கிறிஸ்தவமும் உலக ஆதாயமும்

Previous....கிறிஸ்டியானும் நம்பிக்கையும் முடிவை விரும்புவன் என்ற பயணியுடன்

கிறிஸ்தவமும் உலக ஆதாயமும்

Mr. Hold-the-world “உலகதைப்பிடித்துக்கொள்” கிறிஸ்டியானோடு தர்க்கம் செய்ய, கிறிஸ்டியான் பின்வருமாறு விளக்கி தன் கருத்துக்களை தெரிவிக்கிறான்.

யோவான் ஆறாம் அதிகாரத்தில் குறிப்பிட்டபடி கிறிஸ்துவை வெறும் அப்பத்திற்காகப் பின்பற்ற விரும்புவது சரியில்லை. கிறிஸ்துவத்தையும் கிறிஸ்துவையும் தன் சுய நலத்திற்காக அனுபவிக்கும் நபர்கள் வேட்டைக் குதிரைகளைப் பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு (Stalking horses) ஒப்பானவர்கள். பொதுவாக பறவைகள் மனிதர்கள் அண்மையில் வருவது தெரிந்தால் உடனே பறந்துவிடும். ஆனால் குதிரைகள் போன்ற விலங்கினங்கள் அருகாமையில் வரும்பொழுதோ அவை அதுபோல பயப்படுவதில்லை. அந்த விலங்கினங்கள் தங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்று நம்பி தொடர்ந்து இரை தேடுவதில் கவனம் செலுத்துகின்றன. இதை நன்கு அறிந்த சில தந்திரமான வேட்டைக்காரர்கள் குதிரைகளின் மீது ஏறி அமர்ந்துகொண்டு வந்து இந்தப் பறவைகளுக்கு அருகாமையில் வந்து அவற்றை வேட்டையாடுகின்றனர்.கிறிஸ்டியான் நான்கு பெயர்களின் உதாரணத்தை விளக்கிக் கூறுகிறான்.

புற ஜாதிகள் (Heathens)— புற ஜாதியனரான ஏமோர், சீகேம் என்பவர்கள் தங்களது தேசவாசிகளுடன் சேர்ந்து, மனைவிகளையும், நிலங்களையும், மிருகஜீவன்களையும் பெருவதற்கு மாத்திரம், விருத்தசேதனம் செய்வதற்கு கூட தயாராகயிருந்தனர் (ஆதிகாமம் 34ம் அதிகாரம்).

பரிசேயர்கள் (Hypocrites) : பரிசேயர்கள் தங்களது மதத்தை பயன்படுத்தி தங்களது அந்தஸ்த்தை உயர்த்தி, பணத்தை கையாடி, சந்தேகப்படாத விதவைகளின் நிலங்களை அபகரித்துக்கொள்கிறர்கள்.

"நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,

விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்" (லூக்கா 25: 46-47).

சாத்தான்கள் (Devils) : யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக்கொடுக்க சம்மதித்துவிட்டான். "இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்" (யோவான் 6:70-71).

"அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:

நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்". (மத்தேயு 26:14, 15).

சூனியக்காரிகள் (Witches) : ஞானஸ்நானம் பெற்ற சீமோன் பணத்தைக்கொடுத்து ஆண்டவரின் வல்லமையை பெற முயற்சித்தான்.

"அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்" (அப்போஸ்தலர் 8:18-23).

பின்பு, கிறிஸ்டியானும் நம்பிக்கையும் இந்த மனிதர்களை விட்டுவிட்டு ஒரு "இலகு" (Ease) என்ற சமதளத்தை அடைந்தனர். அந்த இடம் சமதளமாக இருந்தாலும் குறுகியதாக இருந்தது. அந்த இடத்தை இலகுவாக கடந்து ஒரு "பண ஆதாயம்" என்ற சிறிய குன்றை அடைந்தனர். அந்த குன்றில் ஒரு வெள்ளியெடுக்கும் சுரங்கம் (Silver Mines) இருந்தது. இவர்களுக்கு முன்பு சிலர் இந்த அதிசயத்தை காண இந்த பள்ளத்தின் விளிம்பில் நின்று எட்டிப்பார்த்தபோது, கவரப்பட்டு கீழே விழுந்தனர். சிலர் முடமானார்கள். சிலர் மரித்தார்கள்.

தேமா (Demas) என்பவன் கிறிஸ்டியானுக்கும் நம்பிக்கைக்கும் இந்த சுரங்கத்தைக்காண்பித்து அதை உற்றுநோக்கும்படி சொன்னான். கிறிஸ்டியான் அவனிடம் தர்க்கம் பண்ணி தேமாவை நோக்கி "நீ கேயாசியின் (Gehazi) தாத்தா" என்றும், "யூதாஸ் உனக்கு தகப்பன்" என்றும் கூறி தேமாவை கடிந்துக் கொள்கிறான்.

