கண்ணியைகளும் பயம் விளைவிக்கும் கடுமையான” அரக்கனும்

Home

முந்திய பகுதி.... மேகமும், இருளும் மூடும் பாதை

கண்ணியைகளும், பயம் விளைவிக்கும் கடுமையான” அரக்கனும்

பயணிகள் தொடர்ந்து செல்லும்போது ஜோசப் வழிகாட்டியை நோக்கி, “எப்போது இந்த பள்ளத்தாக்கின் முடிவைக் காண்போம்”, என்று கேட்க, அவர் "ஜாக்கிரதை! கால்களின் அடியில் கண்ணியைகள் (snares) இருக்கிறது; அதில் கால்கள் சிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார். அநேக கண்ணியைகள் இருப்பதை பார்த்து துக்கமடைந்தனர்.

சிறிது தூரத்தில் ஒரு மாமிசம் பிளக்கப்பட்டு செத்து கிடந்த ஒரு மனிதனை இடது பக்கத்தில் கண்டார்கள். இவனது பெயர் “அலட்சியம்” (Heedless) என்றும் அவன் எச்சரிக்கப்பட்டும் கேளாதவன்போல், தீய சக்திகளின் கைகளில் மாட்டி அழிந்துபோயிருக்கிறான். ஆனாலோ, “கவனம்” (Take Heed) என்பவனோ இவர்களின் கைகளிருந்து தப்பியோடிவிட்டான் என்று வழிகாட்டி கூறினார். “யாதொரு வழிகாட்டியின் உதவி இல்லாமல் மோட்சப்பயணம் மேற்கொண்டால் இதுபோல சம்பவிக்கும். கிரிஸ்டியானோ ஆண்டவருக்கு பிரியமனானவனாக இருந்ததால் இங்கேயிருந்து தப்பிவிட்டான்,” என்றார் கிரேட் ஹார்ட். வழியின் முடிவில் கிறிஸ்டியான் சந்தித்த “பயம் விளைவிக்கும் கடுமையான” அரக்கனை (Giant Maul) கண்டு பயந்தனர். “இந்த அரக்கன் இளம் பயணிகளை, வீணான நியாயமற்ற, எதிர் வாக்குவாதங்களில் ஈடுபடுத்தி அவர்களை விசுவாச பாதையிலிருந்து விலக வைத்து கெடுத்திருக்கிறான்”, என்றார் கிரேட் ஹார்ட். "நீ இந்த வழியில் போகும்போது, நான் உன்னை எத்தனைமுறையோ இதுபோல காரியங்கள் செய்யக்கூடாது என்று எச்சரித்திருக்கிறேன். உனது தொழிலுக்கு ஒரு முடிவு உண்டாக்குவேன்", என்று வழிகாட்டியைப் பார்த்து அரக்கன் கத்தினான். பெண்களும் பிள்ளைகளும் நடுங்கி கொண்டிருக்க, அரக்கன், "நீ எங்கள் தேசத்தில் கொள்ளையிட்டு, ஒரு பெரிய மோசமான திருட்டை இப்போது செய்கிறாய்", என்றான். வழிகாட்டி, "பொதுவான காரியங்களைப் பேசாமல், விபரமாக காரியங்களை தெரிவி", என்றார். பதிலாக அரக்கன், "நீ எப்படி இந்த பெண்களையும் குழந்தைகளையும் எனது அரசரின் ஆதிக்கத்திலிருந்து கடத்திக்கொண்டு, வேறு ஒரு விசித்திரமான தேசத்திற்குக் கொண்டுபோய், எனது அரசரின் ஆட்சியை பலவீனப்படுத்துகிறாயே!"

"நான் பரலோக தேவனின் ஊழியக்காரன். மனம் திரும்பும் பாவிகளை மனம்திரும்புத்தலுக்கும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் இருளின் சாம்ராஜ்யத்திலிருந்து ஒளிச்சத்தின் சாம்ராஜ்யத்திற்குக் கொண்டுபோகவும், சாத்தானின் வல்லமையிலிருந்து பிரித்து தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளாக்கும்படி எனக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் நமக்கு தர்க்கமானால், சண்டை போட்டு முடிவு எடுக்கலாம்", என்றுரைத்தார் வழிகாட்டி.

இரண்டு பேர்களும் சண்டை போடத் தொடங்கினர். கிரேட் ஹார்ட், தன் பட்டயத்தை உருவி, தண்டாயுதம் (Club) ஏந்திய அரக்கனை நோக்கிப் பாய்ந்தார். பெண்கள் பிள்ளைகள் கதறும்படி, அரக்கன் வழிகாட்டியை தன் ஆயுதத்தால் தாக்கி, கீழே முட்டு ஊன்றி வைக்கச் செய்தான். ஆனால், அடி வாங்கிய வழிகாட்டி, மீண்டும் எழுந்து நின்று அரக்கனின் கரத்தைத் தாக்கினார். ஒரு மணிநேர சண்டைக்குப்பின் அடிவாங்கிய அரக்கனின் நாசியிலிருந்து கொதிக்கும் கொப்பறையிலிருந்து வரும் சூடு காற்றை போல மூச்சு வந்தது.

சிறிது நேரம் கழித்து, இருவரும் களைத்துப் போயினர். அப்போது கிரேட் ஹார்ட் ஜெபத்தைக் கைகொண்டார். பெண்களும் பிள்ளைகளும் பயந்துபோய் சும்மா நின்றுகொண்டிருந்தனர்.

