கிறிஸ்தியான் ஆயுதம் தரித்தல்

கிறிஸ்தியான் ஆயுதம் தரித்தல்

அழகிய மாளிகையில் பிரவேசித்த கிறிஸ்தியான் உற்சாகத்தோடு கச்சை, மார்க்கவசம், தலைச்சீரா, காலில் போடும் பாதரட்சை இவற்றை அணிந்துகொண்டான் கிறிஸ்தியான். பட்டயத்தையும், கேடகத்தையும் கையில் பிடித்துக்கொண்டான்!

இவ்வாறு கவசம் அணிந்தவனாக அவர்களுடன் புறப்பட்டு, மீண்டும் வாசலண்டை வந்தான்.ஜயா, யாராவது இந்த வழியே சென்றார்களா ? என்று காவல்க்காரனிடம் கேட்டான்.ஆமாம் உண்மையானவன் என்பவர் இந்த வழியே சென்றார். இதற்குள் மலையின் மறுபுறம் இறங்கி விட்டிருப்பார் என்றான் காவல்க்காரன்.ஊண்மையானவனா? என்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்தவன் தான் அவன். நான் துரிதமாகச் சென்றால் அவனைப் பிடித்துவிடலாம் என்று கூறிய கிறிஸ்தியான் உடனே புறப்பட்டான்.சகோதரிகள் நால்வரும் மலையடிவாரம் வரை அவனோடு வருவதாகக் கூறி உடன் வந்தார்கள். மீட்பரைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்கள்.

என்ன இது ? மலையின்மீது ஏறுவதுதான் கடினமாக இருந்ததென்றால், இறங்குவது இன்னும் அபாயமாக இருக்கும் போலிருக்கிறதே என்றான் கிறிஸ்தியான்.

ஆமாம், ஏனென்றால் இந்த மலைச்சரிவு தாழ்மையின் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்கிறது. வழியில் ஏதேனும் அபாயங்கள் நேரிட வாய்ப்புண்டு. அதனால் தான் நாங்கள் உன்னுடன் வருகிறோம் என்றாள் விவேகம்.

அனைவருமாக மலையடிவாரத்தை அடைந்தார்கள். சகோதரிகள் கிறிஸ்தியானிடம் ஒரு திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை இவற்றை உணவுக்காகக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்.

நன்றியோடு இவற்றைப் பெற்றுக்கொண்ட கிறிஸ்தியான் தன்னந்தனியாக தாழ்மையின் பள்ளத்தாக்கில் நடக்கத் துவங்கினான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"அனைவருமாக மலையடிவாரத்தை அடைந்தார்கள். சகோதரிகள், கிறிஸ்தியானிடம் ஒரு திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை இவற்றை உணவுக்காகக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்". இங்கே சபையின் வேலை முடிந்துவிட்டது. மலை அடிவாரத்தில் அரண்மனை ஊழியர்கள் கிறிஸ்டியானுக்கு வேண்டிய ஒரு திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை இவற்றை உணவுக்காகக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்டியானுக்கு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக நற்கருணையின் (Holy communion) முக்கியத்தையும், கிறிஸ்துவின் சரீரத்தின் பாடுகளை நினைவு கூறவும் போதித்து விட்டு கடந்து செல்கிறார்கள்.

இங்கே ஊழியம் செய்வது சகோதரிகள் என்று ஜான் பணியன் குறிப்பிடுகிறார். ஊழியங்கள் என்றால், சபை மக்களுக்கு, பணிவிடை ஊழியம் செய்து பணிபுரியும் பெண்களைப் போல செய்யும் பணிவிடை ஊழியங்கள் தான். திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை போன்ற ஆவிக்குரிய ஆகாரங்களைக் கொடுப்பதுதான் இந்த சபையின் வேலை. கிறிஸ்துவின் சரீரத்தின் பாடுகளில் நாம் பங்குகொள்ள நம்மை ஆயத்தம் பண்ணவேண்டும். அவரது இரத்தத்தின் வல்லமையை உணர வைத்து, நமது பாவங்களை வளர்க்கும் வேரை அறுத்தெறியும்படி, சபையில் உபதேசம் கொடுக்கப்படவேண்டும். பாவத்தை மேற்கொள்ளும் கடினமான உபதேசங்களும் (உலர்ந்த திராட்சை) கொடுக்கப்படவேண்டும்.

உலர்ந்த திராட்சை என்பதின் அர்த்தம் ஆத்மீக ஆகாரம் ஆகும். கிறிஸ்டியானுக்கு இந்த ஆகாரத்தை கொடுத்துவிட்டு ஊழியக்காரிகள் கடந்து செல்கிறார்கள்.

சபை போதகர்களின் வேலை நம்மை ஆயத்தப்படுத்துவது மாத்திரம்தான். நம்மை சபையில் வைத்து நமது காணிக்ககைகளை பெற்று, சபை போதகர்கள் மாத்திரம் ஊழியம் செய்வது அல்ல. சபை போதகர்களின் வேலை, நம்மை சாத்தானோடு போராடும்படி பயிற்சி அளித்து போர்வீரர்களாக மாற்றுவதுதான்!

Next...... அப்பொல்லியோனோடு போர்