரியின் நண்பன் (Slothful’s Friend) என்பதாகும்.

இந்த இளைப்பாறும் ஸ்தலத்தை, கடந்து போகும்போது, வழிகாட்டி தன் தீப்பெட்டியை எடுத்து ஒரு விளக்கை கொளுத்தி வரைபடத்தை பார்க்க அதில் "கவனமாகஇருக்கவேண்டும்" என்று எழுதி, வலது பக்கமாக போக வழி காண்பித்தது.

இந்த இளைப்பாறும் ஸ்தலத்தை, கடந்து போகும்போது, இந்த வசியம் நிறைந்த பூமியில் இனியொரு இளைப்பாறும் ஸ்தலத்தைக் கண்டார்கள். அதில் இரண்டு உறங்கிக்கொண்டிருக்கும் பயணிகளை கண்டனர். அவர்களை கிரேட் ஹார்ட் எழுப்ப முயற்சி செய்தார். கிரேட் ஹார்ட் அவர்களை முன்னமே அறிந்திருந்தார். அவர்களின் பெயர்கள் Heedless (செவிகொடுக்காதவன்),Too Bold (அளவுக்கு மிஞ்சிய தைரியம்) என்பதாகும். அவர்களை உலுப்பி எழுப்ப, தூக்கத்தில் உளற ஆரம்பித்தனர். இதை பார்த்து பிள்ளைகள் சிரித்தனர்.

இந்த வசீகரிக்கும் பூமியானது பயணத்தின் கடைசிப்பாதையில் அமைந்திருக்கிறது. இதை கடந்தால், போய் சேரும் இடம் எப்சிபா பியூலா தேசம் தான். சத்துருவானவன் இதை ஒரு கடைசி கண்ணியையாக வைத்திருக்கிறான்.

இருள் அதிகரித்ததால் எல்லோரும் பயப்பட, வழிகாட்டி ஒரு விளக்கை ஏற்றி இந்த வெளிச்சத்தில் நாம் இந்த பூமியை கடந்து போகலாம் என்று சொல்ல, எல்லாரும் கவனமாக ஆண்டவரை தோத்தரித்து முன்சென்றனர்.

பிள்ளைகள் அழத் தொடங்கினதும், கிரேட் ஹார்ட் அவர்களை தைரியப்படுத்தி தன் விளக்கின் வெளிச்சத்தில் நடத்திச்செல்ல, ஒரு காற்று வந்து அந்த இருளையும் மேகமூட்டத்தையும் அகற்ற, இந்த வஞ்சிக்கும் பூமியைவிட்டு பயணிகள் தப்பிவிட்டனர்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கற்கள், முட்கள், குளிகள், சகதிகள் நிறைந்த பாதை வழியாகத்தான் நாம் மோட்சப்பட்டணத்திற்குப் போகவேண்டும். நமக்கு கிரேட் ஹார்ட்டை போல ஊழியர்கள் கிடைக்காவிட்டாலும், நமது வேதத்தை தியானித்து, சத்திய ஆவியானவரின் உதவி கொண்டு இந்த பாதையில் சுலபமாக கடந்து போகலாம். ஆனால் இந்த வசியம் நிறைந்த பூமியை கண்டிப்பாக கடந்து தான் போகவேண்டும். இங்கேயுள்ள இளைப்பாறும் இடங்களில் தங்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இந்த பூமியில்தான் விழுந்துபோன ஊழியர்கள், தங்களுக்கு வேதத்திற்கு முரணான வெளிப்படுத்துதல்களை நமக்கு காண்பித்து, நம்மை அவர்களிடம் வசீகரிக்கிறார்கள். அவர்களின் பிரசங்கங்கள், நம்மை வசீகரித்து, அவர்களின் மேல் நம்பிக்கை வைக்க வழி நடத்துகிறது. நம்மை விசுவாச பாதையிலிருந்து அகற்றி வேறு ஒரு கிறிஸ்துவிற்கு (தீர்க்கதரிசன புத்தகங்களிலும், சுவிசேஷத்திலும், வெளிப்படுத்ததலின் புத்தகத்தில் கூறப்படாத ஒரு கிறிஸ்து), அதாவது அந்தி கிறிஸ்துவிற்கு (Another Christ) வழிநடத்துகிறார்கள். அந்த விழுந்துபோன ஊழியர்களுக்கோ, தாங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாது!

"அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது" (வெளி 12:4). வானத்தில் நட்சத்திரங்களை போல ஜொலித்த ஊழியர்களின், மூன்றிலொரு பங்கை தனது வாலால் விழத்தள்ளுகிறான். அதாவது, ஒரு கூட்டத்தாரை விழ செய்கிறான். கிறிஸ்துவின் சபையானது, ஆவியில் பெற்று எடுக்கும் விசுவாச சன்னதியை அழிக்குப்படி, வலுசர்ப்பம் கிறிஸ்துவின் சபை முன் நிற்கிறதாம். இந்த ஆவிக்குரிய குழந்தைகளை காக்கும் பொறுப்பு கிறிஸ்துவின் சபைமேல் தான் இருக்கிறது. இந்த இளம் விசுவாசக் குழந்தைகளை தேவனது பராமரிப்பிற்கு நேராக கொண்டு அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கு போய் சேர்ப்பது நமது கடமையாகும்."அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது" (வெளி 12 :4,5).

