சந்தேகக் கோட்டையில் பயணிகள்

Home

முந்தின அதிகாரம்

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் "முடிவை விரும்புவன்" என்ற பயணியுடன்

உண்மையானவன் மரித்தபின்பு, கிறிஸ்டியானும் நம்பிக்கையும் (Hopeful) மாயசந்தையை விட்டு வெளியேறினவுடன் ஒரு மனிதனை சந்திக்கிறார்கள், அவனது பெயர் "முடிவை விரும்புவன்" (By-ends). இந்த மனிதன் கிறிஸ்துவத்தை தன் சொந்த காரியங்களுக்காகவும் சமூகத்தின் மூலமாக வரும் லாபத்திற்காகவும் உபயோகப்படுத்துபவன். தேவனுக்கு சேவை செய்ய, இவன் காற்றிற்காவும் அலைக்காவுக்கும் காத்து இருப்பவன். சமயம் வாய்க்கும்போது தான் தேவனுக்கு ஊழியம் செய்பவன். இவன் தான் ஒரு நல்ல மயக்கும் பேச்சுக்கள் நிறைந்த ஊரிலிருந்து ( Town of Fair-speech) வந்ததாகவும், இப்போது மோட்சப்பட்டணத்தை நோக்கிப்போவதாகவும் தெரிவிக்கிறான். இந்த மனிதனோடு உரையாடல் நடத்தும்போது இந்த பட்டணமாவது செல்வந்தர்கள் வாழும் இடம் என்று அறியவருகிறது. மேலும் அவனை வழிநடத்தியவர்கள் (Lord Turn – about) பின் திரும்பும் ஆண்டவன், (Lord Time-server) நேர சேவையகத்தின் ஆண்டவன், (Lord Fair-speech) பேச்சு திறமையின் ஆண்டவன் என்பவர்களாகும்.

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் இந்த மனிதனை (By ends) புறக்கணித்தவுடன் இவனை மூன்று மனிதர்கள் பின்தொடர்ந்து இவனுக்கு மட்டமான கஞ்சியைக்கொடுத்து பரிசளித்தனர். அவர்கள் (Mr.Hold-the-world), “உலகதைப்பிடித்துக்கொள்”, (Mr Money-love) “பண ஆசை”, (Mr Save-all) "எல்லாவற்றையும் சேமிக்கவும்” என்பவர்களாகும். இவன் கிறிஸ்டியானையும், நம்பிக்கையையும் தனக்கு துணையாக ஏற்றுக்கொள்ளாமல், இந்த மூன்று மனிதர்களையும் துணையாக தெரிந்துக்கொண்டான்.

முடிவை விரும்புவனின் (By ends) "கிறிஸ்தவம்" என்னவென்றால் சூரிய வெளிச்சத்தில் தங்க செருப்புக்களை அணிந்து நடக்கும்போது அதை விரும்புவதாகவும், எப்போது அது கந்தல் உடையணிந்து நடக்குகிறதோ அதை வெறுப்பதாகவும் கூறினான். தனது சொத்துக்களையும் தனது ஜீவனையும் காப்பாற்றுவதற்காகத்தான் அவன் கிறிஸ்தவத்தை விரும்புகிறான். தனக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தை உபயோகித்து பணம் சேமித்து சொத்துக்கள் வாங்குவதோ அவன் வாழ்வின் குறிக்கோள். அதனால்தான் அவனுக்கு முடிவை விரும்புவன்" (By-ends) என்ற புனைப்பெயர் அருளப்பட்டிருக்கிறது.

இவன் ஒரு பாசாங்குக்காரன். உண்மையான சீடன் இல்லை. தனது இருதயத்திலுள்ள சொந்த ஆசைகளைப் பின்பற்றி தனக்கு ஆதாயத்தை தேடுகிறவன். இவனது குறிக்கோளானது கிறிஸ்துவின் ஜீவனை பெறுவது அல்ல. கிறிஸ்துவை தனக்கு ஆதாயமாக உபயோகித்து தனது சொந்த காரியங்களின் முடிவை தேடுவது! இவன் ஒழுங்காக ஆலயத்திற்குப்போனாலும் கிறிஸ்துவின் சிலுவைக்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

பண ஆசையின் குணங்கள்

"பண ஆசை" பணத்தை நேசிப்பவன். பணமே முடிவு என்று கருதுபவன். அவன் இவ்விதமாக எண்ணுகிறான். அவைகளாவது - "அவன் செல்வந்தனாக இருந்தாலும் தான் மோசமாகவே ஆடையணிந்துக்கொள்கிறான். ஒரு ஊழியன் தேவ அருளால் தனக்கு ஆதாயம் வரும்போது அதை தேடுவது சட்டத்திற்குற்பட்டது. தனது மன சாட்சியைக் கண்டுக்கொள்ளாமல் அதை பெறலாம். இந்த ஆதாயம் அவனை அறிவுத் தாகமுள்ளவனாகவும் ஆர்வமுள்ள பிரசங்கியாகவும் மாற்றுகிறது. அதனால் அவன் தேவனுக்கு ஏற்றபடி ஒரு நல்ல மனிதனாக காட்சியளிக்கிறான். இவ்விதமாக ஊழியத்திற்கு தகுதியுள்ளவனாக காட்சியளிக்கிறான். அந்த ஊழியன் பெரிய ஆதாயத்திற்கு தன்னை சிறிது மாற்றிக்கொள்ளும்போது அவன் பணத்தை இச்சிக்கும் மனிதன் என்று கருதக்கூடாது. தான் தனது கிடைத்த சந்தர்ப்பங்களை வீணாக்காமல் சொந்த திறமையினால் முன்னேறிக்கொள்வதால் அவன் ஒரு நல்ல ஊழியன் என்று போற்றப்படுவான்". “உலகதைப்பிடித்துக்கொள்” என்பதின் குணங்கள் :

சூரியன் கதிர் வீசும்போதே வைக்கோல் உண்டுபண்ணவேண்டும். சர்ப்பதைப்போல வினாவுள்ளதாக இருக்கவேண்டும்; தேனீ குளிர் காலத்தில் சும்மா இருந்துக்கொண்டு சந்தர்ப்பம் வரும் காலங்களில் ஆகாரம் தேடுவதை போல கிறிஸ்துவத்தை உபயோகப்படுத்த வேண்டும். நமக்கு இந்த உலகத்தில் நல்ல ஆசீர்வாதங்களை ஆண்டவர் வைத்திருப்பதால் அவைகளை நாம் அனுபவிக்கவேண்டும். ஆபிரகாம் சாலமோன் செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். யோபு கூறினதாவது," தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்து வைப்பீர்" (யோபு 22:24).

இவர்களுக்கு வாத்தியாராக இருந்து எப்படி இச்சித்து பணம், சொத்துக்கள் சம்பாதிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தது “வலுப்பிடியாக பிடிக்கும் மனிதன்” (Gripeman) என்பவராகும். இவர்கள் கிறிஸ்துவை வைத்து எப்படி ஆதாயம் தேடலாம் என்று இந்த வாத்தியார் இந்த நான்கு மனிதர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார். இவர்கள் ஆலயங்களில் போய் தேவனை தாழ்மையோடு ஆராதித்து தங்கள் ஜீவனை தேவனுக்கு உகந்த ஜீவ பலியாக செலுத்த கற்றுக்கொடுக்கப்படாமல், கிறிஸ்துவை வைத்து எப்படி தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று இவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

முடிவை விரும்புவன் (By-ends) தன்னை மோட்சப்பயணி என்று கருதியபோதும் கிறிஸ்டியான், நம்பிக்கை இவர்களிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, தனது புது நண்பர்களோடு உறவு வைத்துக்கொள்கிறான். கிறிஸ்டியான், நம்பிக்கை இருவரையும் சொந்தக்கார்கள் என்றோ, அண்டைவீட்டார்கள் என்றோ, சகோதர்கள் என்றோ அழைக்காமல் தூர தேசத்தார்கள் என்றே அழைக்கிறான். அவன் இவர்களுக்கு விரோதமாக அவனுக்கு அநேக முறையீடுகள் செய்கிறான். தனது சரியான கொள்கைகளை இந்த இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இவனுக்கு சிறிய மனவருத்தம். முடிவை விரும்புவனின் புது நண்பர்களோ இவனோடு ஒத்துப்போகிறார்கள்.

எல்லாவற்றையும் சேமிக்கவும் குணங்கள்:

எல்லாவற்றையும் சேமித்து சொத்துக்கள், விலையுயர்ந்த கார்கள், உல்லாசமான பங்களாக்கள், ஊழியத்திற்கென்று அடுக்கடுக்கான கட்டிடங்கள் வாங்கி ஏழை விசுவாசிகளுக்கோ, விதவைகளுக்கோ தங்களின் வருமானத்திலிருந்து கொடுப்பதுமில்லை.

கற்றுக்கொள்ளும் பாடம்

இன்று அநேக கிறிஸ்தவர்கள் முடிவை விரும்புவன் (By Ends) போல தங்களுக்குக் கிறிஸ்துவின் மூலமாக என்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள். முடிவை விரும்புவன் வேதத்தை ஒரு கோணலாக போதிக்கிறான். இன்றும் இதேபோல வேதத்தை ஒரே கோணத்தில் விசுவாசித்து இயேசுவின் சீடர்களாகாமல் அவரின் அற்புதத்திற்காகவும், சுகமளிப்பிற்காகவும் வேதத்தை சரியாக அறியாமல் வெறுமனே தங்களது முடிவை மாத்திரம் விரும்புகிறார்கள்.

இன்று நாம் சமயம் வாய்த்தால் தான் ஊழியம் செய்வோம். காற்று எப்போது அடிக்கிறதோ அப்போது தான் படகை ஓட்டுவோம். அலைகள் எங்கே படகை இழுத்துச்செல்கிறதோ அங்கே தான் போவோம். எந்த ஊழியரிடத்தில் போனால் நமக்கு ஆசிர்வாதங்கள் அல்லது ஆதாயம் கிடைக்கும் என்று கருதி அந்த சபையை நோக்கி ஓடிப்போவோம். வீட்டின் அருகேயுள்ள அறிமுகம் இல்லாத போதகருடன் சபைக்குப்போய் அவருக்கு உதவி செய்து உற்சாகப்படுத்தமாட்டோம். ஒரு ஏழை சபை போதகரின் சபைக்குப் போய் அவருக்கு உதவமாட்டோம். எங்கே போனால் தீர்க்கதரிசனகள் கிடைக்கும் என்று அந்த சபை கூட்டங்களுக்குத் தான் போவோம். "என்னை சுவிசேடகர் பெயர் சொல்லியழைத்து எனக்கு தீர்க்கதரிசனம் கூறமாட்டாரோ" என்று ஏங்கி அந்த கூட்டத்தில் போய் முதல் வரிசையில் சிலர் அமர்கிறார்கள்.

இவர்கள் தேவனுக்காக எந்தவிதமான தியாகமும் செய்ய முற்படாமல் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் தங்களின் வாழ்க்கையும் சொத்தையும் காத்துக்கொள்ள எல்லா உபாயங்களையும் தந்திரங்களையும் கையாளுகிறார்கள்.

உலகத்தின் பொக்கிஷங்கள், வல்லமை, இன்பங்கள், ஆதாயம் என்பவைகளை எவ்விதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கலையை தங்களின் குருவான கிரைப்மேனிடமிருந்து (Gripeman) கற்றுக்கொள்கிறார்கள். இவைகளை பெற்றுக்கொள்ளும்படி, பொய், முகத்துதி, ஏமாற்றுதல், வன்முறை போன்ற காரியங்களைக் கடைபிடிக்கும்படி கற்றுக்கொள்கிறார்கள். இந்த உலகத்தின் பொக்கிஷங்களைப் பரலோகத்தின் பொக்கிஷங்களைக் காட்டிலும் விரும்பி, இவர்கள் ஆலயங்களுக்கு ஒழுங்காக செல்கிறார்கள். இவர்கள் சபையை மதித்தாலும், இதை ஒரு தாழ்மையுடன் ஆராதிக்கும் இடம் என்றோ ஒரு பலிசெலுத்தும் இடம் என்றோ கருதுவது கிடையாது. சபையை ஒரு ஆதாயம் கிடைக்கப்பண்ணும் இடம் என்று கருதி, மனித தொடர்புகளை இங்கே உண்டுபண்ணிக்கொள்கிறார்கள். சபையில் மனிதர்களின் நம்பிக்கையை பெற விரும்புகிறார்கள். சபையில் தங்களுக்கு உலகத்தில் வாழுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்படி சபையை உபயோகித்துக்கொள்கிறார்கள்.

ஆபிரகாம் சாலமோன் போல செல்வந்தர்களாக ஆக வேண்டுமென்று தப்பான போதனை கேட்டு அந்த சபை கூட்டங்களுக்குப்போவது, எந்தந்த சபைகளில் கூட்டங்களில் போனால் வாக்குத்தத்தங்கள் கிடைக்குமென்று அலைமோதி ஓடுவது!

உலகதைப்பிடித்துக்கொள் (Hold-the-world) தனது கொள்கையை சர்ப்பங்கள் (serpents) தேனீக்கள், சூரியஒளி, குளிர்காலம் போன்ற உதாரணங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறான். வேதவசனைகளை கூட quote பண்ண (குறிப்பிட) தயங்கமாட்டான். ஆபிரகாம், சாலமோன், யோபு, போன்றவர்களை சம்பந்தமே இல்லாமல் உதாரணங்களாக காண்பிக்கத் தயங்கமாட்டான்.

இவர்கள் ஆலயங்களுக்கு போவதும் ஆதாயத்தைத்தேடித் தான்! கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறியாமலே, தங்களுக்கு இருதயத்திற்கு ஏற்ற Gripe Man போன்ற போதகர்களையும், சுவிசேடகர்களையும் நாடிச் செல்கிறார்கள். இவர்களின் மூன்று நண்பர்கள் (Mr.Hold-the-world), “உலகதைப்பிடித்துக்கொள்”, (Mr Money-love) “பண ஆசை”, (Mr Save-all)”எல்லாவற்றையும் சேமிக்கவும்” என்பவர்களாகும்.

