மூன்று விதமான அரக்கர்கள்

Previous.....நம்பிக்கையற்றவன் என்ற அரக்கனின் கையில்

மூன்று விதமான அரக்கர்கள்

நாம் மூன்று விதமான அரக்கர்களை மோட்சப்பயணத்தில் காண்கிறோம். இவர்களை உண்டு பண்ணியது அபொல்லியோன் தான். முதலாவது நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன். இந்த நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன் நமது மனதில் சந்தேகங்களை, கவலைகளை எழுப்பி, நம்மை அவனது அறையில் அடைத்து வைக்கிறான். இரண்டாவது "காயப்படுத்தும் அரக்கன்" (Giant Maul). இந்த அரக்கன், இளம் பயணிகளை, வீணான நியாயமற்ற எதிர் வாக்குவாதங்களில் ஈடுபடுத்தி அவர்களை விசுவாசப் பாதையிலிருந்து விலக்கி, கெடுத்திருக்கிறான். மூன்றாவது, பெலவீனரை அழிக்கும் அரக்கன் (Slay-the-good Giant). அதாவது நல்லவர்களை பெலவீனப்படுத்தி அழிக்கும் அரக்கனாகிய இவன் எல்லா அரக்கர்களைவிடவும் கொடூரமானவன். இவன் நம்மை கள்ளப் போதகத்தினாலும், சத்திய வேதத்தின் சத்தியங்களை புரட்டுவதினாலும், கள்ள தீர்க்கதரிசனங்களாலும், நமது ஆத்துமாவை வஞ்சித்து, விசுவாச ஜீவியத்திலிருந்து பிரித்து, வேறு ஒரு கிறிஸ்துவினிடம் (அந்திகிறிஸ்துவினிடத்தில்) வழி நடத்தும் கொடூரமான அரக்கன். கடைசி அரக்கன் (Slay-the-good Giant) வெளிப்படுத்ததலின் கூறப்பட்ட ஒரு கள்ள தீர்க்கதரிசி (False Prophet). இந்த மூன்றுபேர்களும் அபொல்லியோனிடமிருந்து வந்தவர்கள் தான். இவர்களை நாம் சந்தித்தே ஆகவேண்டும். கடைசியில் குறிப்பிடட இரண்டு அரக்கர்களை பற்றி நாம் மோட்சப்பயணத்தின் இரண்டாம் பாகத்தில், கிறிஸ்டினாவின் வாழ்க்கை வரலாற்றில் படிக்கலாம்.

இவர்கள் நம்மை அழிக்காமல் இருக்கவேண்டுமானால், பரிசுத்தாவினவரின் உதவியோடும், வழிநடத்தலுடனும், சுருளை கையில் ஏந்தி, சுலபமாகத் தப்பிவிடலாம். இவர்களை நாம் சந்திப்போம். ஆனால், இவர்கள் ஏற்கனவே தோற்க்கபடிக்கப்பட்டவர்கள்.

மூன்றாம் அரக்கனோடு போராடும்போது, சுருளை கையில் ஏந்தி அதை பட்டயமாக வைத்து, அவனை வெல்லவும். நமது இருதயத்தில் ஏற்கனவே விதைக்கப்பட்ட, கள்ள தத்துவங்களை (False Doctrines) களைந்து எறிந்து (Unlearning Process), உண்மையான தத்துவங்களைக் (Right doctrines) கற்றுக்கொள்ளவும். சபைகளில் கற்றுக்கொண்ட வேதத்திற்கு புறம்பான பாடங்களை மனத்திரையிலிருந்து அப்புறப்படுத்தவும். கிரேட் ஹார்ட் அல்லது பொருள்கூறுபவர் (Interpreter) போன்ற உண்மையான தீர்க்கதரிசைகளை, வனாந்தரத்தில் நாடிச் செல்லவும். இவர்கள் கர்த்தரால் வனாந்தரத்தில் மறைக்கப்படட தீர்க்கர்கள். இவர்களை சபைகளின் பிரசங்கமேடைகளிலிலோ, சின்ன திரைகளின் மூலமாகவோ, காணமுடியாது. இவர்கள் யோவான் ஸ்நானகனைப் போல், (ஜான் பாப்டிஸ்ட்) வனாந்தரத்தில் மறைக்கப்பட்டு இருப்பவர்கள்.

இவர்கள் நம்மை அழிக்காமல் இருக்கவேண்டுமானால், பரிசுத்தாவினவரின் உதவியோடும், வழிநடத்தலுடனும், சுருளை கையில் ஏந்தி, சுலபமாகத் தப்பிவிடலாம். இவர்களை நாம் சந்திப்போம். ஆனால், இவர்கள் ஏற்கனவே தோற்க்கபடிக்கப்பட்டவர்கள்.

Next.....மகிழ்ச்சி மலையில் பயணிகள்