Heedless (செவிகொடுக்காதவன்), எத்தனைமுறையோ, ஆண்டவராலும் அப்போஸ்தலர்களாலும் எச்சரிக்கப்பட்டும், இந்த பூமியில் வஞ்சிக்கப்பட்டு, கள்ள தீர்க்கதரிசகளின் கூடாரத்தில் தாபரித்து அழிந்து கொண்டிருக்கிறான். தனக்கு எல்லாமே தெரியும் என்றும், இந்த பூமி என்னை வஞ்சிக்கமுடியாது என்று நினைத்து, கள்ள தீர்க்கதரிசகளின் கூடாரத்தில் தாபரிக்கும் Too Bold (அளவுக்கு மிஞ்சிய தைரியம்) என்ற பயணியும் தன்னை அழித்துக்கொண்டிருக்கிறான். நாம் இவர்களை எழுப்பவேண்டும். இது நமது கடமையாகும்.

இந்த வசியம் நிறைந்த நிலமானது எப்சிபா பியூலா தேசத்திற்கு அருகாமையிலிருக்கிறது. இந்த நிலத்தை கடந்தால் தான் பியூலா தேசத்திற்குள் பிரவேசிப்போம். இந்த நிலம்தான் மோட்சப்பயணிகளுக்கு கடைசியான தடையாக இருக்கின்றது.

இப்போது எசேக்கியேல் 28: 4 - 8 வசனங்களை தியானம் செய்யவும்.

"நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.

உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய், உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.

உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள், நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்".

இன்று தேவன் அளித்த வரங்கள் மூலம் பணம், சொத்து சம்பாதித்து தங்களின் ராஜ்ஜியங்களை விரிவுபடுத்தும் ஊழயர்களுக்கு ஐயோ! இவர்கள் தங்களுக்கு பெயர்களை சம்பாதித்து, வானளவில் தேவனின் பெயரில் கட்டிடங்கள், தேவனின் வீடு என்று தேவ மக்களின் பணத்தை கைப்பற்றி ஆசிர்வதிக்கும் தேவன் என்று பிதத்தி மக்களை தஙகள் அழிந்து போகும் கூடாரத்திற்கு வழி நடத்தும் ஊழியர்களுக்கு ஐயோ! இவர்கள் குழியிலே விழுந்து விடுவார்கள். அந்திக்கிறிஸ்துவின் ஆவியால் வஞ்சிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது! இவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் கொலையுண்டு சாகிறவர்களைப்போல் இருப்பார்கள். இவர்களை விட்டு ஓடி, உன் கையில் வேதாகமத்தை எடுத்து மோட்சப்பட்டணத்தை நோக்கி ஓடவேண்டும்.

இவர்களின் கூடாரங்களில் மயங்கி விடாதே! இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் இவர்கள் சபைகளில் அல்லது கூட்டங்களில் நடக்கலாம். தேவ வசனங்கள் அறிவிக்கப்படலாம்! ஆனால் நீயோ இங்கிருந்து தப்பி பின் நோக்காமல் மலைக்கு ஓடு! தாமதிக்காதே!

இந்த வஞ்சிக்கும் ஆவியை வெகு இலகுவாக உங்களால் பகுத்தறிவு செய்யமுடியாது. இது வஞ்சிக்கபடும் கடைசி காலம். நீங்கள் நிற்பது ஒரு வசியம் நிறைந்த பூமி.

ஒரு தீர்க்கதரிசன சொப்பன வெளிப்பாடு

கரிஷ்மா என்ற பத்திரிகையில் (Charisma magazine) ஒரு கட்டுரை 2018 ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது அதன் தலைப்பு "Disturbing Prophetic Dream: 'I Saw Many Ministers and Prophets in Hell" by JEREMIAH JOHNSON. "கவலையளிக்கும் தீர்க்கதரிசன சொப்பனம் : நான் அநேக ஊழியர்களையும் தீர்க்கதரசிகளையும் நரகத்தில் பார்த்தேன்". இந்த தீர்க்கதரிசன சொப்பனம் கீழே கூறப்பட்ட மத்தேயு 7:22-24ன் அடிப்படையில் பரிசுத்தாவியானவரால் அருளப்பட்டது.

"அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்".