இவர்கள் ஒரு நல்ல மயக்கும் பேச்சுக்கள் நிறைந்த (Town of Fair-speech) ஊரை சேந்தவர்கள். இப்போது மோட்சப்பட்டணத்தை நோக்கிப்போவதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் உலக்கையில் கைவைத்து பின்னோக்கிப்பார்ப்பவர்கள். தங்கள் சமயங்களை இம்மைக்காகத்தான் செலவிடுகிறார்கள். இவர்கள், பேச்சுத் திறனுள்ள உபதேசிகளுக்கு (orators) செவிக்கொடுத்து, சத்திய ஆவியானவருக்கு செவிக்கொடுக்க மறுக்கினர்.

தேவமக்களிடமிருந்து காணிக்கைகள் வாங்கி அவைகளை சேமித்து தங்களது ராஜ்ஜியங்களை கட்டி வேத வாசனைகளை ஒரு கோணத்தில் (from one angle) பிரசங்கம் செய்து சொந்த ஆதாயங்களைத் தேடும் எந்த ஊழியனும் முடிவை விரும்புவன் (By Ends) போலானவன்!

கிறிஸ்தவமும் உலக ஆதாயமும்

Mr. Hold-the-world - “உலகதைப்பிடித்துக்கொள்” கிறிஸ்டியானோடு தர்க்கம் செய்ய, கிறிஸ்டியான் பின்வருமாறு விளக்கி தன் கருத்துக்களை தெரிவிக்கிறான்.

யோவான் ஆறாம் அதிகாரத்தில் குறிப்பிட்டபடி கிறிஸ்துவை வெறும் அப்பத்திற்காகப் பின்பற்ற விரும்புவது சரியில்லை. இது கிறிஸ்துவத்தையும் கிறிஸ்துவையும் வேட்டையாளர் பின்மறைந்து செல்லப்பெறும் குதிரை நொண்டிச்சாக்கு (stalking-horse) என கருதி இந்த உலகத்தை அனுபவிப்பது மிகவும் வெறுக்கத்தக்கது. கிறிஸ்டியான் நான்கு பெயர்களின் உதாரணத்தை விளக்கிக் கூறுகிறான்.

புற ஜாதிகள் (Heathens)— புற ஜாதியனரான ஏமோர், சீகேம் என்பவர்கள் தங்களது தேசவாசிகளுடன் சேர்ந்து, மனைவிகளையும், நிலங்களையும், மிருகஜீவன்களையும் பெருவதற்கு மாத்திரம், விருத்தசேதனம் செய்வதற்கு கூட தயாராகயிருந்தனர் (ஆதிகாமம் 34ம் அதிகாரம்).

பரிசேயர்கள் (Hypocrites) : பரிசேயர்கள் தங்களது மதத்தை பயன்படுத்தி தங்களது அந்தஸ்த்தை உயர்த்தி, பணத்தை கையாடி, சந்தேகப்படாத விதவைகளின் நிலங்களை அபகரித்துக்கொள்கிறர்கள்.

"நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,

விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்" (லூக்கா 25: 46-47).

சாத்தான்கள் (Devils) : யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக்கொடுக்க சம்மதித்துவிட்டான். "இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்" (யோவான் 6:70-71).

"அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:

நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்". (மத்தேயு 26:14, 15).

சூனியக்காரிகள் (Witches) : ஞானஸ்நானம் பெற்ற சீமோன் பணத்தைக்கொடுத்து ஆண்டவரின் வல்லமையை பெற முயற்சித்தான்.

"அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்" (அப்போஸ்தலர் 8:18-23).

பின்பு, கிறிஸ்டியானும் நம்பிக்கையும் இந்த மனிதர்களை விட்டுவிட்டு ஒரு "இலகு" (Ease) என்ற சமதளத்தை அடைந்தனர். அந்த இடம் சமதளமாக இருந்தாலும் குறுகியதாக இருந்தது. அந்த இடத்தை இலகுவாக கடந்து ஒரு "பண ஆதாயம்" என்ற சிறிய குன்றை அடைந்தனர். அந்த குன்றில் ஒரு வெள்ளியெடுக்கும் சுரங்கம் (Silver Mines) இருந்தது. இவர்களுக்கு முன்பு சிலர் இந்த அதிசயத்தை காண இந்த பள்ளத்தின் விளிம்பில் நின்று எட்டிப்பார்த்தபோது, கவரப்பட்டு கீழே விழுந்தனர். சிலர் முடமானார்கள். சிலர் மரித்தார்கள்.

தேமா (Demas) என்பவன் கிறிஸ்டியானுக்கும் நம்பிக்கைக்கும் இந்த சுரங்கத்தைக்காண்பித்து அதை உற்றுநோக்கும்படி சொன்னான். கிறிஸ்டியான் அவனிடம் தர்க்கம் பண்ணி தேமாவை நோக்கி "நீ கேயாசியின் (Gehazi) தாத்தா" என்றும், "யூதாஸ் உனக்கு தகப்பன்" என்றும் கூறி தேமாவை கடிந்துக் கொள்கிறான்.

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் தேமாவை விட்டுப்பிரிந்து வேறு ஒரு இடத்தில் வந்து அங்கே ஒரு பழைய சிலையைக் (space) காண்கிறார்கள். அந்த சிலையானது ஒரு பெண் ஒரு தூணாக மாறியிருப்பதைக் (space) கண்டு நம்பிக்கை உற்றுநோக்கி அந்த சிலையின்மேல் "லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்" (லூக்கா 17:33) என்று எழுதப்பட்டிருக்கிறது என்று அறிவிக்கிறான். "அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்" (ஆதியாகமம் 19 :26). கற்றுக்கொள்ளும் பாடம் இப்படி By Ends போல ஜீவிக்கிறவர்களும், Gripeman போன்ற போதகர்களும் நான்கு விதமான வகைகளைச் சேர்ந்தவர்கள் என பண்ணியன் குறிப்பிடுகிறார். இவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தேவமக்கள் அல்ல. புற ஜாதி மக்களாகவே ஜீவிக்கிறார்கள். இவர்கள் வெளிவேசம் போட்டு தங்கள் பக்தியுள்ளவர்கள் என்று உலகத்திற்குக்காண்பித்து, கிறிஸ்தவ சமூகத்தில் முதன் இடங்களை நாடி, ஏழைகள் அல்லது விதவைகளின் காணிக்கைகளைப் பட்சித்து ஆடம்பரமாக வாழும் பரிசேய கூட்டம்! பணத்தாசை பிடித்த யூதாசைப்போல சாத்தானின் கூட்டத்தார்! இவர்கள் இயேசுவை தங்கள் வாழ்க்கை மூலம் நிராகரித்து பணத்திற்காக ஜீவிக்கும் சாத்தானின் கூட்டத்தார். இவர்கள் ஞானஸ்நானம் பெற்று ஆண்டவரின் வரங்களை காணிக்கைக் (donation, offerings and tithes) கொடுத்து பெற்றுவிடலாம் என்று எண்ணி பேதுருவை அணுகிய சீமோன் போன்ற சூனியக்கார்கள்!

தேமாவை பற்றி, II தீமோத்தேயு 4:10 என்ற வேதப்பகுதியில் படிக்கலாம். கெகாசி (Gehazi) தீர்க்கதரிசி எலிசாவின் வேலைக்காரன் என்று வேதத்தில் காண்கிறோம்.

இன்று அநேக கிறிஸ்தவர்கள் லோத்தின் மனைவியைப் போல, தங்களுக்கு உலகப்பிரகானமான ஆசீர்வாதங்கள் ஆபிரகாமின் தேசத்திலிருந்தாலும், உலகப்பிரகானமான ஆசீர்வாதங்களை அழிந்து போகும் சோதாம் தேசத்தில் தேடுகிறார்கள். லோத்தின் மனைவி அபிரகாமோடு கூடப் போகாவிட்டாலும் தனது கணவன் லோத்தின் கூடப்போய் தனது ஆஸ்திகளை பெற்றிருக்கக்கூடும். இன்று நாம் முதலாவது தேவனது ராஜ்ஜியத்தையும் அதன் நீதியையும் தேடாமல், உலக ஆசீர்வாதங்களை நாடி மாத்திரம், கிறிஸ்துவை ஒரு கருவியாக கருதி தேடுவது லோத்தின் மனைவியைப்போல ஜீவிப்பதற்கு சமமாகும். நமக்கு தேவன் அருளிய ஆசிர்வாதங்கள் எல்லாம் அவரது ராஜ்ஜியத்தில் தான் இருக்கிறது. அவரது ராஜ்ஜியத்தில் பிரவேசித்து, அவரின் வார்த்தைகளை விசுவாசித்து, நாம் சிலுவையை எடுத்துக்கொண்டு அவர்பின் செல்லும்போது "இவைகள் எல்லாம் கூடக்கொடுக்கப்படும்".

இன்று அநேக கிறிஸ்தவர்கள் லோத்தின் மனைவியைப்போல உப்புத்தூண்களாக மாறிக் காட்சியளிக்கிறார்கள். இவர்களெல்லாரும் மோட்சப்பயணத்தை நோக்கி ஓடிப்போகும் வழியில், கள்ள உபதேசத்தைக்கேட்டு பின்திரும்பி அழிந்து போகும் மாயாபுரியைக் கண்டு ஏங்கி உப்புத்தூண்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் தங்களுக்குள்ள சரீர ஆசீர்வாதங்களை கிறிஸ்துவுக்குள் பெறாமல், கிறிஸ்துவையை ஒரு ஆதாய கருவியாக உபயோகித்து, அந்த ஆசீர்வாதங்களை மட்டும் பெற்று, கிறிஸ்துவைப் புறக்கணித்து, உப்புத்தூண்களாக மாறி, அதே இடத்தில் நின்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலேயோ சிலுவைகள் இல்லை. ஆனால் பரிசுத்தாவினவரின் அபிஷேகத்தை பெற்றுவிட்டோம் என்று ஏமாற்றப்பட்டு உப்புத்தூண்களாக நின்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் அநேகர் கல்வாரியின் அண்டில் வந்து சிலுவையும், காலி கல்லறையும் கண்டு, மோட்சப்பயணத்தில் போய்க்கொண்டிருந்தவர்கள் தான்! ஆனால் அவர்களோ, மேல்கூறியவாறு, பின் நோக்கி, மாயாபுரியைப் பார்த்து உப்புத்தூண்களாக மாறினவர்கள்!

சந்தேகக் கோட்டையில் பயணிகள்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் நடந்து செல்லும் வழியில் ஒரு அழகான ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள். அளவுகடந்த மகிழ்ச்சியுடன் ஆற்றின் தெளிந்த நீரைப் பருகினார்கள். கரையிலிருந்து மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளியில் படுத்து உங்கினார்கள்.விழித்து எழுந்தவுடன் கற்கள் நிறைந்த பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால்கள் வலியெடுத்தது! கற்பாதையில் நடப்பது கடினமாக இருந்தது! அப்போது அவர்கள் செல்லவேண்டிய பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை என்ற பசும்புற்களால் நிறைந்த பாதையைக் கண்டார்கள். வெகுதூரம் வரை அந்த பாதை கற்ப்பாறைக்கு இணையாகவே செல்வதுபோலத் தென்பட்டது!புல்வெளிப் பாதையில் கால் வைத்து நடந்தார்கள். மெத்தைமீது நடப்பதுபோன்று கால்களுக்கு இதமாக இருந்தது! தாங்கள் செல்லவேண்டிய கற்பாதையைப் பற்றி நினைக்கவேயில்லை!

அந்தப் பாதையில் நடந்து செல்லும்போது அசட்டு நம்பிக்கை என்ற பெயருடைய ஒருவனைச் சந்தித்தார்கள்.

இந்தப்பாதை மோட்சத்துக்குத்தான் செல்கிறது. பயப்படாமல் என்பின்னே வாருங்கள் என்றான் அவன். பயணிகள் இருவரும் கவலை நீங்கப்பெற்றவர்களாக அவனைப் பின்தொடர்ந்தார்கள்!

இரவு வந்தது. இருளில் பாதை கண்ணுக்குத் தெரியவில்லை!

அப்போது கால்தவறி கிடுகிடு பாதளத்திற்குள் விழுந்துவிட்டான் அசட்டு நம்பிக்கை! அவனுடைய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்றுவிட்டார்கள் பின்னால் வந்த இருவரும்! அவனைக் குரல்கொடுத்துக் கூப்பிட்டு பார்த்தார்கள். ஆனால் பதிலே வரவில்லை! தீடிரென்று இடி, மின்னலோடு பெரிய மழை பெய்தது! புல்வெளிப் பாதையெங்கும் வெள்ளம் நிரம்பி விட்டது! தங்கள் தவறை உணர்ந்த கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப முயன்றார்கள். ஆனால் வழி தெரியவில்லை!

கற்றுக்கொள்ளும் பாடம்

கற்கள் நிறைந்த பாதை வழியேதான் நாம் நடந்து செல்ல வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் அதே சமயம், அருகில் புல்வெளிப் பாதை என்ற பசும்புற்களால் நிறைந்த பாதைகளும் நமக்கு ஆண்டவர் தருகிறார். இன்று உபத்திரவம் இருக்குமானால் நாளை இருக்காது. மெத்தை (space) மீது நடப்பதுபோன்று கால்களுக்கு இதமாக இருக்கும். ஆனால் "அசட்டு நம்பிக்கை" (Vain Confidence) என்ற ஊழியக்காரர்களை நம்பி மோசம் போகவேண்டாம்.

நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் இருள் வரத்தான் செய்யும். இந்த இருளில் நமது ஆவிக்குரிய கண்கள் குருடாகிவிடும். ஆனால் அசட்டு நம்பிக்கை என்ற ஊழியர்களை நாடிச் செல்லக்கூடாது. அவன் விழும் பள்ளத்தில் நாமும் விழுந்துவிடுவோம். இந்த நிலத்தை உண்டுபண்ணியது இந்த நிலத்திற்க்கு சொந்தமான சாத்தனான இப்பிரபஞ்சத்தின் அதிபதி தான்.

இவர்கள் நம்மை அவர்களது சபை உபதேசங்களைப் பின்பற்றி வேத வசனத்தின் வெளிச்சத்திலிருந்து திசை திருப்பி குட்டையில் விழ செய்வார்கள். அசட்டு நம்பிக்கை தன் மேல் விசுவாசம் வைக்கும்படி உங்களுக்குப் போதிப்பான். "உங்களுக்கு போராட்டங்கள் இருக்கக்கூடாது. நான் ஜெபித்தால் உங்களது போராட்டங்கள் மாறிவிடும், என்னிடம் வாருங்கள், உங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமானால் என் கூட்டத்திற்கு வரவும்," என தியதிகளைக் குறிப்பிட்டு அறிவிக்கும் ஊழியர்கள் உண்டு.

