அர்ப்பணிப்பு

இந்த நூலை எனது ஆவிக்குரிய மூத்த சகோதரன் கோத்தகிரியை சேர்ந்த N. சாமுவேல் (அண்ணன்) அவர்களின் ஞாபகார்த்தமாக வெளியிடுகிறேன். அருமை அண்ணன் ஒரு அப்போஸ்தல ஊழியர். மகிமையின் சுவிசேஷத்தை இமாலய பகுதிகளிலும், நேபாள், பூட்டான் போன்ற தேசங்களுக்கு தனது வாலிப வயதிலிருந்து தனது சரீர பலன் குன்றிப்போகும் வரை சுமந்து சென்றார்கள். அவருடைய ஜெப வாழ்க்கை, தாழ்மையான ஊழியம், அன்பான வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தது. இவர்கள் தான் ஒரு உண்மையான தேவனின் எழுத்தாணி. தேவ எக்காளம் என்ற ஒரு உன்னதமான ஆவிக்குரிய மாத இதழை அநேக ஆண்டுகள் வெளியிட்டு வந்தார்கள். அண்ணனின் முக்கிய பரிசுத்தவான்களின் சரித்திரத்தில் ஜான் பணியன் முக்கிய இடத்தை பெற்றுயிருக்கிறார். ஜான் பணியன் எழுதிய மோட்சப்பயணத்தை அடிக்கடி தனது செய்திகளின் குறிப்பிட்டிருக்கிறார்கள். 13-5-1937 அன்று பிறந்து 29-08-2019 அன்று தங்கள் முழங்காலில் நின்று ஜெபித்து தேவ ராஜ்யத்தில் பிரவேசித்தார்கள்.(அண்ணனுடன் 2006 ம் ஆண்டில் கோத்தகிரியில் வைத்து எடுத்த போட்டோ)

Back to Home Page