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் தேமாவை விட்டுப்பிரிந்து வேறு ஒரு இடத்தில் வந்து அங்கே ஒரு பழைய சிலையைக் (space) காண்கிறார்கள். அந்த சிலையானது ஒரு பெண் ஒரு தூணாக மாறியிருப்பதைக் (space) கண்டு நம்பிக்கை உற்றுநோக்கி அந்த சிலையின்மேல் "லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்" (லூக்கா 17:33) என்று எழுதப்பட்டிருக்கிறது என்று அறிவிக்கிறான். "அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்" (ஆதியாகமம் 19 :26).கற்றுக்கொள்ளும் பாடம்இப்படி By Ends போல ஜீவிக்கிறவர்களும், Gripeman போன்ற போதகர்களும் நான்கு விதமான வகைகளைச் சேர்ந்தவர்கள் என பண்ணியன் குறிப்பிடுகிறார். இவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தேவமக்கள் அல்ல. புற ஜாதி மக்களாகவே ஜீவிக்கிறார்கள். இவர்கள் வெளிவேசம் போட்டு தங்கள் பக்தியுள்ளவர்கள் என்று உலகத்திற்குக்காண்பித்து, கிறிஸ்தவ சமூகத்தில் முதன் இடங்களை நாடி, ஏழைகள் அல்லது விதவைகளின் காணிக்கைகளைப் பட்சித்து ஆடம்பரமாக வாழும் பரிசேய கூட்டம்! பணத்தாசை பிடித்த யூதாசைப்போல சாத்தானின் கூட்டத்தார்! இவர்கள் இயேசுவை தங்கள் வாழ்க்கை மூலம் நிராகரித்து பணத்திற்காக ஜீவிக்கும் சாத்தானின் கூட்டத்தார். இவர்கள் ஞானஸ்நானம் பெற்று ஆண்டவரின் வரங்களை காணிக்கைக் (donation, offerings and tithes) கொடுத்து பெற்றுவிடலாம் என்று எண்ணி பேதுருவை அணுகிய சீமோன் போன்ற சூனியக்கார்கள்!

தேமாவை பற்றி, II தீமோத்தேயு 4:10 என்ற வேதப்பகுதியில் படிக்கலாம். கெகாசி (Gehazi) தீர்க்கதரிசி எலிசாவின் வேலைக்காரன் என்று வேதத்தில் காண்கிறோம்.

இன்று அநேக கிறிஸ்தவர்கள் லோத்தின் மனைவியைப் போல, தங்களுக்கு உலகப்பிரகானமான ஆசீர்வாதங்கள் ஆபிரகாமின் தேசத்திலிருந்தாலும், உலகப்பிரகானமான ஆசீர்வாதங்களை அழிந்து போகும் சோதாம் தேசத்தில் தேடுகிறார்கள். லோத்தின் மனைவி அபிரகாமோடு கூடப் போகாவிட்டாலும் தனது கணவன் லோத்தின் கூடப்போய் தனது ஆஸ்திகளை பெற்றிருக்கக்கூடும். இன்று நாம் முதலாவது தேவனது ராஜ்ஜியத்தையும் அதன் நீதியையும் தேடாமல், உலக ஆசீர்வாதங்களை நாடி மாத்திரம், கிறிஸ்துவை ஒரு கருவியாக கருதி தேடுவது லோத்தின் மனைவியைப்போல ஜீவிப்பதற்கு சமமாகும். நமக்கு தேவன் அருளிய ஆசிர்வாதங்கள் எல்லாம் அவரது ராஜ்ஜியத்தில் தான் இருக்கிறது. அவரது ராஜ்ஜியத்தில் பிரவேசித்து, அவரின் வார்த்தைகளை விசுவாசித்து, நாம் சிலுவையை எடுத்துக்கொண்டு அவர்பின் செல்லும்போது "இவைகள் எல்லாம் கூடக்கொடுக்கப்படும்".

இன்று அநேக கிறிஸ்தவர்கள் லோத்தின் மனைவியைப்போல உப்புத்தூண்களாக மாறிக் காட்சியளிக்கிறார்கள். இவர்களெல்லாரும் மோட்சப்பயணத்தை நோக்கி ஓடிப்போகும் வழியில், கள்ள உபதேசத்தைக்கேட்டு பின்திரும்பி அழிந்து போகும் மாயாபுரியைக் கண்டு ஏங்கி உப்புத்தூண்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் தங்களுக்குள்ள சரீர ஆசீர்வாதங்களை கிறிஸ்துவுக்குள் பெறாமல், கிறிஸ்துவையை ஒரு ஆதாய கருவியாக உபயோகித்து, அந்த ஆசீர்வாதங்களை மட்டும் பெற்று, கிறிஸ்துவைப் புறக்கணித்து, உப்புத்தூண்களாக மாறி, அதே இடத்தில் நின்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலேயோ சிலுவைகள் இல்லை. ஆனால் பரிசுத்தாவினவரின் அபிஷேகத்தை பெற்றுவிட்டோம் என்று ஏமாற்றப்பட்டு உப்புத்தூண்களாக நின்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் அநேகர் கல்வாரியின் அண்டில் வந்து சிலுவையும், காலி கல்லறையும் கண்டு, மோட்சப்பயணத்தில் போய்க்கொண்டிருந்தவர்கள் தான்! ஆனால் அவர்களோ, மேல்கூறியவாறு, பின் நோக்கி, மாயாபுரியைப் பார்த்து உப்புத்தூண்களாக மாறினவர்கள்!

Next.....சந்தேகக் கோட்டையில் பயணிகள்