மோட்சப்பட்டணத்தை அடைதல்

கிறிஸ்டியானா ஆற்றை கடந்து சென்றபின்பு மற்ற பயணிகளான Mr. Ready-to-halt, Mr. Feeble-mind, Mr. Despondency, Mr. Honest, Valiant For Truth, Mr. Stand-fast, ஆகிய எல்லோருக்கும், பரத்திலிருந்து அழைப்புகள் வந்தன. அவர்களை கிரேட் ஹார்ட்டும் மற்ற தங்களின் குடும்பத்தின் அன்பார்ந்த பிள்ளைகள், மனைவிமார்கள் எல்லோரும் ஆற்றின் கரைக்கு வந்து வழியனுப்பி வைத்தனர். எல்லோரையும் கிரேட் ஹார்ட் கடைசிவரை ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தார். ஒவ்வொருவருக்கும் நதியின் ஆழம் வித்தியாசமாக இருந்தது. சிலருக்கு அந்த தண்ணீர் கசப்பாக இருந்தாலும், சில நிமிடங்களில் அந்த மகிமையான தேசத்தில் பிரவேசித்து தாங்கள் பூலோகத்திலே சேவித்து வந்த ஆண்டவரை முகமுகமாக காணப்போகிறோம் என்ற ஆனந்தத்தால் இந்த கடைசி பயணமான ஆற்றை கடப்பது ஒரு பொருட்டாக தோன்றவில்லை.எல்லா பயணிகளும் கரைசேர்ந்து அழகிய மகிமை நிறைந்த மோட்சபட்டணத்தை அடைந்தனர்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கிரேட் ஹார்ட் மாத்திரம் தங்கிவிட்டார். அவரது ஊழியம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆகவேதான் ஜான் பண்ணியன் அவருக்கு ஒரு முடிவு கொடுக்கவில்லை. மரண படுக்கையில் நாம் இருக்கும்போதுதான் எப்சிபா பியூலா தேசத்தை விட்டு இந்த ஆற்றை கடந்து மோட்சப்பட்டணத்திற்குள் பிரவேசிப்போம். அதுவரை நமது ஓட்டத்தை பொறுமையோடு ஆண்டவர் காண்பித்த பாதையில் செல்வோமாக. ஆமென்.