அழகிய மாளிகையிலிருந்து விடை பெருதல்

Home

முந்திய பகுதி.......அழகிய மாளிகையில் கருணை ஊழியக்காரி

அழகிய மாளிகையிலிருந்து விடை பெருதல்

பயணிகள் அழகிய மாளிகையை விட்டு செல்லத்தொடங்கினர். வீட்டின் ஊழியர்கள் பயணிகளுக்கு உற்சாகம் காட்டி, வழிப்பாதையில் தொடர்ந்து செல்ல, சில வேத பகுதிகளில் எழுதியுள்ள இடங்களுக்கு கொண்டுசெல்கின்றனர். முதலாவது ஏதோன் தோட்டத்தில் ஏவாள் புசித்த பழத்தையும், யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியின் மூலம் தேவதூதர்கள் பரமேறிய இடத்தையும் காண்பித்தார்கள். ஜேம்ஸ் தாயை நோக்கி நாம் இந்த இடத்தில் இன்னும் கொஞ்ச நாட்கள் களித்துவிட்டுப் போகலாம் என்று சொன்னான்.

பின்பு ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலி செலுத்த போன மோரியா மலையையும் காண்பித்தார்கள். இதற்கிடையில், வழிகாட்டி (கிரேட் ஹார்ட்) அங்குவந்து பயணிகளை மேல்கொண்டு பிரயாணத்தில் கொண்டு செல்ல வந்துவிட்டார். "எனது ஆண்டவர் உங்களை பயணத்தில் பராமரிக்கும்படி மாதுளை, திராட்சை ரசம், போன்ற உணவு பொருட்களும், விசேஷமாக பிள்ளைகளுக்கு தேவையான அத்திப்பழம், உலர்ந்த திராட்சை பழங்கள் இவைகளை கொடுத்தனுப்பியிருக்கிறார்" என்று வழிகாட்டி கூற, பயணிகள் ஆண்டவரை துதித்தார்கள்.

பயணிகளை வீட்டுவாசல் வரை வந்து வழி அனுப்ப வீட்டின் மூத்த தலைவர் கண்காணிப்பு (Watchful), விவேகம், பக்தி, கருணை என்ற பெயருள்ள மூன்று ஊழியக்காரிகளுடன் வந்தனர். அப்போது கிறிஸ்டியானா கண்காணிப்பை நோக்கி "எல்லாம் சரியாக இருக்கிறதா?" என கேட்க, அவர், "இல்லை, கொஞ்ச நாட்களுக்கு முன்பு கள்வர்கள் ராஜாவின் நெடுஞ்சாலையில் கொள்ளை அடித்தனர் ஆனால் பின்பு பிடிக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது அவர்கள் ராஜாவின் சட்டத்தின் கீழ் நீதி விசாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்," என்று சொல்ல, கிறிஸ்டியானாவும், மேர்சியும் நடுங்கினர். மாத்தியூ அவர்களை பார்த்து, "நம்மோடு கிரேட் ஹார்ட் இருக்கும்வரை பயப்படவேண்டாம்," என்று சொன்னான்.

பின்பு கிறிஸ்டியான கண்காணிப்பிடமிருந்து விடை பெறும்போது, தன் உள்ளத்தின் அடியிலிருந்து அவருக்கு நன்றி சொல்லி தன்னிடமிருந்து ஒரு சிறிய நன்கொடையை பெறும்படி வேண்டிக்கொள்கிறாள். அவள் அவரின் கையில் தேவதூதன் உருவம் வரையப்பட்ட ஒரு தங்க வளயத்தை (Gold Angel) அணுவிக்கிறாள்.

“உங்களது ஆடைகள் எப்போதுமே தூய்மையாக இருக்கட்டும். உங்களது சிரசில் எண்ணெய் குறையாமல் இருக்கட்டும். இரக்கம் எப்போதுமே உங்களுடன் மடிந்துபோகாமல் இருக்கட்டும். இரக்கம் இன்னும் பெருகட்டுமே" என மனமார வாழ்த்தி ஜெபிக்கிறாள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

ஏதோன் தோட்டத்தில் வஞ்சிக்கப்படும்படி உபயோகப்படுத்தப்பட்ட பழம், யாக்கோபுவிற்கு பரத்தை குறித்து கிடைத்த தரிசனம், ஆபிரகாம் பலியிட சென்ற மோரியா மலை, போன்ற பழைய ஏற்பாட்டின் சத்தியங்களை அடிக்கடி தேவ மக்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டும்.