பின்பு சண்டையிடும் இருவரும் சற்று ஓய்வு எடுத்தபின், சண்டையை மீண்டும் மிக அதிக உக்கிரத்துடன் ஆரம்பித்தனர். இரண்டுபேர்களும் கீழே விழுந்தனர். கிரேட் ஹார்ட், தன் முழு பலத்துடன் அரக்கனை, கீழே விழும்படி செய்தார். அடிவாங்கிய அரக்கன் தன்னை எழும்ப செய்யும்படி கோரினான். அவனை எழும்ப விட்டவுடன், அவன் தனது தண்டாயுதத்தை எடுத்து, வழிகாட்டியின் தலையை குறிவைத்து தாக்கினான். ஆனால், அவர் மயிரளவில் உயிர் தப்பினார். பின்பு தன் முழுபெலத்துடன், அவர் அவன்மேல் பாய்ந்து சென்று, அவனது ஐந்தாவது விலா எலும்பில் (Fifth Rib), வாளை வைத்து குத்தினார். அரக்கனால், தன் தண்டாயுதத்தை பிடிக்கமுடியாமல் நிற்க, கிரேட் ஹார்ட் அவனை இரண்டாவது தடவையாக தாக்கி, அவன் தலையை தோளிலிருந்து வெட்டி வீழ்த்தினார். இதை கண்டவுடன் பெண்களும், பிள்ளைகளும் மகிழ் கொண்டாட, வழிகாட்டி ஆண்டவரை துதித்கிறார். பின்னர் அந்த இடத்தில் ஞாபகார்த்தமாக ஒரு தூணை எழுப்பி அந்த அரக்கனின் தலையை கட்டிவைத்தனர்.

கற்றுக்கொள்ளும் பாடம்

மோட்சப்பயணத்தில் போகும் பயணிகள், அநேக கள்ள போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் அவர்களை தடை செய்ய எப்போதும் நின்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்துவின் எச்சரிப்பையும், அப்போஸ்தலர்களின் எச்சரிப்பையும் அலட்சியம் செய்ய, தங்களின் ஆத்துமாவில் தாக்கப்பட்டு, ஆத்ம மரணம் அடைகிறார்கள். இவர்கள் ஆலயங்களுக்கு ஒழுங்காக போகலாம். ஆனாலும் வஞ்சிக்கப்பட்டு, ஆத்ம மரணம் அடைந்திருக்கலாம்.

இப்படியாக ஆத்ம மரணத்தை அடைந்தவர்களை, விசேஷித்த தீர்க்கதரிசன போதகர்கள், நுழை வாசலின் வழியாக சிலுவைக்கும் காலி கல்லறைக்கும், மறுபடியும் கொண்டு செல்லவேண்டும். கீழேகுறிப்பிடட படத்தை கவனிக்கவும்.

உடைந்த பாராச்சூட்டில் பறக்கும் மனிதன்!

இந்த படத்தை facebookலிருந்து எடுத்தேன். இந்த படத்திற்கு ஒரு தலைப்பு (caption) கொடுக்க வேண்டுமாம். இந்த கிழிந்த parachute ல் பறக்கும் மனிதன், முதலைகள் சூழ்ந்திருக்கும் குளத்தில் வந்து இறக்கப்போகிறான். இந்த மனிதன் போய் சேரவேண்டிய இடம் இந்த குளம் அல்ல. அவன் உடைந்து போன parachute ல் தூரமான இடம் கண்டிப்பாக போகமுடியாது. அவனை இந்த பாரச்சூட்டில் (parachute) ஏற்றியவர்கள் யார்? இந்த மனிதனும் கவனக்குறைவால் பாராசூட் ஏறும்போது இந்த ஓட்டையை கவனிக்க மறந்துவிட்டான். இன்றும்கூட, நம்மை தப்பான சுவிசேஷத்தால், சாத்தானின் கூண்டுக்குள் அநேக தேவமக்கள் கொண்டுபோய் விடப்படுகிறார்கள்). சாத்தானின் கூட்டம் நம்மை எப்போது விழுங்கலாம் என்று இந்த முதலைகள் போல காத்துக்கொண்டிருக்கின்றன. நமது பாதங்களுக்கு கீழ் நம்மை அறியாமல், அநேக கண்ணியைகளை சாத்தான் வைத்திருக்கிறான். தேவமக்களை எப்போதும் எச்சரித்துக்கொண்டேயிருக்கவேண்டும். பாலிய பாவங்களை தூண்டிவிடும் கண்ணியை, பணத்தை சட்டவிரோதமாக சம்பாதிக்கும் கண்ணியை, புறம்கூறுதல் கண்ணியை, போன்ற அநேக கண்ணியைகள் நமது கால்களின் கீழேயே இருக்கிறது.

இந்த அரக்கன், இளம் விசுவாசிகளை பயமுறுத்தி வஞ்சிக்கிறவன். இவன் வீணான நியாயமற்ற எதிர் வாக்குவாதங்களில் ஈடுபடுத்தி, இளம் விசுவாசிகளை விசுவாச பாதையிலிருந்து விலகச் செய்கிறான். அநேகர் கிறிஸ்துவை பற்றி சுவிசேஷ கூட்டங்களில் கேள்விப்படுகிறார்கள். ஆனால் சில நாட்களில், இவர்களின் உள்ளத்தில் விதைத்த விதைகளை தின்னும்படி ஆகாயத்துப் பறவைகள் வருகிறது. இந்த இளம் விசுவாசிகளை எதிர் வாக்குவாதங்களில் மேற்கொள்ளும்படி அநேக (Religious preachers) மதப் போதர்கள் ஆகாயத்துப் பறவைகளைப்போல வந்து, அவர்களை கிறிஸ்துவை நம்பாமல் அவர்களின் மத சடங்காச்சாரங்களை நம்பச்செய்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க..... யார் இந்த கிரேட் ஹார்ட்