"இந்தப்பாதை மோட்சத்துக்குத்தான் செல்கிறது. பயப்படாமல் என் பின்னே வாருங்கள்", என்றுதான் உங்களுக்குச் சொல்வார்கள். அவர்களின் பாதையில் அவர்களின் கூடாரங்கள் இருக்கிறது. அங்கே தங்கி இளைப்பாறும்படிச் சொல்வார்கள். உங்கள் கைகளில் வேதம் இருக்கமானால் உங்கள் இருதயத்தில் பரிசுத்தாவியானவர் இருப்பார் என்றால் அந்த கூடாரத்திற்குப் போக அவசியமில்லை.

"இரவு வந்தது. இருளில் பாதை கண்ணுக்குத் தெரியவில்லை!" உங்களது வாழ்க்கையில் வரும் இருளை இந்த கூடாரத்தில் போக்க முடியாது. நீங்கள் ஆண்டவரை நோக்கி ஜெபித்து உங்கள் சுருளை படித்தால் தான் இந்த இருள் நீங்கும்.

இன்று நாம் வஞ்சிக்கும் படியாக அநேக கூடாரங்கள் இருக்கிறது. நாம் இந்த கூடாரங்களுக்குள் பிரவேசித்தால், தேவன் மேலுள்ள நம்பிக்கை போக, சுயநம்பிக்கை என்னும் கப்பல் இவர்களின் மேல் நங்கூரம் பாய்ச்சி நிற்கும். நாம் எந்த துன்பம் வந்தாலும் இவர்களை நாடித்தான் ஓடிப்போவோம். நாம் இவர்களின் மேலுள்ள வரங்களின் மேலே நம்பிக்கை வைப்போம். ஆண்டவரின் மேலுள்ள விசுவாசத்தை இழந்துவிடுவோம். இந்த நிலையில் நாம் இருப்போமானால், மனம் திரும்பி பொறுமையோடு, நாம் மோட்சப்பயணத்தை நோக்கி, முன்னேறி செல்லவேண்டும். விசுவாச கிரீடத்தை காத்துக்கொள்ளவும்! "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்"(II தீமோத்தேயு 4 :7).

இப்போது மத்தேயு 6ம் அதிகாரத்தில் 32-34 வசனங்களை தியானிக்கவும்.

"இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்".

"இவைகளெல்லாம்" உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். ஆகவே முதலாவது நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். இந்த ஆசிர்வாதங்களுக்காக எங்கேயும் ஓடிப் போய் ஒரு கூட்டத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்களது நாளையத்தினத்தை குறித்து தேவன் தாமே கவலைப்படுகிறார்.

உங்களுக்கு சரீரப்பிரகமான எல்லா ஆசீர்வாதங்களையும் தேவன் உங்களுக்குத் தருகிறார். தர ஆவலாக இருக்கிறார். உங்களது ஜெபத்தைக் கேட்பதற்கு அவர் காதுகள் எப்போதும் திறந்திருக்கிறது.

இது சம்பந்தமாக, எசேக்கியேல் என்ன உரைக்கிறார் என்பதை அறிவோமாக!

"அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள், இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்க நேராகப் பிடிக்கிறார்கள்.

ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன், என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை, அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்".

(எசேக்கியேல் 8:17:18).

அருவருப்புகளான பாவங்களைச் செய்து, மனம் திரும்பாமல், சபை ஊழியர்களையோ, சுவிஷேகர்களையோ நாடிப் போனால், நாம் தேவனை கோபமூட்டுகிறோம்.

இன்று நாம் உபவாசம் எடுத்து, கண்ணீர் வடித்து ஜெபம் பண்ணியும், மற்ற ஊழியர்களின் மூலம் ஜெபம் பண்ணியும், ஆண்டவர் இரங்குவதில்லை, செவிகொடுப்பதில்லை. நாம் தெய்வீக சுகம் பெறமுடியவில்லை. நமது பிள்ளைகளுக்கு வேலைகள் கிடைக்கவில்லை. கல்யாண காரியங்கள் நடப்பதில்லை. காரணம் என்ன? நாம் நமது தேவனுடைய நாட்டில், அதாவது இயேசுவின் சபையான சரீரத்தில், கொடுமையினால் நிரப்புகிறோம். நமது ஏழை சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வது கிடையாது. சபைகளில் ஏழை விதவைகளிடமிருந்தும், ஏழை விசுவாசிகளிடமிருந்து நமது சபை போதகர்கள் தசம பாகங்களைப் பறிப்பது போன்றவைகள் தேவன் அருவருக்கும் காரியங்கள்! பணக்கார விசுவாசிகளைத் தேடி அவர்களின் வீடுபோய் ஜெபிப்பது தேவனுக்கு அருவருப்பான காரியங்கள்! நாம் நன்மை செய்வதை அறிந்தும் அதை தவிர்ப்பது புதிய ஏற்பாட்டின் அருவருக்கும் காரியங்கள்! இன்றைக்கு ஆட்டங்கள், கேளிக்கைகள் போன்ற அருவருப்பான காரியங்கள் அநேக சபைகளில் நடந்துவருகிறது. நமது சபைகளிலும், வீடுகளிலும் ஆதிகால சபைகளில் நடந்த அற்புதங்கள் நடக்காமல் இருப்பதிற்கு நாம் தான் காரியம்!

நாம் ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்த விதமான கூடாரங்களை வைத்திருப்பவர்களின் மேல் நம்பிக்கை வைத்து ஒரு சந்தேக கோட்டைக்குள் தள்ளப்படுகிறோம். "அருவருப்புகள் நிறைந்த அற்பமான காரியங்கள்" நடக்கும் கூடாரங்களில் தேவனுடைய நாமம் மகிமைப்படாது.

நம்மால் ஜெபிக்கக்கூடாத சந்தர்ப்பத்தில் நமக்காக ஜெபிக்கும்படி நமக்கு தெரிந்த தேவ பிள்ளைகளை ஜெபிக்க வேண்டிக்கொள்ளலாம். ஆனால், உங்களைப்பற்றி அறியாத ஒரு சுவிசேடகனுக்கோ, ஊழியக்காரனுக்கோ கடிதம் அல்லது மின்னஞ்சல் (email) எழுதி ஜெபிக்கச் சொன்னால், அந்த சுவிசேடகன் அல்லது ஊழியர் எப்படி பாரத்தோடு ஜெபிக்கக்கூடும்? ஜெபிக்க கடிதம் அல்லது மின்னஞ்சல் அனுப்பிய தேவ மக்களுக்கு அந்த ஊழியரின் அலுவலகத்திலிருந்து பதில் அனுப்பி அந்த ஊழியரின் பணத்தேவைகளை அறிவித்து, காணிக்கை, நன்கொடை வாங்குவது தேவனுக்கு "அருவருப்பான காரியம்". ஜெபம் என்பது ஒரு வர்த்தக தொழிலல்ல! கீழ்கண்ட வசனங்களை தியானிக்கவும்.

"ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்" (கலாத்தியர் 6:2).

" உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது"

(யாக்கோபு 5:14-16). இதுதான் ஜெபிக்கும் முறமைகள்!

சபையின் மூப்பர்கள் உங்களுக்காக எண்ணெய்பூசி ஜெபிக்கவேண்டும். பின்பு ஒருவருக்கொருவர் தங்கள் குற்றங்களை அறிக்கையிட்டு ஜெபம்பண்ணவேண்டும். தேவ மக்கள் அறிய வேண்டியது என்னவென்றால், உங்களைப் பற்றி தனிப்பட்டமுறையில் அறியாத ஊழியனிடமிருந்து ஜெப எண்ணெய் வாங்கவேண்டிய அவசியமில்லை. ஜெபத்திற்காக எந்த ஊழியரின் அலுவலுகத்தில் போய் ஜெபிக்கவேண்டிய அவசியமும் இல்லை.

நீங்கள் எந்த சபையில் அங்கத்தினராக இருந்தாலும், தேவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவரின் வேதத்தை தியானித்து, அவரின் வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுத்து, அவருக்கு கீழ்ப்படிந்து, அந்த சபையில் இருக்கலாம். இன்று எந்த சபையோ பூரணமானது அல்ல! நீங்கள் எந்த சபையில் இருக்கறீர்களோ அங்கே குறைகள் இருந்தாலும், அங்கேயுள்ள போதகருக்காகவும் மக்களுக்காகவும் ஜெபித்துக்கொண்டும், உங்களால் அவர்களுக்கு உதவிகள் செய்துக்கொண்டும் இருக்கலாம். முடிந்தவரை எல்லா சத்தியங்களையும் அறிந்துக்கொண்டு உங்களால் முடிந்தமட்டும், விவேகத்துடன், கள்ள உபதேசங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொண்டும், ஜெபித்துக்கொண்டும், அந்த சபையிலே இருக்கலாம்.

நம்பிக்கையற்றவன் என்ற அரக்கனின் கையில்

மழையிலிருந்து தப்புவதற்காக ஒரு பாறை இடுக்கினுள் சென்று அமர்ந்தார்கள். களைப்பு மிகுதியால் அப்படியே உறங்கிவிட்டார்கள்! அவர்கள் தங்கிய இடத்துக்குச் சற்றுத் தொலைவில் தான் சந்தேகக் கோட்டை என்ற கோட்டை இருந்தது. நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன் தனது மனைவியோடு அங்கே வசித்து வந்தான்.மறுநாள் காலை. தனது நிலத்தைச் சுற்றிப் பார்க்க வந்த அரக்கன் தூங்கிக்கொண்டிருக்கும் இருவரையும் கண்டு கடும் கோபம் கொண்டான். யாரது, எனது நிலத்தில் படுத்து உறங்குவது? என்று கர்ணகடுரமான குரலில் கேட்டான். திடுக்கிட்டு விழித்த இருவரும் அரக்கனைக் கண்டு பயந்து நடுநடுங்கினார்கள்.ஐயா, நாங்கள் மோட்சத்துக்குச் செல்லும் பயணிகள். வழிதவறி இங்கு வந்துவிட்டோம். தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள், என்று கெஞ்சினான் கிறிஸ்தியான். ஆனால் அரக்கனோ அவர்களைப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கோட்டையிலுள்ள பாதாளச் சிறையில் அடைத்துவிட்டான்! மூன்று நாட்கள் இரவும், பகலும் அவர்களைத் திரும்பியே பார்க்கவில்லை! உண்ண உணவு கிடையாது! குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை! பாறாங்கல் தரையில், பாதாள அறையின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, சோர்வோடு கிடந்தார்கள் இருவரும்!

அரக்கன் தனது மனைவியிடம் இவர்களைப் பற்றிக் கூறினான். அவிசுவாசம் என்ற அவனது மனைவி மிகவும் கொடூரமானவள். கொஞ்சம்கூட இரக்கம் காட்டாமல் அவர்களை நன்றாக அடிக்கும்படி ஆலோசனை கூறினாள் அவள்.

பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன் தனது குறுந்தடியைக் கொண்டு அவர்களை நையப் புடைந்தான்! ஆனால் அசையாமல் விழுந்துகிடந்த இருவரும் ஒன்றுமே பதில் பேசவில்லை! மறுநாள் இரவு அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்த அவிசுவாசம் தனது கணவனிடம் அவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டுமாறு யோசனை கூறினாள். பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன், நீங்கள் இனித் தப்பிச் செல்ல முடியாது. உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதுதான் ஓரே வழி என்று பயங்காட்டினான்! ஆனால் கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மனம் தளர்ந்துவிடவில்லை! ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டு மேலும் ஒரு நாளைக் கழித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அவிசுவாசம் தனது கணவனை அழைத்து, நீர் இதற்குமுன் இங்கு கொல்லப்பட்டவர்களின் எலும்புகளைக் காட்டிப் பயயமுறுத்தும் என்று கேட்டுக்கொண்டாள். அரக்கன் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏற்கனவே அங்கே கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் காட்டினான். அந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு பயந்தாலும், இருவரும் தற்கொலை செய்துகொள்ள மறுத்துவிட்டார்கள். அரக்கன் அவர்களை மீண்டும் பாதாளச் சிறையில் அடைத்தான்.

அப்போது கிறிஸ்தியான், அடடா, என்னிடம் ஒரு சாவி இருக்கிறதே என்று கூறியபடி ஆண்டவரின் வாக்குத்தத்தம் என்ற சாவியை வெளியே எடுத்தான். இதோ இந்தச் சாவியைக் கொண்டு எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம் என்றான் உற்சாகத்துடன். சரி, வா போகலாம் என்று எழுந்தான் நம்பிக்கை.

இருவருமாக பாதாளச் சிறையின் கதவண்டை வந்தார்கள். கிறிஸ்தியான் வாக்குத்தத்தம் என்ற சாவியைக் கொண்டு பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான்! ஆனால் பெரிய இரும்புக் கதவை அசைப்பது தான் கடினமாக இருந்தது. முழுமுயற்சியோடு கதவைத் திறந்துவிட்டார்கள்! அந்தச் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அரக்கன் விழித்துவிட்டான்.

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தப்பி ஓடுவதைக் கண்ட அரக்கன் அவர்களை விரட்டினான். ஆனாலும் அவனுக்குத் திடீரென மூட்டுவலி வந்துவிட்டது! ஓட முடியாமல் கீழே விழுந்துவிட்டான்! பயணிகள் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு வந்து சேர்ந்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

ஆவிக்குரிய ஜீவியத்தில் வழி விலகிப் போகும்போது சந்தேகக் கோட்டை என்ற கோட்டையிலுள்ள "நம்பிக்கையற்றவன்" என்ற அரக்கன் கைகளில் நாம் விழுந்துவிடுகிறோம். தப்பான தத்துவங்களைப் போதிக்கும் ஊழியக்காரர்களின் சபைகளிலோ, வேறு தப்பான தத்துவங்களைப் போதிக்கும் சுவிசேஷகர்களின் கூட்டங்களிலோ மாட்டிக்கொண்டு ஒரு நம்பிக்கையை இழந்து, ஒரு பெரும் படுகுழிக்குள் தள்ளப்பட்டுவிடுகிறோம். இந்த அரக்கன் கையில் மாட்டிக்கொண்டு, அநேக நாட்களாக துன்புறுத்தப்படுகிறோம். இந்த கோட்டையில் நாம் இருக்கும்போது என்ன நேரிடுகிறது? எதிர் பார்த்தது அல்லது தீர்க்கதரிசனம் உரைத்தது நடை பெறாமல் எல்லாம் தலை கீழாக நடக்கிறது.