எந்த சபையோ நிரந்தரமான தங்கும் வீடு அல்ல. சபையின் ஊழியர்கள் மோட்சப் பாதையில் தேவ பிள்ளைகளை வழிநடத்தவேண்டும். அவர்களை வைத்து எந்தவிதமான ஆதாயமும் தேடக்கூடாது. தேவ பிள்ளைகளே முன்வந்து எதாவது நன்கொடை கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். கேட்டு வாங்குவதோ அதற்காக பிரசங்கம் பண்ணவோ கூடாது.

மாதுளை, திராட்சை ரசம், அத்திப்பழம், உலர்ந்த திராட்சை பழங்கள்

இவைகளை சரீர சுகத்திற்காகவும், பலத்திற்காகவும் அருந்தலாம். நவீன கால மருந்துகளைப்பார்க்கிலும் இந்த உணவு பதார்த்தங்கள் நமக்கு நோய்களிலிருந்து தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

கிரேட் ஹார்ட் அளித்ததுபோல, ஆத்தும நலத்திற்கான ஆத்மீக உணவுகளை தேவ மக்களுக்கு அளிக்கவேண்டும். மாதுளை, திராட்சை ரசம், அத்திப்பழம், உலர்ந்த திராட்சை பழங்கள் என்பவைகள் ஆவிக்குரிய ஆகாரங்கள்.

மாதுளை என்பது கிறிஸ்துவின் சாயலுக்கு மாறும் உப்தேசங்கள், திராட்சை ரசம் (இராப்போஜனம்), அத்திப்பழம் (எச்சரிக்கும் போதனைகள்), உலர்ந்த திராட்சை பழங்கள் (ஆன்மிக முதிர்ச்சி அடையும் போதனைகள்) என்பவைகள் ஆவிக்குரிய ஆகாரங்கள் ஆயின.

மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக இருக்கிறது. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது. நமது ஆத்மீக சரீரம் சாத்தானால் அனுப்பும் அணுக்களால் (Parasites) பாதிக்கப்படுகிறது. இந்த அணுக்கள் கிறிஸ்துவாகிய சரீரத்தையும் மிகவும் பாதிக்கிறது. கள்ள உபேதசமாகிய, மாவில் புளிப்பு உண்டாக்கும் (Leaven) போதனைகளை மேற்கொள்ளும்படியாக உபதேசங்கள் செய்து கிறிஸ்துவாகிய சரீரத்தை பலப்படுத்தவேண்டும். இந்த கடினமான ஆத்மீக உணவால், அதாவது கள்ள உபசேங்களை பகுத்தறிந்து, கிறிஸ்துவின் சாயலுக்கு மாறும் உப்தேசங்களை தேவ மக்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.

இராப்போஜனத்தின் மூலம் கிடைக்கும் சரீர நன்மைகளான தெய்வீக சுகம் பெரும் உபதேசங்கள், வளரும் விசுவாசிகளுக்கு மிகவும் அவசியம். முதிர் வயதில் சரீரத்தை தாக்கும்படி அநேக நோய்கள் சாத்தானால் அனுப்பப்படுகிறது. இராப்போஜனத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தையும் சரீரத்தையும் பெற்று, நாம் அவரது மரணத்தை நினைவு கூறும்போது நமது சரீரத்தின் பலவீனங்கள், நோய்கள் குணமாகிறது. இந்த சத்தியம் சபைகளில் போதிக்கப்படுவதில்லை.

அத்திமரம் உரிய காலத்தில் பழம் கொடுக்காததால் ஆண்டவர் அந்த மரத்தை சபித்தார். வளரும் விசுவாசிகளுக்குத் தீர்க்கதரிசன எச்சரிப்பின் செய்திகள் மிக அவசியம். புதிய விசுவாசிகளுக்கு அத்திப்பழம் போன்ற எச்சரிப்பின் செய்திகள் கொடுக்கவேண்டும். விசுவாச பாதையின் துவக்கத்தில் சாத்தானால் வஞ்சிக்கப்படாமல் எச்சரிப்பின் எக்காளம் ஊதப்படவேண்டும். ஆன்மிக முதிர்ச்சி அடையும் போதனைகளும் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

உலர்ந்த திராட்சை பழங்கள் (raisins) குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது. புதிய விசுவாசிக்களுக்கு ஆன்மிக முதிர்ச்சி அடையும் போதனைகளும் கொடுக்கவேண்டும்.