இந்த சொப்பனத்தில் பரிசுத்தாவியானவர் அந்த ஊழியருக்கு கூறியதாவது, "நரகத்தில் இருந்தவர்கள் ஒரு கூட்டத்தார் அற்புதங்களையும் தீர்க்கதரிசனங்களையும் விடுதலைகளையும் பெற்றவர்கள்". இவர்களைப்பார்த்து "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" என்று கூறினாராம். அதாவது அற்புதங்களையும், அடையாளங்களையும் தங்களின் ஊழியர்களின் மூலமாக அளித்த தேவ ஊழியர்கள் மாத்திரம் அல்ல, அவைகளைப் பெற்றுக் கொண்டு, கொண்டும் பாவத்திலிருந்து மனம் திரும்பாதவர்களும் நரகத்தில் எறியப்பட்டனராம். இந்த ஊழியர்கள் முழு சத்தியத்தையும், மனம் திரும்புதலையும், பரிசுத்தத்தையும் குறித்தோ பிரசிங்கவில்லையாம். "என் வல்லமை இவர்களின் ஊழியங்களின் மூலம் வெளிப்படும்போது இந்த ஊழியர்கள் மக்களைப் பார்த்து நான் (தேவன்) அவர்களை நேசிக்கிறேன் என்று மாத்திரம் சொல்லி, அவர்கள் பாவத்திலிருந்து மனம் திரும்பி இரட்சிக்கப்பட அவசியம் என்று கூறவில்லையாம். ஒரு பெரிய ஏமாற்றம் இந்த உலகத்தில் இந்த அற்புத ஊழியங்களின் மூலம் பரவி வருகிறது" என்று பரிசுத்தாவியானவர் அந்த ஊழியருக்கு வெளிப்படுயிருக்கிறாராம்.

எச்சரிப்பின் தேவ வசனங்கள்

கீழே குறிப்பிட்ட வேத வசனங்களில், சுவிசேஷம் தொடங்கி, நிருபங்களில் தொடர்ந்து, வெளிப்படுத்ததிலின் புத்தகம் வரை நமக்கு தெள்ளத்தெளிவாக எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது:

"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்" (மத்தேயு 24:4).

"அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்" (மத்தேயு 24:23-24).

"ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்" (I தீமோத்தேயு 4:1).

"கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே (உங்கள் நடுவில் இப்போது இருக்கிறார்கள்) இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள்இருப்பார்கள் (இப்போது இருக்கிறார்கள்); அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

பொருளாசையுடையவர்களாய், (உங்களின் பணத்தை குறிவைத்து) தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது" (II பேதுரு 2 :1-3).

"அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். (Note: Valiant For Truth மூன்று கொள்ளைக்காரர்களோடு யுத்தம் பண்ணி வெற்றிபெற்றது இதற்கு அடையாளமாக இருக்கிறது)!

அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்" (வெளி 16:13-15).

கற்றுக்கொள்ளும் பாடம்

தெரிந்துகொள்ளப்பட்டவர்களியாகிய உங்களுக்குத்தான் ஆண்டவரே தன் வாயின் மூலம், மத்தேயு 24:23-24 வசனங்களில், இந்த எச்சரிக்கையை தெள்ளத்தெளிவாக கொடுத்திருக்கிறார். உங்களுக்கு சாக்குப்போக்கு கூறி தப்பமுடியாது. இந்த செய்தியை வாசிக்கும் உங்களுக்குகாகத்தான் இதை அவரது அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் உங்களின் பெயர்களைக் கூப்பிட்டு உங்களின் கடந்த கால வாழ்க்கையைக் சுட்டிக்காட்டி அற்புதங்கள் செய்யக்கூடும். இதே போல அற்புதங்களை மற்ற மதங்களின் போதகர்களும் செய்கிறார்கள். இயேசுவோ, அப்போஸ்தலர்களோ கூட்டத்திலிருந்த யாரையோ பெயர் சொல்லி அழைக்கவில்லை. மரத்திலிருந்த சகேயுவை தனிப்பட்டமுறையில் அழைத்து அவனது கடந்த கால வாழ்க்கையை வெளிப்படுத்தினார். உண்மையாகவே, தீர்க்கதரிசன வரங்களின் மூலம் ஒரு மனிதனின் இருதயத்தின் அந்தரங்கங்கள் வெளியரங்கமாகிறது ( I கொரிந்தியர் 14:25). ஆண்டவர் எல்லாருடைய பெயர்களையும் அறிந்திருக்கிறார். தங்களின் பெயர்களை ஆண்டவர் வெளிப்படுத்திக் காண்பித்து அவரின் வல்லமையை வெளிப்படுத்தவேண்டும் என்று ஜெபத்துடன் எந்த கூட்டத்திலும் போய் அமரக்கூடாது. ஆகவே இந்த மாதிரி அற்புதங்கள் நடைபெறும்போது தைரியமாக இவைகளை நிதானிக்கவேண்டும். "ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்" ( I கொரிந்தியர் 2:15).

எந்த ஊழியனும் கூட வழி தவறி விழுந்துபோயிருக்கக்கூடும். அதாவது வெளிப்படுத்தலின் விசேஷத்தில் கூறியபடி, மூன்றில் ஒரு பகுதியான, தேவ வல்லமையால் உபயோகப்படுத்தப்பட்டு நட்சத்திரங்கள் போல வானத்தில் ஜொலித்த ஊழியர்கள் தான் இப்போது வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உபதேசங்கள் மூலம் நீங்கள் வஞ்சிக்கப்படும் காலம் இது!

தொடர்ந்து படிக்க... யேசபேல் (Madam Bubble) என்ற கள்ள தீர்க்கதரிசி