"ஆண்டவர் ஏன் பொய்யுரைத்தார்? ஆண்டவர் என் கஷ்டங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கிறாரே! இவருக்கு கண் இல்லையா! என் பாஸ்டர் சொன்ன படியெல்லாம் செய்துவிட்டேனே! ஒழுங்காக சபை கூட்டங்களுக்கு வருகிறேன், தசம பாகம் ஒழுங்காக கொடுக்கிறேன். பின், எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கிறது! பாஸ்டர் எத்தனை முறை என் தலை மேல் கைகள் வைத்து ஜெபித்தபின் எனக்கு ஏன் இந்த தீராத வியாதி வாட்டிக்கொண்டிருக்கிறது? தேவனின் சித்தத்தை அறிந்துகொள்ளும்படி நான் போகாத தீர்க்கதரிசிகள் இல்லையே! ஏன் ஆண்டவர் என்னோடு பேசமாட்டேங்கிறார்? பத்து நாட்களில் நடக்கும் என்று உரைத்த தீர்க்கதரிசனம் ஏன் இன்னும் நிறைவேறவில்லை? எனக்கு இப்போது மடிந்து போகாமல் வேறு வழியில்லை," என்று புலம்புகிறீர்களோ? இந்த குகையில் உங்களுக்கு ஒரு ஆவிக்குரிய ஆகாரமும் ஜீவ தண்ணீரும் கிடைக்காமல் நொந்துகொண்டிருக்கிறீர்களோ?

இந்த குகையில் இதற்கு முன்னால், ஆண்டவரை மறுதலித்து ஆவிக்குரிய ஜீவியத்தில் மரித்து பிணமான அநேகரை உங்களுக்கு சாத்தான் காண்பித்து, உங்களது விசுவாசத்தைப் பலவீனப்படுத்துவான். இந்த அரக்கனை வழி நடத்துவது சாத்தான்தான்! இப்போது உங்கள் கையிலிருப்பது தேவன் உங்களுக்கு கொடுக்கும் வாக்குத்தத்தமான திறவுகோலை எடுத்து, நீங்கள் அடைபட்டு கிடைக்கும் பாதாள குகையை திறக்கவேண்டும். இந்த வாக்குத்தத்தை அறிய வேண்டுமானால் உங்களது கையிலுள்ள சுருளை எடுத்துப் படித்து, 'ஜெபம்' என்ற ஆயுதத்தை எடுக்கவேண்டும். இப்போது நீங்கள் வாசிக்கும் தேவனின் வாக்குத்தங்களை, இதற்கு முன்பாக உங்களுக்கு கள்ள போதர்கள் மூலமாக உங்களுக்கு இதற்கு முன்னே அருளப்பட்டிருக்காது. பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டபின், இரும்புக் கதவை அசைப்பது தான் கடினமாக இருக்கும். எனென்றால், உங்கள் மனதில் ஏற்கனவே கள்ள ஊழியர்களின் மூலமாக கிடைத்த வாக்குத்தந்தங்கள், கள்ள போதனைகள், உங்களை தேவ வசனத்தை நம்பவிடாமல், தேவனின் மகத்துவத்தையும், அவரின் வல்லமையையும் அறியாமலிருக்கும்படி, சத்துரு போராடுவான்! தேவனோடு நீங்கள் நேரடியான தொடர்பு வைக்கவிடமாட்டான்! உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தர் அவசியம் என்று உங்கள் காதுகளில் ஊதுவான்!

நீங்கள் விடாப்பிடியாக கதவை திறக்கும்போது, அரக்கனின் பிடி தளர்ந்து விடும். "அவனுக்கு மூட்டு வலி வந்துவிட்டது," என்று அருமையாக ஜான் பண்ணியன் விவரித்திருக்கிறார். இந்த அரக்கனை நீங்கள் அழிக்க முடியாது. தப்பித்தான் செல்லமுடியும். நீங்கள் சென்ற பாதையில் இன்னும் அநேகர் வருவார்கள். உங்களின் சாட்சி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் இருக்கட்டும்.

உங்கள் சபையில் எதாவது கள்ள அல்லது தப்பான உபதேசம் இருக்குமானால், அதை பகுத்தறிந்து (discernment) அந்த தத்துவத்தை நிராகரிக்கவேண்டும். இன்று எந்த சபையோ பூரணமானது அல்ல. இந்த அரக்கனின் கையிலிருந்து தப்பினால் போதும்.

மூன்று விதமான அரக்கர்கள்

இந்த அரக்கனை உண்டு பண்ணியது அபொல்லியோன் தான். நாம் மூன்று விதமான அரக்கர்களை மோட்சப்பயணத்தில் காண்கிறோம். முதலாவது நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன். இந்த நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன் நமது மனதில் சந்தேகங்களை, கவலைகளை எழுப்பி, நம்மை அவனது அறையில் அடைத்து வைக்கிறான். இரண்டாவது "காயப்படுத்தும் அரக்கன்" (Giant Maul). இந்த அரக்கன், இளம் பயணிகளை, வீணான நியாயமற்ற எதிர் வாக்குவாதங்களில் ஈடுபடுத்தி அவர்களை விசுவாசப் பாதையிலிருந்து விலக்கி, கெடுத்திருக்கிறான். மூன்றாவது, பெலவீனரை அழிக்கும் அரக்கன் (Slay-the-good Giant). அதாவது நல்லவர்களை பெலவீனப்படுத்தி அழிக்கும் அரக்கனாகிய இவன் எல்லா அரக்கர்களைவிடவும் கொடூரமானவன். இவன் நம்மை கள்ளப் போதகத்தினாலும், சத்திய வேதத்தின் சத்தியங்களை புரட்டுவதினாலும், கள்ள தீர்க்கதரிசனங்களாலும், நமது ஆத்துமாவை வஞ்சித்து, விசுவாச ஜீவியத்திலிருந்து பிரித்து, வேறு ஒரு கிறிஸ்துவினிடம் (அந்திகிறிஸ்துவினிடத்தில்) வழி நடத்தும் கொடூரமான அரக்கன். கடைசி அரக்கன் (Slay-the-good Giant) வெளிப்படுத்ததலின் கூறப்பட்ட ஒரு கள்ள தீர்க்கதரிசி (False Prophet). இந்த மூன்றுபேர்களும் அபொல்லியோனிடமிருந்து வந்தவர்கள் தான். இவர்களை நாம் சந்தித்தே ஆகவேண்டும். கடைசியில் குறிப்பிடட இரண்டு அரக்கர்களை பற்றி நாம் மோட்சப்பயணத்தின் இரண்டாம் பாகத்தில், கிறிஸ்டினாவின் வாழ்க்கை வரலாற்றில் படிக்கலாம்.இவர்கள் நம்மை அழிக்காமல் இருக்கவேண்டுமானால், பரிசுத்தாவினவரின் உதவியோடும், வழிநடத்தலுடனும், சுருளை கையில் ஏந்தி, சுலபமாகத் தப்பிவிடலாம். இவர்களை நாம் சந்திப்போம். ஆனால், இவர்கள் ஏற்கனவே தோற்க்கபடிக்கப்பட்டவர்கள். மூன்றாம் அரக்கனோடு போராடும்போது, சுருளை கையில் ஏந்தி அதை பட்டயமாக வைத்து, அவனை வெல்லவும். நமது இருதயத்தில் ஏற்கனவே விதைக்கப்பட்ட, கள்ள தத்துவங்களை (False Doctrines) களைந்து எறிந்து (Unlearning Process), உண்மையான தத்துவங்களைக் (Right doctrines) கற்றுக்கொள்ளவும். சபைகளில் கற்றுக்கொண்ட வேதத்திற்கு புறம்பான பாடங்களை மனத்திரையிலிருந்து அப்புறப்படுத்தவும். கிரேட் ஹார்ட் அல்லது பொருள்கூறுபவர் (Interpreter) போன்ற உண்மையான தீர்க்கதரிசைகளை, வனாந்தரத்தில் நாடிச் செல்லவும். இவர்கள் கர்த்தரால் வனாந்தரத்தில் மறைக்கப்படட தீர்க்கர்கள். இவர்களை சபைகளின் பிரசங்கமேடைகளிலிலோ, சின்ன திரைகளின் மூலமாகவோ, காணமுடியாது. இவர்கள் யோவான் ஸ்நானகனைப் போல், (ஜான் பாப்டிஸ்ட்) வனாந்தரத்தில் மறைக்கப்பட்டு இருப்பவர்கள்.

இவர்கள் நம்மை அழிக்காமல் இருக்கவேண்டுமானால், பரிசுத்தாவினவரின் உதவியோடும், வழிநடத்தலுடனும், சுருளை கையில் ஏந்தி, சுலபமாகத் தப்பிவிடலாம். இவர்களை நாம் சந்திப்போம். ஆனால், இவர்கள் ஏற்கனவே தோற்க்கபடிக்கப்பட்டவர்கள்.

மகிழ்ச்சி மலையில் பயணிகள்

அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலைக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். பழ மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் அமர்ந்து களைப்பாறினார்கள்.மலையுச்சியில் அறிவு, ஞானம், கவனம், தங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். பயணிகளைக் கண்டவுடன் அவர்களை அன்போடு வரவேற்றார்கள். உணவளித்து உபசரித்தர்கள். கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு விவரமாகக் கூறினார்கள். அவற்றை ஆவலோடு கேட்ட மேய்ப்பர்கள் இரவு தங்கிப் போகும்படி வேண்டிக் கொண்டார்கள். அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் இரவைக் கழித்தார்கள்.

மறுநாள் காலையில் எச்சரிக்கை என்ற பெயரையுடைய குன்றுக்கு அழைத்தச் சென்றார்கள். அங்கிருந்து பார்த்தபோது சற்றுத் தொலைவில் கண்பார்வையற்ற சிலர் கல்லறைகளுக்கு நடுவே தட்டுத் தடுமாறியவாறு சுற்றிவருவது தெரிந்தது!

யார் இவர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.

இந்த மலைக்கு வரும் வழியில் கற்பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை இருந்ததல்லவா? அந்தப் பாதையில் சென்று, சந்தேகக் கோட்டை என்ற கோட்டையின் அரக்கனுடைய கையில் பிடிபட்டவர்கள் தாம் இவர்கள். அவன் இவர்கள் கண்களைக் குருடாக்கி இப்படி அலையவிட்டுவிட்டான் என்றார்கள் மேய்ப்பர்கள்.

திடுக்கிட்ட கிறிஸ்தியானும், நம்பிக்கையும் ஒருவரையொருவர்பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் கண்கள் கலங்கின! தங்களைக் காப்பாற்றிய ஆண்டவரை எண்ணித் துதித்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலை என்பது ஒரு ஆவிக்குரிய கூடுகையை குறிக்கிறது. "இந்த மலையுச்சியில், அறிவு, ஞானம், கவனம், என்ற மேய்ப்பர்கள், தங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். பயணிகளைக் கண்டவுடன் அவர்களை அன்போடு வரவேற்று. உணவளித்து உபசரித்தார்கள்". இதுதான் ஒரு உண்மையான ஆவிக்குரிய கூடுகை. இது ஒரு ஆவிக்குரிய மலை உச்சியை அடைந்து, ஒரு தேவ தரிசனத்தை பெற்றக் கூட்டத்தார். இவர்கள் அறிவு, ஞானம், கவனம் என்ற மூன்று குணாதிசயங்களைப் பெற்ற ஊழியர்கள். இவர்களை, ஜான் பண்ணியன், மேய்ப்பர்கள் என்று குறிப்பிடுகிறார். இவர்கள், நரக பாதை வழி போய் அழிந்தவர்களை பற்றியும், நரகத்தைப் பற்றியும், பிரசிங்கிப்பார்கள். இவர்கள் எச்சரிக்கை செய்யும் உண்மையான தீர்க்கதரிசிகள்.

இன்று அநேக தேவபிள்ளைகள் சந்தேகக் கோட்டையின் அரக்கனுடைய கையில் பிடிபட்டு தங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் குருடராகி நமது சபைகளில் நிறைந்து இருக்கிறார்கள். இவர்களின் கண்களைத் திறக்க நாம் ஜெபித்து வழிநடத்தவேண்டும்.

நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி

மேய்ப்பர்கள் பயணிகள் இருவரையும் மலையின் அடியிலிருந்து ஒரு கதவண்டை அழைத்துச் சென்றார்கள். கதவைத் திறந்த உள்ளே பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். உள்ளே மிக ஆழமான பள்ளம் காணப்பட்டது. கருமை நிறப் புகை வெளிக்கிளம்பியது! நெருப்பு எரிகிற இரைச்சலும் கேட்டது! வேதனையில் புலம்புகிறவர்களின் கூக்குரல் எழுந்தது! இது எந்த இடம்? என்று கேட்டான் கிறிஸ்தியான். இது நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி, பாசாங்கு செய்பவர்களின் வாசல் என்று இதற்குப் பெயர் என்று விளக்கினார்கள் மேய்ப்பர்கள். தங்களின் ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவர்களாக இல்லாமலும், பணஆசையால் யேசுவை காட்டிக்கொடுத்த யூதாசைப்போல இல்லாமலும், தங்கள் நல்மனச்சாட்சியைத் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி சுவிசேஷத்தை தூஷணம் செய்த இமெனென் அலெக்சாண்டர் (Hymenaeus and Alexander) போன்றவர்களாக இல்லாமலும், பண ஆசையால் பரிசுத்தாவியானவரிடம் பொய் சொன்ன அனனியா சப்பீராள் போன்றவர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும்மென்று மேய்ப்பர்கள் பயணிகளுக்கு எச்சரித்தனர். பிறகு பயணிகளை தெளிவு என்ற மலைமுகட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு தொலைநோக்கியை அவர்கள் கையில் கொடுத்து, இதோ இதன்மூலம் பார்த்தால் மோட்சத்தின் வாசல் தெரியும் என்று கூறினார்கள். ஆனால் பதட்டத்தின் காரணமாகப் பயணிகளின் கை ஆடியது! அதனால் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை!

