கடினமலையை அடைதல்

Previous.....மூன்று உறங்கும் மனிதர்கள்

கடினமலையை அடைதல்

சம்பிரதாயன், வெளி வேசக்காரன், கிறிஸ்தியான் ஆகிய மூவரும் கடினமலை என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அங்கே ஓரு நீரோடை காணப்பட்டது. அவர்கள் சென்ற பாதையின் இடதுபுறமும், வலதுபுறமும் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன.

ஆனால் இடுக்கமான பாதையோ அவற்றின் நடுவே மலையுச்சியை நோக்கிச் சென்றது!

கிறிஸ்தியான் அந்த நீரோடைக்குச் சென்று தெளிந்த நீரைப் பருகினான். களைப்பு நீங்கியவனாக இடுக்கமான பாதையின் வழியாக மலையேறத் துவங்கினான்.

இடுக்கமான பாதை மலையேறும் கடினமான பாதையாக இருப்பதைக்கண்ட சம்பிரதாயன், வெளி வேசக்காரன் இருவரும் மற்ற இரண்டு பாதைகளிலும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். இடதுபுறம் அபாயப் பாதையில் சென்றவன் அடர்ந்த காட்டினுள் வழிதப்பி அலைந்தான்! வலதுபுறம் அழிவின் பாதையில் சென்றவன் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து உயிர் துறந்தான்!

இடுக்கமான பாதை வழியே மிகக் கடினத்துடன் பாதையேறத் துவங்கினான் கிறிஸ்தியான். போகப்போக பாதை செங்குத்தானபடியால் தவழ்ந்தபடி ஏற நேரிட்டது!

கற்றுக்கொள்ளும் பாடம்

சம்பிரதாயன், வெளி வேசக்காரன் இருவரும் மற்ற இரண்டு பாதைகளிலும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். இடுக்கமான பாதை வழியே மிகக் கடினத்துடன் பாதையேறத் துவங்கினான் கிறிஸ்தியான். போகப்போக பாதை செங்குத்தானபடியால் தவழ்ந்தபடி ஏற நேரிட்டது!

இன்று நமது மத்தியில் சம்பிரதாயன், வெளி வேசக்காரன் போகும் பாதைகளில் வழி நடத்தும் கள்ள போதகர்கள் உண்டு. இவர்களின் சபைகளிலோ அல்லது வேறு ஏதாவது பிரசங்க மேடைகளிலோ, இவர்களின் உபதேசத்தையோ கேட்டு மோசம் போகாதீர்கள். சம்பிரதாயன், வெளிவேசக்காரன் போன்றவர்களின் வேஷத்தைக் களைந்துவிட்டு, மலை உச்சிக்கு, கடினமான பாதை வழியாகத்தான் போக வேண்டும். கடின மலையை கிடக்காமல் நாம் கடந்தது செல்ல முடியாது. சபைக்கு ஒழுங்காகப்போய் ஆராதனையில் கலந்து கொண்டால் போதாது. காணிக்கை, தசம பாகம் கொடுத்தால் போதாது. ஆவிக்குரிய கடினமான மலை உச்சிக்கு போக வேண்டும். உங்களுக்கு இன்று பரிசுத்தாவியானவர் ஒரு அழைப்பையும் ஊழியத்தையும் வைத்திருக்கிறார்.

இன்று இடதுபுறம் அபாயப் பாதையில் சென்று அடர்ந்த காட்டினுள் வழிதப்பி அலைபவர்கள் அதிகம்.

வலதுபுறம் அழிவின் பாதையில் சென்று, செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து உயிர் துறந்தவர்கள் அநேகம். இவர்கள் செத்துப்போய் சபைகளில் வெறும் சத்தம் போட்டு தாங்கள் உயிர் உள்ளவர்கள் போல காண்பித்துக்கொள்கிறார்கள்; ஆனால் இவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் செத்தவர்கள்.

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்"(வெளி 3:1-3).

உங்கள் கிரியைகளை தேவன் அறிந்திருக்கிறார். இந்த கிரியைகள் கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தி காண்பிக்கவில்லை.

பொல்லாத கிரியைகள்! வஞ்சகத்தின் ஆவியின் மூலமான வெளிரங்கமான கிரியைகள்! வேதத்தை எடுங்கள், கண்ணீரோடு படிக்கவும். "ஆண்டவரே, என்னை உமது சத்திய பாதையில் வழி நடத்தும்," என்று கதறி அழுங்கள். நீங்கள் இன்று தேவனுக்கு ஒரு ஊழியத்தை செய்ய முடியாமல் ஒரு சபையின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்கிறீர்களே. ஒரு அப்போஸ்தலனாகவோ ஒரு தீர்க்கதரிசியாவோ ஒரு சுவிசேஷகனாகவோ இருந்திருப்பீர்களே! ஒரு விசுவாசி என்ற பட்டத்துடன் இத்தனை ஆண்டுகளை வீணாக்கிவிட்டு இருக்கிறீர்களே! ஏன் உங்களுக்கு கொடுத்த சுருளை படிக்கவில்லை? கள்ள போதகர்கள் உங்களை ஒரு பணம் பறிக்கும் மரமாகவே ஆக்கி விட்டார்களே!

Next..... கிறிஸ்தியான் இளைப்பாறும் ஸ்தலம்