கள்ள போதகர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் பிடிக்கப்படுத்தல்

நாம் மோட்சப் பயணத்தில் போகும்போது, கள்ள போதர்களாலும் கள்ள தீர்க்கதரிசிகளாலும் தாக்கப்படுகிறோம். இந்த கடைசி நாட்களில் ஆண்டவரின் பெரிதான கிருபையால் அவர்கள் பிடிபடுகிறார்கள். இன்று தேவ மக்களின் மத்தியில் விழிப்புணர்வு வந்திருக்கிறது. Social Media மூலம் சத்தியங்களை அறிந்து கொள்கிறார்கள். பகுத்தறியும் ஊழியங்கள் (Discernment/Prophetic Ministries) நம் மத்தியில் இருக்கின்றது. ஆண்டவர், இந்த பகுத்தறியும் ஊழியங்கள் மூலம், அந்த கள்ள போதர்களையும், கள்ள தீர்க்கதரிசிகளாகிய, ஆட்டுத்தோலை போர்த்த ஓநாய்களைப் (Wolves in sheep clothing) பிடித்து, நியாயம் விசாரித்து வருகிறார். இந்த ஓநாய்களை அடையாளம் கண்டுகொண்டு நம்மை எச்சரிக்கும் தீர்க்கதரிசிகளை நாம் மட்டமாக எண்ணக்கூடாது. அவர்களுக்கென்று தேவன் கொடுத்த பணியை நிறைவேற்ற நாம் ஒத்துழைக்கவேண்டும்.

ஜெப வாழ்த்துதல்

கண்காணிப்பை (Watchful, the Porter) கிறிஸ்டியானா, மனதார வாழ்த்தி, தேவ நாமத்தில், தேவ வசனங்கள் மூலம் ஜெபத்தை ஏறெடுக்கிறாள். இதுதான் ஒரு உண்மையான வேண்டுதல் ஜெபமும், வாழ்த்துதலும்!

இன்று அநேக ஊழியக்கார்கள் அவர்களின் ஊழியங்களுக்காக ஜெபிக்கும்படி தியதிகளையும் நேரங்களையும் ஒதுக்கீடு செய்யுமாறு நம்மை வற்புறுத்துகிறார்கள். ஒரு டெலிவிஷன் ஊழியக்காரர் அவரது ஸ்டுடியோவில், எல்லாரும் காணும்படியாக, சில "ஜெப வீரர்களை" ஜெபிக்கும்படி ஒரு ஷோ நடத்துகிறார். அந்த ஜெபம் பண்ணும் மனிதர்கள் அந்நிய பாஷையில் பேசிக்கொண்டும், அந்த ஊழியக்காரரை கர்த்தர் அநேக வெளிப்பாடுகள் கொடுத்து வல்லமையாய் உபயோகிக்கும்படி ஜெபிக்கிறார்கள். இவர்கள், ஒரு பெரிய ஏமாற்றத்திற்குள் அந்த ஷோ (Show) மூலமாக இந்த காட்சியை காண்பவர்களை உட்படுத்துகிறார்கள்.

ஆண்டவரின் பணியாளர்களுக்கு கிடைக்கும் உண்மையான ஆசீர்வாதங்கள், அவர்களின் பணிகளால் பயனடைந்த மக்கள், அவர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவ நாமத்தில் வாழ்த்தும்போதுதான்! அவர்களை கட்டாயப்படுத்தி ஜெபிக்க வைப்பதினால் அல்ல! இந்த சத்தியத்தை ஒவ்வொரு சபை போதகரும் சுவிசேஷகரும் அறிந்துக் கொள்ளவேண்டும்.

இந்த Celebrity Preachers அநேக ஆயிரக்கணக்கான மக்களை தங்களின் ஊழிய தேவைகளுக்கவும், தங்களை ஆண்டவர் வல்லமையாக உபயோகப்படுத்தவும், அவர்கள் நம்மிடம் தனிப்பட்ட முறையில் வேண்டாமல், தங்களின் அலுவலுக பணியாளர்களின் மூலம் வேண்டுகிறார்கள்! ஆண்டவர் இப்படிபட்ட சுயநல ஜெபங்களை கேட்பாரா? தங்களை தாழ்த்தி "எனக்காக ஜெபியுங்கள்" என்று தனியாக ஒருவரிடம் வேண்டுகொள்வதற்கும் ஒரு corporate (பெருநிறுவன) ஜெப வேண்டுகோளை ஆயிரக்கணக்கான மக்களுக்கு அனுப்புவதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது!

தொடர்ந்து படிக்க..பக்தி, விவேகம் ஊழியர்களின் கடைசி பணிகள்