பயணிகள் மேய்ப்பர்களிடமிருந்து விடைபெறும் வேளை வந்தது. மேய்ப்பர்களில் ஒருவன் அவர்கள் இனிச் செல்லவேண்டிய பாதையின் வரைபடம் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்தான். மற்றறொருவன் முகத்துதி என்பவனைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஆலோசனை கூறினான், மூன்றாமவன் மயக்க நிலத்தில் படுத்து உறங்கிவிடாதீர்கள் என்று எச்சரித்தான். நாலாமவன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! என்று கூறி வழியனுப்பி வைத்தான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இந்த மூன்றுவிதமான மேய்ப்பர்கள் பயணிகளை 'தெளிவு' (Discernment) என்ற மலைமுகட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். இவர்கள் நமது ஆவிக்குரிய கண்களை திறப்பார்கள். இவர்கள் இனிச் செல்லவேண்டிய பாதையின் வரைபடம் ஒன்றை பயணிகளுக்கு கொடுப்பார்கள். இவர்கள் உங்களிடம் எந்தவிதமான தசம பாகத்தையோ, காணிக்கையோ எதிர்பார்க்கமாட்டார்கள்.

இவர்கள் "முகத்துதி" என்பவனைக் குறித்து எச்சரிப்பார்கள். நம்மை முகத்துதி செய்து, மோட்ச பாதையிலிருந்து விலகி போகச்செய்யும், கள்ள ஊழியர்களை குறித்து எச்சரிப்பு செய்வார்கள். மகிழ்ச்சி மலையை அடைந்தாலும் பாவ படுகுழிக்குள் விழந்து மோட்சப்பட்டணத்தை இழக்க நேரிடும். பண்ணியன் கொடுக்கும் நான்கு பெயர்களின் உதாரணங்களை அறியவேண்டும். நாம் பாசாங்கு செய்பவர்களாக மாறி, பாவ படுகுழிக்குள் விழ வாய்ப்பு இருக்கிறது.

ஆவிக்குரிய அனுபவங்களில் மகிழ்ச்சி மலையை அடைந்தாலும், நரகத்திற்குப்போக வழி இருக்கிறது. யூதாசைபோல பண ஆசை இருக்கக்கூடாது. ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போல, உலக சிற்றின்பங்களுக்கு அடிமையாகி இரட்சிப்பை நாம் இழந்துவிடக்கூடாது. விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி, சுவிசேஷத்தை தூஷணம் செய்த இமெனென், அலெக்சாண்டர் போல நாம் மாறிவிட்டால் மோட்சப்பட்டணத்தை இழந்துவிடுவோம். பண ஆசையால் பரிசுத்தாவியானவரிடம் பொய் சொன்ன அனனியா, சப்பீராள் போல நாமும் துணிகரமாக பரிசுத்தாவியானவரிடம் பொய் சொல்லி இத்தனை வருடங்கள் ஆண்டவருக்கென்று ஜீவித்து, கடைசிக் கட்டத்தில் நமது பந்தயப்பொருளை இழக்க நேரிடும். "பாம்பு ஏணி" விளையாட்டில் 99ம் கட்டத்திலிருந்து நூறாம் கட்டத்தை அடையும் முன்னால் சர்ப்பமான சாத்தான் கடித்து உங்களை கீழே கொண்டுவர முயற்சிப்பான். ஆகவே நீங்கள் கவனத்தோடு ஓட்டத்தை ஓட்டி முடிக்கவும்.

கிறிஸ்டியானும் நம்பிக்கையும் அறியாமை என்ற பயணியுடன்

மகிழ்ச்சி மலையை கடந்து மோட்சத்தை நோக்கி போகும்வழியிலுள்ள நெசுஞ்சாலையில், ஒரு சுறுசுறுப்பாக வரும் வாலிபனை கிறிஸ்டினானும் நம்பிக்கையும் சந்திக்கிறார்கள். அவனது பெயர் அறியாமை என்பதாகும். அவன் பெருமையின் தேசத்தைத் (country of Conceit) சேர்ந்தவன். அவனும் மோட்சப்பட்டணத்தை நோக்கிச்செல்லும் பயணி என்று அறியவருகிறது. அவனது தேசத்திலிருந்து ஒரு குறுகிய தெரு இருக்கிறது. அவன் இந்த தெருவின் வழியாக இந்த நெசுஞ்சாலைக்கு வந்திருக்கிறான். அவன் நுழை வாசல் Wicket Gate வழியாக வராமல் இந்த தெருவின் மூலமாக வந்தவன். "நான் ஆண்டவரின் சித்தத்தை அறிந்தவன். பிரார்த்தனை பண்ணுகிறேன். உபவாசம் இருக்கிறேன். தசமபாகம் கொடுக்கிறேன். தானமும் கொடுக்கிறேன்" என்று கூறுகிறான். கிறிஸ்டியான் அவனை நோக்கி அவன் நுழைவு வாசல் மூலமாக வராததால் மோட்சபட்டணத்தின் வாசலில் நுழையமுடியாது என கூறுகிறான். அறியாமை பதிலாக இந்த நுழை வாசல் Wicket Gate தனது தேசத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பதாகவும், ஆனால் அவனது தேசத்திலிருந்து வரும் ஒரு இனிமையான பசுமை பாதை மோட்சப்பட்டணத்திற்கு வழி காட்டும் என்று கூறுகிறான். கற்றுக்கொள்ளும் பாடம்

இன்று "அறியாமை" போன்ற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தாங்கள் தேவசித்தத்தின்படி சரியான பாதையில் மோட்சப்பட்டணத்தை நோக்கிப்போய்க்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆலயங்களுக்குச்சென்று, ஒழுங்காக தசமபாகம் கொடுத்து, உபவாசம் எடுத்து ஜெபித்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு, கிறிஸ்துவாகிய நுழை வாசல் வழியாக நுழையாமல், பெருமையின் தேசத்திலிருந்து வரும் குறுகிய தெருவின் மூலமாக மோட்சப்பாதையை அடையலாம் என்று எண்ணுகிறார்கள். கிறிஸ்துவின் மூலமாக அற்புதங்களையோ, தெய்வீக சுகங்களையோ பெற்றுக்கொண்டவர்களாக இருக்கலாம். மனம் திரும்பி, பாவத்திற்கு மரித்து மறுபடியும் பிறந்து, ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிக்காமல், இன்னும் பழைய வாழ்க்கையிலே ஜீவித்துக்கொண்டிருக்கலாம். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படாமல் இந்த உலகத்தில் அவர்களுக்குத் தோன்றும் "இனிமையான பசுமை பாதை" அவர்களை மோட்சபட்டணத்திற்கு கொண்டுப்போய் சேர்க்கும் என்று ஏமாந்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இந்த அறியாமையிலிருந்து விடுபடவேண்டுமானால், தங்களுக்கு கொடுக்கப்பட்ட சுருளை எடுத்துத் தியானித்து, இயேசுவின் பாதத்தில் தனியாக அமர்ந்திருந்து, அவரின் சத்தத்தை கேட்கவேண்டும். இன்று அநேகர், பெரிய கூட்டத்தில் போய் உட்கார்ந்து பிரசங்கியார் என்ன சொல்லுவார் என்று எண்ணி எங்கேயோ ஓடிப் போகிறார்கள்.

தமிழ் நாட்டில், ஓரு பெரிய கூட்டத்தார் தங்களுக்குப்பிடித்த சுவிசேடர்களின் வார்த்தைகளை கேட்டும்படி அமர்கிறார்கள். அவர்கள் கூறுவதை அப்படியே நம்புகிறார்கள். ஆனால், இவர்களோ இயேசுவின் பாதத்தில் அமைதியாக அமர்ந்து அவரது சத்தத்தை கேட்டார்களோ என்ற சந்தேகம்!

போக்கரிகளின் கைகளில் பலவீன விசுவாசம் என்ற பயணி

இந்த காட்சிக்குப்பின்பு கிறிஸ்டியான் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறான். பலவீன விசுவாசம் என்ற பயணி நேர்மை என்ற பட்டணத்தில் வசித்தான். இவன் வழித்தவறி இந்த வழியில் மரித்தவர்களின் தெரு (Dead Man's Lane) என்ற ஒரு விசாலமான தெருவில் (Broad-way Gate) உட்கார்ந்து மறந்து உறங்கிவிட்டான். இந்த தெரு ஒரு கொலைகள் நடக்கும் இடம். இங்கே போக்கிரிகளான மூன்று சகோதரர்கள் பலவீன விசுவாசத்தை கொள்ளையடித்தனர். அந்த போக்கிரிகளின் பெயர்கள் பயந்த இருதயம் (Faint - heart), அவநம்பிக்கையை (Mistrust), குற்றவுணர்வு (Guilt) என்பதாகும். அவனிடமுள்ள நகைகளை சூறையாடாமல் அவன் செலவிற்கு வைத்திருக்கும் பணத்தை மாத்திரம் எடுத்துச்சென்றனர். இந்த கள்வர்கள் அவனை அடித்து குற்றுயிராக்கினர். அப்போது "நல்நம்பிக்கை" என்ற பட்டணத்திலிருந்து மகா கிருபை நடந்து வரும் நடையோசையை கேட்டு இந்த போக்கிரிகள் ஓட்டம்பிடித்தனர். அவனது நகைகளை அந்த கள்வர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் பணம் மாத்திரம் விட்டுவைத்தார்கள். இந்த பணம் இந்த ஏழை பயணிகளின் மோட்சப்பயணத்தின் வழிச்செலவுற்கு பற்றாது. பிச்சைதான் எடுக்கநேரிடும். அவனால் நகைகள விற்று சாப்பாட்டிற்கு செலவு செய்யமுடியாது. ஒருநல்ல காரியம் என்னவென்றால், அவனது மோட்சபட்டணத்தின் சான்றிதழை அவர்கள் எடுத்துக்கொண்டுபோகவில்லை. இது அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மோட்ச வாசலில் நகைகளை இழக்காமல் இருந்ததால் அவனுக்கு கிடைக்கவேண்டிய சேஷ்டபுத்திரபாகத்தை காத்துக்கொண்டான். ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் ஈசாவை போல இவன் நடந்துகொள்ளவில்லை. இவனுக்கும் ஏசாவுக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. ஏசா தன் வயிற்றை காக்கும்படி சேஷ்டபுத்திரபாகத்தை இழந்துவிட்டான். ஏசாவிற்கு இவனை போல கடுகளவு விசுவாசம் கிடையாது. ஏசா தனது மாமிச இச்சைகளை நிறைவேற்றினான். ஆனால் இவனோ தனது பலவீன விசுவாசத்தைக் காத்துக்கொண்டான்.

மகா கிருபையின் முகத்தில் காயங்களின் அடையாளங்கள் இருக்கின்றன. எப்போதெல்லாம், தனது விசுவாசத்தில் பலவீனரான பிள்ளைகள், இந்த போக்கிரிகளின் கைகளில் மாட்டிக்கொள்கிறார்களோ, பரம அரசன் அவர்களுக்கு உதவுகிறார்.

விசுவாச துரோகம் என்ற பட்டணத்தைச்சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியர்

இவர்கள் மூன்று பேரும் முன்னே செல்லும்போது, ஒரு இருண்ட தெரு தோன்றுகிறது. அந்த தெருவில் காணும் காட்சி கிறிஸ்தியானையும் நம்பிக்கையையும் அதிர வைக்கிறது. ஏழு பிசாசுகள், ஒரு மனிதனை ஏழு கயிறுகளால் கட்டி, மலையின் பக்கத்திலிருந்து பாதாள சுரங்கத்திற்குள் கொண்டு செல்லும் கதவுக்கு நேராக இழுத்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த மனிதன் "விசுவாச துரோகம்" (Apostacy) என்ற பட்டணத்தைச்சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியர் என்று அந்த மனிதனின் முதுகில் எழுதப்பட்டிருப்பதாக நம்பிக்கை கூறுகிறான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"பயந்த இருதயம்" என்ற கொள்ளையன் பயந்த இருதயமுள்ள தேவமக்களுக்கு தேவ வசனத்தின்மேல் நம்பிக்கை வைக்காமல் மனிதர்களின்மேல் நம்பிக்கை வைக்க வழிநடத்துகிறான். அநேக ஊழியர்கள் தங்களை கிறிஸ்துவுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மத்தியஸ்தகர்களாகக் காண்பித்து, நீங்கள் தேவனின் மேல் விசுவாசிக்காமல், சாத்தானை வைத்து பூச்சாண்டி காண்பித்து, உங்கள் இருதயத்தில் பயத்தை விளைவிக்கிறார்கள்.

"அவநம்பிக்கை" என்ற கொள்ளையன் உங்களை தேவன் மேல் முழு இருதயத்தோடு நம்பிக்கை வைக்க விடாமல் அவநம்பிக்கையை, உண்டுபண்ணுகிறான். அதாவது, தேவன் மேல் அவநம்பிக்கையையும் தன்மேல் நம்பிக்கையும் வரச் செய்கிறான். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை (மத்தேயு 22 37-38).

"குற்றவுணர்வு" என்ற மூன்றாம் கொள்ளையன் நீங்கள் பாவிகள் என்ற குற்றவுணர்வை மாத்திரம் வரச்செய்து உங்களுக்கு பாவத்திலிருந்து வெற்றிபெறும் ஜீவியத்தைக்குறித்துப் போதிக்கமாட்டான். இவன் உங்களின் பழைய ஜீவியத்தைச் சுட்டிக்காட்டி குற்றவுணர்வை உங்கள் உள்ளத்தில் உருவாக்கி இவனது ஜெபத்தினாலும், செய்திகளினாலும் நீங்கள் பாவ ஜீவியத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்று போதிப்பான். தேவனுக்கும் உங்களுக்கும் இடையில் தன்னை ஒரு மத்தியஸ்தராக காண்பிப்பான்.

இந்த மூன்று கொள்ளையர்கள் உங்களது பலவீன விசுவாசத்தை தாக்கி உங்களின் ஆத்துமாவை பலவீனப்படுத்துகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த உங்களின் பணத்தை திருடிக்கொள்கிறார்கள். "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்" (யோவான் 10:10).

உங்களை பயந்து நடுங்கவைத்து அவநம்பிக்கையையும், குற்றவுணர்வையும் உருவாக்கி உங்களின் மதிக்கப்படாத விசுவாசத்தை இழக்க வைக்கிறார்கள். இப்படி உங்கள் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தி, தங்களுக்கு ஆதாயமாக உங்களின் பணத்தையும் சூரையாடுகிறார்கள். ஆனால், உங்களின் நகைகளான சேஷ்டபுத்திரபாகத்தையும், இரட்சிப்பின் சான்றிதழையும் இழக்காமல் தேவன் தனது கிருபையால் காத்துக்கொள்கிறார். மகா கிருபையான கிறிஸ்து இயேசு தனது காயங்களைக்காண்பித்து சாத்தானையும் அவன் அனுப்பும் இந்த கள்ள தீர்க்கதரிசிகளான கொள்ளையர்களையும் விரட்டியடிக்கிறார்.

இன்று தேவபிள்ளைகளின் பணத்தின்மேல் தான் அநேக ஊழியர்கள் கண் வைக்கிறார்கள். தேவ பிள்ளைகளை தங்களது சேவைக்காக காணிக்கை, தசமபாகம் கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறார்கள். 5000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு ஏழை விசுவாசியை, தசமபாகம் 500 ரூபாய் கொடுத்தால், 4500 ரூபாய் வைத்துதான் குடும்பம் நடத்தவேண்டும். அப்போஸ்தலனான பவுல் பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் பொருள்சகாயம் செய்ய விரும்பினார். இன்று நடப்பதோ பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரிடமிருந்து தசமபாகம் என்ற பெயரில் பணம் பறிக்கப்படுகிறது. செல்வந்தராகயிருக்கும் பரிசுத்தவான்களைவிட ஏழை விசுவாசிகள் சரியாக தங்கள் வருமானத்தை சபை போதகருக்கு தெரிவித்து தசமபாகத்தை சரியாக கொடுக்கிறார்கள். இவர்கள் கஷ்டத்துடன் தங்களின் குடும்பங்களை நடத்திவருகிறார்கள். பண்ணியன் எழுதியபடி, இந்த பணம் இந்த ஏழை பயணிகளின் மோட்சப்பயணத்தின் வழிச்செலவுற்கு பற்றாது.

காணிக்கை, தசமபாகம் கொடுத்தால்தான் தேவனிடமிருந்து ஆசிர்வாதம் கிடைக்கும் என்று தேவ மக்களை அவர்களின் கைகளால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இச்சித்து வாங்குவது, கொள்ளை அடிப்பதற்கு சமமாகும். ஆனால், தேவமக்களே முன்வந்து தங்களை தேவனிடத்தில் வழிநடத்திய ஊழியர்களுக்கும் தேவவசனத்தை போதிக்கும் போதகர்களுக்கும் தங்களின் மனப்பூர்வமாக தியாகத்தோடு கொடுக்கும்போது அது பரிசுத்தவான்களுக்கு சேவை செய்யும் ஊழியமாக (Ministry to the saints) கருதப்படுகிறது.

ஒரு ஏழை விசுவசுவாசியிடமிருந்து வலுக்கட்டாயமாக தசமபாகம் வாங்குவது சரியா? "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்" (லூக்கா 6:38). இந்த வசனத்தை குறிப்பிட்டு சபை மக்களை சபை போதகருக்கோ அல்லது சுவிசேடனுக்கோ கொடுக்கும்படி வற்புறுத்துகின்றோம். II கொரிந்தியர், 9 அதிகாரம் 6 -13 வசனங்களையும் தியானிக்கவும். " விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்". "... வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான்..." ".....இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்...."

இந்த வசனங்களை தியானிக்கும்போது, ஏழை பரிசுத்தவான்களுக்கு தர்மசகாயமாகிய பணிவிடை பணியை உற்சாகமாய் செய்யும்படி பவுல் எழுதுகிறார் என்று அறிகிறோம்.

இன்று நாம் இந்த வசனங்களை திரித்து எந்த ஊழியத்தில் எந்த விதமாக விதைக்கிறோமோ நமக்கு அந்த விதமாக ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்கள் நமது மடியிலே மற்றவர்கள் போடுவார்கள் என போதிக்கிறோம். "உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" என்ற பகுதியை குறிப்பிட்டு "தேவன் உங்களை விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" என்று பொய் கூறுகிறோம். "நீதியின்" விளைச்சல் என்று கூறாமல் பண விளைச்சல் என்று கூறுகிறோம்.

ஒரு ஊழியர் ஒரு மெகா சபையில் தேவமக்கள் கைகொட்டி ஆர்வரிக்க இவ்விதம் கூறுகின்றார். "இயேசுவின் மரித்த சரீரத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஒரு செல்வந்தன் தான் முன்வந்தான். ஒரு ஏழைக்கு இந்த சரீரம் கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்பட்டிருந்தால், அவன் அந்த சரீரத்தை வைத்து, அழுது பிச்சை எடுத்திருப்பான். அடக்கம் செய்திருக்கமாட்டான். ஏழைகள் சபைகளுக்கு வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஏழைகள் சபைகளுக்கு வந்தால் அவர்களை தேவன் செல்வந்தர்களாக மாற்றுவார்".

ஏழை பரிசுத்தவான்கள் விசுவாசத்தின் மூலம் ஆண்டவர் அவர்களுக்கு நிச்சயமாக அந்தஸ்த்தோ, சொத்தோ கொடுப்பார். உலக ஆசீர்வாதங்களை பெறும்படி, தேவன்மேல் விசுவாசம் வைக்கும்படி தைரியமாக சபை போதகர்கள் போதனை கொடுக்கலாம். ஆனால், இந்த ஏழை பரிசுத்தவான்களிடமிருந்து, தேவ வசனங்களைச் சுட்டிக்காட்டி, காணிக்கை, தசமபாகம் போன்றவைகளை கொடுத்தால் தான் தேவன் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று போதிப்பது சரியல்ல. இது ஒரு கள்ள போதனை. இப்படி பணம் பறிப்பது பண்ணியன் கூறுவதுபோல ஒரு வழிப்பறியாகும்.

கல்லூரி பேராசிரியர் போன்ற கள்ள ஊழியர்கள்

கள்ள உபதேசத்தால் உண்டாகும் விசுவாச துரோகம் (apostacy) பெருகி வரும் இந்நாட்களில் வெறும் வேத அறிவை (Theology) மாத்திரம் பெற்றுள்ள கல்லூரி பேராசிரியர் போன்ற ஊழியர்களை குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இவர்கள் போதிப்பது வேதத்திலிருந்துதான்! ஆனால் ஒரு கோணலாக போதித்து (From one angle) சத்தியத்தை நீங்கள் அறிந்துக்கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள். இந்த கள்ள போதகனை வழிநடத்துவது சாத்தான்தான்!

ஏழு விதமான பொல்லாத குணங்களுடன் உங்களை ஏழு விதமான கட்டுக்களால் கட்டி பாதாளத்திற்கு நேராக இழுத்துச்செல்கிறான். பெருமை, இச்சை, சுயநீதி, வஞ்சகம், மாயமாலம், பணத்தாசை, பொய் போன்ற ஏழு விதமான குணங்களிலிருந்து நாம் தப்பிக்கொள்ளவேண்டும். ஏழு கட்டுக்கள் என்றால் பலம் வாய்ந்த பிடிப்பு! இந்த பலம்வாய்ந்த பிடிப்பிலிருந்து கல்லூரி பேராசிரியர் போன்ற கள்ள ஊழியர்களை தப்புவிப்பது மிகவும் கஷ்டம். பண்ணியன் இந்த கள்ள ஊழியனைக் குறித்து நமக்கு மிகவும் தெள்ள தெளிவாக வெளிப்படுத்துகிறார். இந்த ஏழு விதமான குணங்களை நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் உண்டாக்கும் எந்த விதமான வேத போதனைகளுக்கும் (Doctrines) நாம் செவிக்கொடுக்கக்கூடாது. இந்த கள்ளப் போதனைகளைக் கொண்டுவரும் கல்லூரி பேராசிரியர் போன்ற ஊழியர்களை அடையாளம் கண்டுக்கொள்ளவேண்டும். நாம் இந்த கள்ள ஊழியர்களின் போதனையைப் பின்பற்றினால், பாவத்திலிருந்து விடுதலை பெறாமல் நரகத்திற்குத்தான் சென்றடைவோம்.

முகத்துதியைச் சந்தித்தல்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன் அருகே வந்து ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டான். பயணிகள் இருவரும் பாதை தெரியவில்லை என்றார்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள், நானும் மோட்சத்திற்குத்தான் போகிறேன் என்றான் அவன். இருவரும் அவனுக்குப் பின்னே சென்றார்கள். அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றபடியால் எந்தத் திசையில் செல்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை! அப்போது இருவரும் ஒரு பெரிய வலையில் சிக்கிக்கொண்டார்கள்! அவர்களால் நகரக்கூட முடியவில்லை! அவர்களை அழைத்துவந்தவர்களின் முகத்திரை விலகியது! அவன்தான் முகத்துதி என்பதைக் கண்டு கலக்கமடைந்ததார்கள்! அவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றான். முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்.

சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்துவிட்டீர்களே! மேய்ப்பன் கொடுத்த வரைபடத்தை எடுத்துப்பார்த்துச் சரியான பாதையை அறிந்திருக்கலாமே! என்று கடிந்து கொண்ட அவர் சாட்டையை எடுத்து அவர்களை அடித்தார்.

தண்டனையை அளித்த பின்பு வாருங்கள் சரியான பாதையை உங்களுக்கு காட்டுகிறேன் என்று அவர்களை அழைத்துச் சென்று சரியான பாதையில் செல்ல வைத்தார். இருவரும் மயக்க நிலத்தை வந்தடைந்தார்கள். காற்றே இல்லாததுபோல காணப்பட்டது! நடப்பதற்கே கடினமாக இருந்தது! நம்பிக்கை சற்று அமர்ந்து ஒய்வெடுக்கலாம் என்று கூறினான்.

மேய்ப்பன் கூறியதை மறந்துவிட்டாயா? இது மயக்க நிலம் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான் கிறிஸ்தியான்.

உறங்கிவிடாதிருக்க ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடந்து, அந்த நிலத்தைக் கடந்துவிட்டார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்".

இன்று நம்மை முகத்துதி செய்து தப்பாக வழி நடத்தும், கள்ள போதர்கள் அநேகர் உண்டு. "நீங்கள் பரலோக ராஜ்ஜியத்திற்கு என்று நியமிக்கப்பட்ட, அபிஷேகம் பெற்ற தேவ பிள்ளைகள். நாங்கள் காண்பிக்கும் வழியை பின்பற்றினால் போதும். நாங்கள் ஜெபித்து உங்களை வழி நடத்துகிறோம். நீஙகள் ஒரு ஆசாரிப்பு கூட்டம்," என்று கூறி முகத்துதி செய்வார்கள்.

இன்று நம்மை கண்டித்து ஆவிக்குரிய சாட்டையை வைத்து அடித்து வழி நடத்தும் உண்மையான ஊழியர்கள் தேவை. இவர்கள் பாவத்தை குறித்தும், நீதியை குறித்தும் உணர்த்துவார்கள்.

"சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே", (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை கூறி இந்த ஊழியர்கள் நமக்கு எச்சரிக்கை செய்வார்கள். நாம் சரியான பாதையில் நடக்காவிடில் வேத வசனமாகிய சாட்டையை எடுத்து நம்மை அடித்து உணர்த்துவார்கள்.

இப்போது, எசேக்கியேல் 14 அதிகாரம் வசனங்கள் 1 முதல் 11 வரை ஜெபத்தோடு தியானிப்போம்.

இங்கே குறிப்பிட்ட இஸ்ரவேலுடைய மூப்பர்கள் யார்? இவர்கள் நமது மத்தியில் நம்மை கிறிஸ்துவினிடம் வழி நடத்துபவர்கள். இவர்கள் தங்கள் "நரகலான விக்கிரகங்களைத்" தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே! இவர்கள் தங்களுக்கு (வற்புறுத்தி வாங்கும்) தசமபாகம், புகழ்ச்சி நாடுதல், முகஸ்துதியை விரும்புதல், மற்றவர்கள் தங்களை கண்ணியம் பண்ண விரும்புதல், ஆடம்பர வாழ்க்கை, தங்களின் பெயர்களை பிரசத்தி படுத்தும் கட்டிடம், ஜெபம் செய்து பலனடைந்த மக்களிடமிருந்து காணிக்கையை அல்லது நன்கொடையை நாடி செல்வது போன்ற நரகலான விக்கிரகங்களை (idols) தேவ மக்களின் முன்பு வைத்து அவைகளை தேவமக்கள் சேவிக்க, இந்த மூப்பர்கள் விரும்புகிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் தூய்மை (holiness) காணப்படாமல் இருக்குமானால் அல்லது கிறிஸ்துவின் குணாதிசயங்கள் இவர்களில் வெளிப்படாமல் இருக்குமானால் இவர்கள் வைத்திருக்கும் கூடாரங்கள் இவர்களின் புகழை மாத்திரம் வெளிப்படுத்தும் விக்கிரங்களாக காட்சியளிக்கும். தேவ மக்களுக்காக ஆராதிப்பற்கு ஆலயம் கட்டினால் அல்லது சுவிசேட பணிக்காக ஒரு கட்டிடம் கட்டவேண்டுமானால் அந்த கூடாரங்களினுள் தங்களது புகப்படங்களை வைத்து அலங்கரித்தால், இந்த கூடாரங்கள் விக்கிர கூடங்களாக மாறிவிடும். இப்படி இவர்கள் இந்த கூடாரங்களை விக்கிரங்களாக மாற்றும்போது, இவர்கள் நமக்காக தேவனிடத்தில் விசாரிக்கத்தகுமா?

இவர்களில் ஒருவன் தேவ வசனமாகிய தீர்க்கதரிசனத்தை வைத்து தேவ சமூகத்தில்

நமக்காக வந்து, நம்மை ஆசிர்வதிக்கும்படி வேண்டிக்கொண்டால் அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக தேவன் உத்தரவு கொடுப்பார். அவர்களின் விக்கிரங்களுக்கு நாம் பலிசெலுத்தும்போது நமக்கு தேவன் பண அபிவிருத்தி கொடுக்கலாம். அது நமக்கு உண்மையான ஆசிர்வாதம் கொண்டுவராது. ஏனென்றால் தேவன் "நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக" உத்தரவு கொடுக்கிறார். அவருடைய நாமத்தில் இவர்கள் ஜெபிக்கும்போது நமக்கு வீடோ, சொத்தோ கிடைக்கலாம். "இயேசுவின் நாமத்தில்" அற்புதங்கள் நடக்கலாம். ஆனால்,

அவர்கள் இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக தேவன் உத்தரவு கொடுக்கிறார்.

அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, தேவனை விட்டுப் பின்போனவர்கள் தான்.

அந்த ஊழியனுக்கு விரோதமாக கர்த்தர் தன் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை தேவ ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து போடுவார்; அவர்களின் வீழ்ச்சி நமக்கு ஒரு அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து கர்த்தர் தம்மை நமக்கு வெளிப்படுத்திக்கிறார். இந்த ஊழியர்களின் ஆடம்பர வாழ்கை, செழிப்பின் உபதேசம் (prosperity gospel), மூலமாக சாத்தான் நமக்கு வைத்திருக்கும் வலையை (NET) குறித்து நாம் எச்சரிக்கையாகயிருக்கவேண்டும்.

கிறிஸ்டியான், நம்பிக்கை ஆன இரண்டு பேரையும் நீங்கள் இந்த படத்தில் காணலாம். தேவ வசனத்தை திரித்து நமக்கு ஆசிர்வாதத்தை கொண்டுவரும் எந்த ஊழியக்காரனும் இங்கே குறிப்பிட்டுள்ள ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவான்! அவனுக்கு விரோதமாக தேவன் தன் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பார். ஜாக்கிரதை!

நீங்கள் எந்த ஆசிர்வாதத்தையும் இவர்களின் ஜெபத்தின் மூலம் பெற்றாலும் அப்படியே அவரவர் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். நமது அக்கிரமத்தை நாம் தான் சுமப்போம்.

நாம் அக்கிரம சிந்தை கொண்டு, பாவத்தின் அடிமையிலிருந்து, ஆசிர்வாதத்திற்காக எந்த ஊழியனிடத்தில் போனாலும் தேவ கோபம் நம்மேல் வரும்.

எங்கே தேவன் வெறுக்கும் விக்கிரங்கள் இருக்கிறதோ, அங்கே நமக்கு உண்மையான ஆசிர்வாதங்கள் இருக்காது. எசேக்கியேல் தீர்க்கன் மேலும் இதை பற்றி உரைப்பதை காணலாம்.

"பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி, என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார், இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்" (எசேக்கியேல் 8:13- 14). தேவன் காணும் அருவருப்புகளை நமது மாமிச கண்களால் காணமுடியாது. ஏனென்றால், நமது மாமிச கண்களுக்கு நமக்கு அவைகள் பரிசுத்தமாக தோன்றும். ஆனால் நமது ஆவிக்குரிய அல்லது தீர்க்கதரிசன கண்கள் மூலம் இவைகளை காணலாம். தேவசமூகத்தில் நாம் அமரும் போது அவைகள் வெளிப்படுத்தப்படும். எசேக்கியேல் தீர்க்கன் ஒன்றாம் அதிகாரத்தில் முதல் வசனத்தில் உரைப்பது "நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்". ஒன்றாம் அதிகாரத்தில் மூன்றாம் வசனத்தில், "கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது" என்று எழுதப்பட்டிருக்கிறது. நாம் இன்று சிறைப்பட்ட தேவ மக்களின் மத்தியில் இருக்கிறோம். அந்த சிறைப்பட்ட மக்களுக்கு நாம் பாரத்தோடு ஜெபிக்கும்போது வானங்கள் திறக்கப்பட, தேவதரிசனங்களைக் காண்கிறோம்; கர்த்தருடைய கரம் நம்மேல் அமர்கிறது.

வேதத்திலுள்ள தீர்க்கதரிசன புத்தகங்களை நாம் உட்கொள்ளும்போது, அதாவது தியானிக்கும்போது பரிசுத்தாவியானவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய ஆலயமாகிய கிறிஸ்துவின் சரீரத்தில்தான், அதாவது தேவமக்களிடத்தில் காணப்படும் "தம்மூசு" வெளிப்படுத்தப்படுகிறது. நாம் ஆண்டவரிடத்தில் அவரது வல்லமைக்காக அல்லது ஆவிக்குரிய வரங்களுக்காக அழுது புலம்புகிறோம்.

நமது வாழ்க்கையில் பாவத்தின் மேல் வெற்றியில்லாமல் ஜீவிக்கும்போது நாம் ஊழியம் செய்வதற்கு பரிசுத்தாவியானவரின் வல்லமையும் வரங்களையும் பெறுவதற்கு முயலக்கூடாது. பாவத்தின் மேல் வெற்றியில்லாமல் உங்களை கூட்டங்களில் கைகளை உயர்த்தி ஆண்டவரின் வல்லமையை நீங்கள் பெறவேண்டுமென்று போதனை அளிக்கப்படும்போது கவனமாகயிருக்கவேண்டும். பாவத்தின்மேல் வெற்றியில்லாமல் இதுபோல கைகளை உயர்த்துவர்களுக்கு சிலுவையிலிருந்து வல்லமை வராது. இப்படி வல்லமையை மாத்திரம் நாடுவீர்களானால், நீங்கள் தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரிகளுக்கு ஒப்பாவீர்கள். வரும் வல்லமை அந்திக்கிறிஸ்துவிடமிருந்துதான்!

"அப்பொழுது அவர், மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி....." (8:15)

"என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார், இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்" (8:16).

அருவருப்புகளின் காரியங்கள் என்னவென்றால், தேவ வல்லமை பெற சூரியனை வழிபடுவது. இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படாமல் வெறும் அவரின் "வல்லமை தாரும் தேவா" என்று அந்த வல்லமையை மய்யமாக்கி அதை நோக்கி ஜெபிப்பதும் அதற்காக ஊழியர்களை தேடி அலைவதும் சூரியனை நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும் (Power without cross).

மேலே கூறியதுபோல கர்த்தருடைய ஆலயத்தில் தான் இஸ்ரவேல் மக்கள் சூரியனை நமஸ்கரித்தார்கள். இன்று நாமும் இதுபோல செய்கிறோம். வேறு எங்கேயும் போய் அந்நிய தேவர்களைத் தேடாமல் இருந்தும், தேவ சமூகத்தில் அழது புரண்டு, அற்புதம் அடையாளம் செய்வதற்கு மாத்திரம் வல்லமை மாத்திரம் நாடுவது நல்லதல்ல. கிறிஸ்துவின் ஜீவனை பெற்று, அவரோடு சிலுவையில் அறையுண்டு, கிறிஸ்துவின் மனதுருக்கத்தால் ஊழியம் செய்யாமல், வெறும் வரங்களால் மாத்திரம் ஊழியம் செய்ய விரும்புவது போன்ற காரியங்கள் தேவன் அருவருக்கும் காரியங்களாகும். இதற்காக 40 அல்லது அனேக நாட்கள் உபவாசம் எடுத்து ஜெபம் பண்ணுவது புதிய ஏற்பாட்டின் சத்தியத்திற்கு புறம்பானது. புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் உபவாசம் எடுத்து வல்லமை பெற்றது கிடையாது.

இன்றுள்ள power ministry அல்லது anointing செமினார் போன்ற கூட்டங்களில் பங்கெடுக்கும்போது, நாம் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும்.

அந்திக்கிறிஸ்துவின் மூலமாக வேறு ஒரு வல்லமையை நாம் பெற இடம் கொடுத்துவிடக்கூடாது. கள்ள ஊழியர்களை நாடி அவர்களின் கைகளின் மூலமாக வல்லமை பெறுவது சூரியனை நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும். இந்த கள்ள ஊழியர்கள் உங்களை விழ வைத்து அந்தித்கிறிஸ்துவின் (Anti-Christ) வல்லமையை உங்களுக்குக் கொடுப்பார்கள். இவர்கள் உங்களுக்காக ஜெபிப்பதும் யேசுவின் நாமத்தில்தான்! போதிப்பதும் வேதத்திலிருந்து தான்! ஆனால் இங்கே கிரியை செய்வது வேறு ஒரு கிறிஸ்துவின் ஆவி.

மயக்க நிலம் கடக்க நாம் முழுக்கவனத்துடன் இருக்கவேண்டும். இன்று நாம்

எல்லாரும் ஒரு மயக்க நிலையில் இருக்கிறோம். வரைப்படமாகிய வேத வசனங்களை நாம் தியானித்து இந்த மயக்க நிலத்தை கடந்து செல்லவேண்டும்.

ஆவிக்குரிய ஜீவியத்தில் உறங்கிவிடாதிருக்க, ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே, அவரின் வார்த்தைகளை தியானித்துக்கொண்டே, மற்ற மோட்சப்பயணிகளை எச்சரித்துக்கொண்டும் அவர்களுடன் கூட ஐக்கியம் (Fellowship) வைத்துக்கொண்டும், நாம்

இந்த மயக்க நிலத்தை கடந்துவிடவேண்டும்.

எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்

மயக்க நிலத்தைக்கடந்து பியூலா தேசத்திற்குள் மோட்சப்பயணிகள் நுழைந்தனர். இந்த தேசத்திலுள்ள காற்று மிகவும் இனிதாகவும் சந்தோஷத்தை அளிப்பதாகவும் இருந்தது. ஒரு காலம் முழுவதும் இங்கே தங்கி தங்களைத்தேற்றிக்கொண்டார்கள். பறவைகளும் பாடும் சத்தத்தைக் கேட்டு, பூக்கள் மலர்வதைக் கண்டும் ஆமையின் குரலையும் கேட்டும் மகிழ்ந்தனர்.இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தரையெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்!இந்த தேசத்தில் சூரியன் இரவிலும் பகலிலும் ஒளி கொடுக்கிறது. இந்த தேசமானது மரண பள்ளத்தாக்கை தாண்டி அமைந்திருக்கிறது. நம்பிக்கையற்றவன் என்ற அரக்கனும் இந்த தேசத்திற்குள் பிரவேசிப்பதுமில்லை. சந்தேக கோட்டையும் இந்த தேசத்திலிருந்து தென்படுவதில்லை. இந்த தேசத்திலிருந்து தங்கள் போகும் மோட்சப்பட்டணம் தென்படுகிறது. இந்த தேசம் மோட்சப்பட்டணத்தின் அருகாமையிருந்ததால் ஒளிவீசும் ஆடையணிந்த மனிதர்கள் இங்கே அலைந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேசத்தில் மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் இடையேயுள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது. மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருகிறார்.

" நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும் (ஏசாயா 62: 4-5). இந்த தேசத்தில் தானியமும், திராட்சைரசமும் குறைவுபடாது. மோட்சப்பயணிகள் வேண்டியதற்கும் மேலாக ஆசீர்வாதங்கள் இந்த தேசத்தில் அனுபவிக்கிறார்கள். இந்த தேசத்தின் குடிமகன்கள் பரிசுத்த ஜனமென்றும். கர்த்தரால் தேடப்பட்டு, மீட்கப்பட்டவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.

இந்த தேசத்திலிருந்து தாங்கள் போகும் தேசத்தை நன்றாக காணமுடிகிறது. அங்கிருந்தபடியே, மோட்சத்தைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்! முத்துக்களாலும், நவரத்தினங்களாலும் கட்டப்பட்டிருந்த அந்தப் பட்டணம் பிரகாசமாக ஒளி வீசியது. தரையெங்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு தகதகவென்று மின்னியது! சூரிய ஒளி அதன்மீது பட்டுப் பிரதிபலிப்பதைக் காண முடியாமல் கூசிய கண்களைப் பொத்திக் கொண்டார்கள் இருவரும்! மோட்சப் பட்டணம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது! கிறிஸ்தியானும் நம்பிக்கையும் மணவாளனின் நேசத்தால் சோகமடைந்திருக்கிறார்கள். "என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்"(உன்னதப்பாட்டு 5 :8).

தோட்டக்காரர் அவர்களை திராட்சத்தோட்டங்களுக்குள் அழைத்து அங்கேயுள்ள பழங்களைப் பறித்து உண்ணும்படி செய்தார். தோட்டக்காரர் அங்கேயுள்ள பரம அரசரின் பாதைகளையும் இளைப்பாறுதல் ஸ்தலங்களையும் காண்பித்தார். அங்கே படுத்து ஒய்வெடுத்தார்கள். மணவாளனின் அன்பில் தங்களை மெய்மறந்து தங்களுக்குள் அவரின் அன்பைக்குறித்து பேசிக்கொள்ளும்போது, தோட்டக்காரர் அவர்களை நோக்கி "யாரெல்லாம் இந்த திராட்சைரசத்தை அதிகமாய் பருகிறார்களோ அவர்கள் மணவாளனைக்குறித்து மேலும் புகழச்செய்யும் தன்மையை இந்த திராட்சைரசம் உடையதாகயிருக்கிறது", என்றுரைத்தார்.

அவர்கள் இந்த மெய்மறந்த நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டபோது மோட்சப்பட்டணத்தை நோக்கி பயணத்தைத் தொடர திடன்கொண்டனர். சூரியன் அந்த பட்டணத்தின் மேல் ஒளிவீசும்போது, தூய தங்க நிறமாக காட்சியளித்தது. இந்த மகிமையின் காட்சியை தங்களின் திறந்த முகத்தால் காண மாமிச கண்கள் கூசியது. ஆனால் தங்களின் தீர்க்கதரிசன கண்களால் இந்த மகிமையின் பட்டணத்தை காணமுடிந்தது. அப்போது, முகம் பிரகாசிக்கும் தங்கம் போல ஜொலிக்கும் ஆடைகளணிந்து ஒளிவீசும் மனிதர்களில் இரண்டு பேர்களை கண்டார்கள்.

இந்த ஒளிவீசும் மனிதர்கள் அவர்களிடம், "நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்" என்று கேட்டு அவர்கள் வரும் வழியில் எங்கே தங்கி எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தும், எப்படிப்பட்ட வசதிகளையும் இன்பங்களையும் பெற்றுக்கொண்டனர் என்று கேட்டறிந்தனர். பின்பு அவர்களை நோக்கி இன்னும் இரண்டு தடைகளை அவர்கள் சந்தித்து மோட்சப்பட்டணத்தை அடைவார்கள் என்று தெரிவித்தனர்.

பின்பு கிறிஸ்தியானும் அவனது தோழனும் அந்த மனிதர்களை தங்களுடன் வரும்படி அழைக்க அவர்கள் சம்மதித்து, "நீங்கள் விசுவாசத்துடன் மோட்சப்பட்டணத்தின் வாசலை அணுகவேண்டும்," என்று உரைத்தனர். அதன்பின்பு அவர்கள் மோட்சப்பட்டணத்தின் வாசலை அணுகினர். அவர்களுக்கும் அந்த வாசலுக்குமிடையில் ஒரு நதியைக்கண்டனர். அந்த நதியின் மேல் ஒரு பாலமும் கிடையாது. நதி மிகவும் ஆழமாகயிருந்தது. அந்த நதியைப்பார்த்து பயணிகள் மிகவும் பயந்துநடுங்க, அந்த மனிதர்கள் அவர்களை நோக்கி "நீங்கள் இதன்வழியாகத்தான் வாசலில் பிரவேசிக்கவேண்டும்", என்று உரைத்தனர்.

பின்பு பயணிகள் அந்த மனிதர்களிடம் வேறு வழி இருக்கிறதா என வினவ, அவர்கள் "ஆம்" என்றனர். "ஆனால் உலகம் ஆரம்பிக்கப்பட்டு கடைசி எக்காளம் ஒலிக்கும்வரை, ஏனோக்கு எலியா போன்ற இரண்டு மனிதர்கள் மாத்திரம் இந்த நதியை கடக்காமல் வேறு வழி மூலமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டனர்" என்று கூற பயணிகள் துக்கித்தனர். பயணிகள் அங்குமிங்கும் பார்க்க வேறு ஒரு வழியும் தென்படவில்லை. பயணிகள் அந்த மனிதர்களை நோக்கி இந்த நதி இதுபோல ஆழமாக இருக்குமா என கேட்க. "இல்லை" என்று பதில் வந்தது. தாங்கள் ஒன்றும் உதவி செய்யமுடியாது என்று கூறி, "பரம அரசரின் மேலுள்ள உங்களது விசுவாசத்தைவைத்து இந்த நதியானது ஆழமுள்ளதாகவும், ஆலமற்றதாகவும் இருக்கும்." என்று அந்த மனிதர்கள் பதிலளித்தனர். பின்பு பயணிகள் ஆற்றிலிறங்கினர். கிறிஸ்டியான் நதியில் மூழ்க நம்பிக்கையை நோக்கி "..... அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது" என கதறினான் (சங்கீதம் 42:3).

கற்றுக்கொள்ளும் பாடம்

இந்த எப்சிபா பியூலா தேசத்தைக்குறித்து விபரமாக இரண்டாம் பகுதியிலுள்ள கிறிஸ்டியானாவின் வாழ்க்கை வரலாற்றில் மேலும் எழுதியிருக்கிறேன். இங்கே எழுதும் காரியங்கள் அந்த பகுதியில் எழுதவில்லை. எப்சிபா பியூலா தேசமானது மகிமையின் தேசத்திற்குள் (Celestial City) பிரவேசித்தப்பதற்கு முன்பான ஒரு இடை தேசம். இதை நாம் கானான் தேசம் (Promised Land) என்று சொல்லலாம். இங்கே நமக்கு ஓய்வு எடுக்கும் இடம். நாம் விசுவாசத்தால், தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கவேண்டிய தேசம் (ஏசாயா 62:4).

நாம் இந்த தேசத்திலிருந்துகொண்டுதான் ஊழியம் செய்யவேண்டும். இன்று அநேகர் வனாந்தரத்தலிருந்துக் கொண்டுதான் ஊழியம் செய்கிறார்கள். எல்லா பொறுப்புகளையும் தன் தலைமேல் ஏற்றி, சரீரத்தில் ஓய்வு எடுக்காமல் ஊழியம் செய்கிறார்கள். தன்கூட பணிபுரியும் சக ஊழியர்களுக்கு பொறுப்பு கொடுப்பதில்லை. ரோமருக்கு எழுதிய 16ம் அதிகாரத்தை தியானிக்கவும். இங்கே ஒரு பட்டியலில் தன் சக ஊழியர்களை ஒவ்வொருவராக பெயர்க்கூறி பவுல் வாழ்த்துகிறார்.

ஆண்டவர் நமக்கென்று வைத்திருக்கும் இளைப்பாறும் ஸ்தலங்களில் தாபரித்துக்கொண்டும், ஆண்டவர் நாம் விரும்பிக் கேட்பதற்கும் மேலாக நமக்கு அருளும் சரீர தேவைகளைப் பெற்றுக்கொண்டும், மோட்சப்பட்டணத்தை நமது ஆவிக்குரிய கண்களால் பார்த்துக்கொண்டும், மரண நதியை கடக்கும் சந்தர்ப்பத்திற்காக ஆயத்தம் பண்ணும் இடம்.

மரண இருளின் பள்ளத்தாக்கிலிருந்து நம்மை ஆண்டவர் இந்த தேசத்திற்கு அழைத்து வருகிறார். இந்த தேசத்தில் சாத்தானின் பயமுறுத்தலும், மரண பயத்தைக்குறித்து அச்சமும் நமது விசுவாசத்தை அசைக்காது. நமது வியாதிகளிலிருந்து ஆண்டவர் விடுதலை கொடுக்கிறார். நமக்கு ஊழியம் செய்வதற்கு அநேக தேவமக்களையும், தேவதூதர்களையும், மற்ற மனிதர்களையும் ஆண்டவர் குறித்த இடங்களில் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். நமக்கு வேண்டிய மருத்துவர்களையும், மருத்துவ மனைகளையும் ஆண்டவர் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். எனது சாட்சியை விளக்கமாக கிறிஸ்டியானாவின் பகுதியில் விபரமாக எழுதியிருக்கிறேன்.

இந்த இடத்தின் காலங்களை ஆண்டவர் முன்குறித்து தீர்மானித்து வைத்திருக்கிறார். அநேக ஆண்டுகளாக இருக்கலாம். நமக்கு நீடிய ஆயுள் நாட்களை கொடுத்து தேவன் நம்மை தனது ஊழியத்தில் பயன்படுத்துகிறார். நாம் ஊழியம் செய்யும் சரியான இடம் இதுதான். வனாந்தரத்திலே நாம் ஊழியம் செய்யாமல். இந்த தேசத்தில் பிரவேசித்து, சாத்தானின் ஆவிக்குரிய தலையை நமது கால்களால் நசுக்கி, ஊழியம் செய்யவேண்டும்.

இங்கே நமக்கு பணிவிடை செய்யும் வெண்ணிற ஆடைகளை அணிந்த தூதர்கள் உண்டு. இங்கே சாத்தான் நம்மை கண்டால் ஓடிவிடுவான். எந்தவித அரக்கர்களோ நம்மை தாக்கமுடியாது.

சூரியனான கிறிஸ்து இந்த தேசத்தில் எப்போதும் தனது ஒளியை தந்துக்கொண்டிருக்கிறார். இருளோ கிடையாது. இந்த தேசத்திலிருந்து நாம் கள்ள ஊழியர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும்படி புத்திதெளிவு (Discernment) கிடைக்கிறது.

ஆண்டவரின் பழ தோட்டங்களில் எல்லாவிதமான கனிகளையும் உண்ணலாம். யாரிடமும் காணிக்கை கேட்டு ஊழியம் செய்ய அவசியம் இல்லை. மணவாளனின் அன்பையும், அரவணப்பையும் இங்கே நாம் உணரலாம். பரலோகத்தின் ஆசீர்வாதங்களை முன் அனுபவிக்கும் (Foretaste) இடம். இந்த தேசத்தில் தானியமும், திராட்சைரசமும் குறைவுபடாது.

இங்கே பரிசுத்தாவியானவர் எப்படி தோட்டக்காரர் கிறிஸ்தியானையும் நம்பிக்கையையும் தனது பழத்தோட்டங்களில் கொண்டுப்போய் ஆகாரம் அளித்து இளைப்பாறுதல் எடுக்கும்படி செய்தாரோ அப்படியே நம்மையும் வழிநடத்துகிறார்.

மரண நதியை கடப்பது

ஆதுவரை அவர்களுடன் வந்த ஒளிவீசும் ஆடையனிந்தவர்கள் நீங்கள் அந்த வாசலை அடையவேண்டுமானால் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். பயந்து நடுங்கியபடியே ஆற்றினுள் இறங்கினார்கள் இருவரும்! சிறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!ஐயோ, அமிழ்ந்து போகிறேனே! என்று புலம்பினான். கவலைப்படதே கிறிஸ்தியான். ஆழம் அதிகமில்லை! என் கால்களுக்குக் கீழாக கடினமான தரை தட்டுப்படுகிறது என்று தேற்றினான் நம்பிக்கை.

ஆனால் கிறிஸ்தியானோ, நான் சாகும் வேளை நெருங்கிவிட்டது. என்னால் பாலும் தேனும் ஓடும் மோட்ச பூமியைப் பார்க்க முடியாது என்ற அங்கலாய்ப்போடு நம்பிக்கையின்மீது சாய்ந்துவிழுந்தான். கிறிஸ்தியான் மூழ்கிவிடக்கூடாதே என்று மிகவும் கடினத்துடன் அவனைத் தாங்கிப் பிடித்தபடியே நீந்தினான் நம்பிக்கை.

அப்போது நம்பிக்கை விசுவாசத்தோடு, இயேசுவானவரே, எங்களைக் காப்பாற்றும் என்று வேண்டினான். இந்த வார்த்தைகள் கிறிஸ்தியானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அவனும் புத்துணர்வோடு நீந்தத் துவங்கினான். இவ்வாறு முதல் சோதனையில் வெற்றிபெற்றார்கள்!

கற்றுக்கொள்ளும் பாடம்

வெள்ளை அங்கி தரித்த தேவதூதர்களும், மகிமையில் பிரவேசித்த பரிசுத்தவான்களும் தான், நாம் மரிக்கும் தருவாயில் மோட்சத்தைக் காண்பிப்பார்கள். அப்போதுதான் நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும். மோட்சமும் அங்கேயுள்ள ஆசீர்வாதங்களை தங்களின் ஆவியில் அனுபவிக்கும் அனுபவங்களை உணர்வார்கள். அநேக பரிசுத்தவான்கள் தாங்கள் மரிக்கும்போது பரவசமடைகிறார்கள். ஆனால் பாவியோ அங்கலாய்க்கிறான். நதியை கிடப்பது என்றால் மரணத்தின் போது ஏற்படும் சரீர பாடுகளை குறிக்கும்.

"சிறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!" இதுதான் பரிசுத்தவான்கள் தங்களின் மாமிச சரீரங்களை விட்டு ஆவிக்குரிய சரீரங்களை தரிக்கும் நேரம். இந்த இரண்டாவது சோதனையை கடந்து மோட்ச பட்டணத்தில் கால் எடுத்து வைப்பார்கள்.

மோட்சத்தை அடைந்தனர்

இருவரும் மறுகரையை அடைந்தார்கள். அங்கே ஒளிவீசும் ஆடை தரித்த இருவரும் வர்களுக்காகக் காத்திருந்தார்கள். பயணிகளை அன்போடு வரவேற்றார்கள்.

மோட்சம் ஒரு மேன்மையான குன்றின்மீது இருப்பதை நான் என் கனவில் கண்டேன். பயணிகள் ஒளிவீசும் ஆடை தரித்தவர்களுடன் சேர்ந்து மோட்சத்தை நோக்கி நடந்தார்கள். வாசலை நெருங்கியவுடன் மோட்சத்தின் தூதர்கள் அவர்களை எதிர்கொண்டு வந்தார்கள்.

இவர்கள் இருவரும் பூமியில் வாழும்போது ஆண்டவரை நேசித்தவர்கள். எல்லாவற்றையும் அவருடைய நாமத்திற்கென்று விட்டுவிட்டவர்கள் என்று கிறிஸ்தியானும் நம்பிக்கையும் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.

எக்காளம் வாசிப்பவர்கள் எக்காள தொனியோடு அவர்களை வரவேற்றார்கள். பயணிகள் இருவரும் வாசலை அடைந்தார்கள். அங்கேதான் இரணடாவது சோதனை இருந்தது!

அடையாளச் சுருள் எங்கே! என்ற கேள்வி கேட்கப்பட்டது.

உடனே அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த சுருளை எடுத்துக் கொடுத்தார்கள். அவை இராஜாதிராஜாவிடம் கொண்டுபோகப்பட்டன.

அவற்றைச் சோதித்த அவர் இந்தச் சுருள்களைக் கொண்டு வந்தவர்கள் எங்கே? என்று கேட்டார்.

அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள் அவர்கள் உள்ளே நுழையத் தகுதியுள்ளவர்களே என்று தீர்ப்பளித்தார் இராஜாதிராஜா.

கதவு திறக்கப்பட்டது. கிறிஸ்தியான், நம்பிக்கை இருவரும் மோட்சத்தினுள் நுழைவதை நான் என் கனவில் கண்டேன்.

இதோ அவர்கள் நுழைந்தவுடன் அவர்கள் உருவம் மாறியது! அவர்கள் முகம் பிரகாசித்தது! அவர்கள் பொன்போல ஒளிவீசும் ஆடையணிந்தவர்களாகக் காணப்பட்டார்கள்! அவர்கள் தலையில் பொன்முடி சூடப்பட்டது! ஆண்டவரைத் துதித்துபாட கின்னரம் கொடுக்கப்பட்டது!

மோட்சத்திலுள்ள மணிகள் எல்லாம் ஒலியெழுப்பின! எங்கும் பாடல் தொனி! ஆண்டவருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள் என்ற குரல் எழும்பியது!

சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக (வெளி.5:13) என்ற பாடலைப் பாடி அனைவருமாக ஆண்டவரைத் துதித்தனர்!

கற்றுக்கொள்ளும் பாடம்

கால்வாரியின் சிலுவை அண்டையில் அடையாள சுருட்டை கடைசி வரை காக்கவேண்டும். இதுதான் உங்களின் சாட்சி பத்திரம். இதை பார்த்தவுடன் உங்கள் ராஜா உங்களுக்கு முன்குறிக்கப்பட்ட இடத்தை கொடுப்பார். இதில் குறிப்பிட்டிருக்கும் பரலோகத்தைக்குறித்த சத்தியங்கள் உண்மையாகவே நடப்பதால், மேலும் நான் விளக்கம் அளிக்க அவசியமில்லை.

தொடர்ந்து படிக்க.......கிறிஸ்டினாவின் பயணம்