மலைப்பிரசங்கத்தின் மேன்மை

Home

மத்தேயு, Chapter 5

ஆவியில் எளிமையுள்ளவர்கள்

3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

ஆவியில் எளிமை உள்ளவர்கள் யார்? தங்கள் குறைகளை சுட்டிக்காட்டியவுடன் அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்.குறைகளை சுட்டிக்காட்டிய கையை முத்தமிடுவார்கள். தீர்க்கத்தரசிகளை கனம் பண்ணுகிறவர்கள்.

தாழ்மையை ஆடையாக தரித்துக்கொள்பவர்கள்.

1979ம் ஆண்டில் நான் டெல்லியிலுருந்து munnar சென்றபோது நான் வேலை பார்த்த தேவிகுளம் எஸ்டேட் போயிருந்தேன். அங்கேயுள்ள CSI சபையில் செய்தி கொடுக்கச்சொன்னார்கள். நான் ஷூ அணிந்துகொண்டு pulpit க்கு போனேன். செய்தி முடிந்தவுடன் ஒரு எஸ்டேட் தொழிலாளி என்னிடம் வந்து "ஐயா நீங்கள் உள்புற பரிசுத்தத்தை மாத்திரம் விரும்பக்கூடும். ஆனால் நாங்களோ வெளிப்புறத்திலும் விரும்புகிறோம்" என்று சொன்னார். அன்று முதல் இன்றுவரை ஷூ அணிந்து எந்த pulpit ன் மேலும் நான் ஏறுவது கிடையாது.

பெருமை உள்ளவர்களுக்கு பரலோகம் கிடையாது. எவ்வளவு உண்மை. நாம் பெரிய ஊழியக்காரர்களாக இருக்கக்கூடும். ஆனால் ஆவியில் எளிமை இல்லாவிட்டால் பரலோகம் கிடையாது.


துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்

4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

இன்று நாம் அநேக காரியங்களில் துயரப்படுகிறோம். நோயின் கொடுமையால் துயரப்படுகிறோம். பண நெருக்கடியால் துயரப்படுகிறோம். ஆனால் நாம் பாக்கியவான்கள் என்று யேசுவே தன் வாயால் கூறுகிறார். நமக்கு வந்த துயரங்களுக்கு சாத்தான் தான் காரியம் என்று போதகர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் நாம் பாக்கியவான்கள் என்று ஆண்டவரே கூறுகிறாரே.

நமக்கு ஆறுதல் அளிப்பது இயேசு ஒருவரே. உன்னதப்பாட்டின் புத்தகத்தில் நம்மோடு எப்படி மணவாளன் தேற்றுகிறார் என்பதை அறிவோம்.

நமது துயரங்களை போக்க நாம் யாரிடம் போகவேண்டும்? ஏதாவது ஊழியருக்கு உடனே தொடர்பு கொள்ளவா? அவசியமில்லை. அவரிடம் போவதற்கு நம்மில் வாசிக்கும் ஆவியானவர் உதவுகிறார்.

நான் என்னுடைய வாழ்க்கையில் ஜெபிக்கவும் கூட முடியாமல் வெறும் நடை பிணமாக இருந்த தருணத்தில் ஆண்டவர் தாமே என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அற்புதத்தை செய்தார். நான் ஜெபிக்கவும் முடியாமல் ஏங்கிக்கொண்டு இருந்தேன். கண்ணீர் கூட வரவில்லை. ஆனால் ஆண்டவரோ என் சொல்லமுடியாத துயரத்தைக்கண்டார்.

நாம் ஆண்டவரை நன்கு அறிந்துகொள்ளாததால் தான் அவரை துக்கப்படுத்துகிறோம்.


சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

சாந்தகுணமுள்ளவர்கள் யார்? நமக்கு அறிவுரை அல்லது எச்சரிக்கை கொடுத்து நீதியின் பாதையில் வழி நடத்துபவர்கள். அப்படி வழிநடத்துபவர்களை சாந்த குணத்தோடு ஏற்றுகொள்ளவேண்டும். அவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு கனம் பண்ணவேண்டும்.

இரண்டாவது, எதிர்ப்புகள் மத்தியில் பொறுமையாக, நமக்கு அழைத்த அழைப்பில், ஓட வேண்டும்.

சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் கடைசி வரை இந்த பூமியில் அவர்களுக்கு ஆண்டவர் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். ஆசிர்வாதங்களுக்காக அங்கே இங்கும் ஓடவேண்டாம். ஆண்டவர் தங்களுக்கு கொடுத்த பொக்கிஷமான வேதத்தை தியானித்து அவரின் கட்டளைகளை பொறுமையோடு கைக்கொண்டாலே போதும்.

தாழ்மையுள்ளவர்கள் சாந்த குணமுள்ளவர்கள் தான்.

தாழ்மையும், சாந்தமும் இணைந்தே இருக்கும்.


"நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்

6. "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்".

நீதி என்றால் என்ன? சத்தியம், நேர்மை, தூய்மை போன்ற தன்மைகள்! எது சத்தியம், எது பொய் என்று தேவ வசனத்தை ஆதாரமாக வைத்து அறிந்து கொள்ள பசிதாகமுள்ளவர்களாகஇருக்கிறோமா? இல்லாவிட்டால், எல்லாவற்றையும் நம்பி சத்தியத்தை ஆராய்ந்து அறிந்துகொள்ள மனதில்லாமல் இருக்கிறோமா?

உங்களின் ஆத்துமாவை திருப்தி செய்வது தேவனின் வார்த்தைகளே! மனிதனின் ஆறுதலான செய்திகள் அல்ல! உணர்ச்சி வசப்படுத்தி கண்ணீர் வடிக்க பண்ணும் செய்திகள் அல்ல. சில மக்கள் கண்ணீர் வடிப்பதை காமெராவில் படம் எடுத்துக்காண்பித்து தங்களின் செய்திகள் மக்களை தொடுவதாக மீடியா ஊழியர்கள் நமக்கு காண்பிக்கிறார்கள். சத்தியம் உணர்ச்சிவசப்படுத்தலின் கோட்டை மீறி செல்லும்.

நமது வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நேர்மை இருக்கிறதா? மக்களிடமிருந்து காணிக்கைகளை பெற்று அவைகளை எவ்விதம் செலவழிக்கிறோம் என்பதை தெரிவிக்கிறோமா? Transparency வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் நேர்மை கிடையாது!

தூய்மை வாழ்க்கையிலும் ஊழியத்திலும் காணப்படவேண்டும். பணத்திலே தூய்மை இல்லாவிட்டால் வாழ்க்கையில் தூய்மை இருக்கவேயிருக்காது.

இப்படி தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக உத்தமுமாக நடந்து கொள்பவர்கள் தான் பாக்கியவான்கள்.


இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்

7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

இரக்கமுடையவர்கள், இரக்கத்தை காண்பிப்பவர்கள் என்று இரண்டு குழுவாக பிரிக்கலாம். இயேசுவின் ஆவியை பெற்றவர்கள் இரக்கமுடையவர்கள். இந்த உலகத்தின் மக்கள் அவ்வப்போதுஇரக்கத்தை காண்பிப்பவர்கள். இரக்கமுடையவர்களின் உள்ளம் எப்போதுமே இரக்கத்தால் நிறைந்திருக்கும். இவர்கள் தேவனிடமிருந்து இரக்கம் பெறுவார்கள். இரக்கத்தை இவர்களின்பணிகளின் மூலம் காணலாம். அன்னை தெரசாவின் இரக்கம் அவர்களின் அருள்பணிகளால் வெளிப்பட்டது. கருணை பணி தான் உண்மையான ஊழியம். வரங்களினால் செய்யும் ஊழியங்கள்தேவனின் கருணையை மாத்திரம் வெளிப்படுத்துகிறது. அந்த வரங்களினால் பணிபுரியும் ஊழியன் தேவனின் கருணையை மாத்திரம் வெளிப்படுத்துகிறான். அவனுக்கு தன் ஊழியத்தைக்குறித்து மேன்மை பாராட்ட இடமில்லை. இரக்கமுடையவர்கள் துன்பத்தில் தவிக்கும் மக்களுக்கு நல்ல சமாரியனாக விளங்கி உதவி செய்கிறார்கள். கொரோனா தொற்று நோயால் வாடும்மக்களுக்கு நம்மில் எத்தனை பேருக்காக உதவி செய்கின்றோம்?

இன்று நம்மில் அநேகர் "உங்களுக்காக ஜெபிப்போம்" என்று கூறி அவர்களுக்கு உதவ மறந்தால் இரக்கமற்றவர்களாக காணப்படுவோம்.

நாம் மற்றவர்களுக்கு இரக்கத்தால் உதவிசெய்து, தேவனின் கருணையை வெளிப்படுத்தும்போது நமக்கு ஆண்டவர் இரங்குகிறார். அப்போதுதான், இந்த உலகத்தில் தேவனுடைய பார்வையிலும்மனிதனின் பார்வையிலும் பாக்கியவான்களாக காணப்படுவோம்.


இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் கபடும் சூதும் இல்லாதவர்கள். இருதயத்தில் பாவத்தை ஒளித்து வைக்கமாட்டார்கள். அதை தேவனிடம் அறிக்கையிட்டு விட்டுவிடுவார்கள். இயேசுவை சத்தியத்தில் அறிந்துக்கொள்பவர்கள். இயேசுவை இருதயத்தில் முற்றிலும் ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைகளுக்கு முழு மனதோடு கீழ்ப்படிகிறவர்கள். அவர்கள் தேவனைத் தீர்க்கதரிசன கண்களால் தரிசிப்பார்கள். மாமிச கண்களால் அல்ல. இயேசுவின் சரீரமாகிய சபையை தங்களது தீர்க்கதரிசன கண்களால் கண்டு அந்த சபையின் அங்கத்தினராக இருக்கும் கோடிகோடிக்கணக்கான தேவ மக்களை நேசிப்பார்கள். கிறிஸ்துவின் சரீரத்தை நேசிக்காமல் அவர்கள் தேவனைத் தரிசிக்கமுடியாது.

உலகப்பிரகாரமான செல்வாக்கும், புகழும் இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் இவர்கள் பாக்கியவான்கள்.


இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் கபடும் சூதும் இல்லாதவர்கள். இருதயத்தில் பாவத்தை ஒளித்து வைக்கமாட்டார்கள். அதை தேவனிடம் அறிக்கையிட்டு விட்டுவிடுவார்கள். இயேசுவை சத்தியத்தில் அறிந்துக்கொள்பவர்கள். இயேசுவை இருதயத்தில் முற்றிலும் ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைகளுக்கு முழு மனதோடு கீழ்ப்படிகிறவர்கள். அவர்கள் தேவனைத் தீர்க்கதரிசன கண்களால் தரிசிப்பார்கள். மாமிச கண்களால் அல்ல. இயேசுவின் சரீரமாகிய சபையை தங்களது தீர்க்கதரிசன கண்களால் கண்டு அந்த சபையின் அங்கத்தினராக இருக்கும் கோடிகோடிக்கணக்கான தேவ மக்களை நேசிப்பார்கள். கிறிஸ்துவின் சரீரத்தை நேசிக்காமல் அவர்கள் தேவனைத் தரிசிக்கமுடியாது.

உலகப்பிரகாரமான செல்வாக்கும், புகழும் இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் இவர்கள் பாக்கியவான்கள்.


சமாதானம் பண்ணுகிறவர்கள்

9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

எங்கே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் பிளவுகள் மூலம் பகமை வெளிப்படுகிறதோ, அந்த பகமையை நீக்கி சமாதானத்தை உண்டுபண்ணுபவர்கள் பாக்கியவான்கள். அதே நேரத்தில் தேவ வசனத்தின் சத்தியத்தை நிலை நாட்ட எல்லா தேவப்பிள்ளைகளையும் ஒரே சரீரத்தில் இணைக்க பாடுபடுவார்கள். பின்பு சமூகத்தில் சண்டை சச்சரவு ஏற்படுமானால் அங்கே சமாதானத்தை கொண்டு வர முயற்சி பண்ணுவார்கள். இவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.


நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்

10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது

நீதி என்றால் என்ன? இந்த பதம் சத்தியம், நேர்மை, தூய்மை போன்ற தன்மைகளை உள்ளடக்குகிறது. இந்த காரியங்களுக்காக போராடி துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். மார்ட்டின்லூத்தர் சத்தியத்திற்காக போராடி துன்பம் அனுபவித்தார். அனேக தேவ ஊழியர்கள் சத்தியத்திற்காக போராடி தீக்கு இறையானார்கள்.

சொந்த வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்கவும், மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வைப்பதினால் துன்பம் அனுபவிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

வாழ்க்கையில் தூய்மை இல்லாமல் எத்தனை பேர் பிரசங்கம் செய்கிறார்கள்? இவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதுமில்லை. இயேசுவை தங்கள் சொந்த வாழ்க்கையில்வெளிக்காட்டாமல் அவரின் நாமத்தை வீணில் வழங்குபவர்களுக்கு பரலோகராஜ்யம் கிடையாது.


என்னிமித்தம் உங்களை நிந்திப்பது

11-12 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

சத்திய ஆவியானவருக்கான, சத்தியப் போராடத்திற்கான யுத்தம் செய்யும் அநேக தேவ தாசர்கள் முதலாம் நூற்றாண்டு முதல் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றார்கள். இன்றும் அதுபோல துன்பம் அனுபவிப்போம் என்றால் நாம் பாக்கியவான்களாயிருப்போம். நம்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பயப்படாதிருப்போம். நாம் சத்தியத்தை நிலைநாட்டும்போது ஆண்டவர் நமக்காக போராடுவார். பொறாமையினால் நாம் இந்த ஊழியத்தை செய்கிறோம் என்ற பொய்யான குற்றச்சாட்டை நம்மேல் எறிகிறார்கள்.

தேவவசனத்தை பொய்யாக்கும்படி இந்த கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்து அநேக ஊழியர்களை வஞ்சித்து தேவமக்களை சத்தியத்திலிருந்தும் அவர் மேலுள்ள விசுவாசத்திலிருந்தும் வழிவிலக செய்கிறான். இவர்கள் பிரசங்கிப்பது தான் சத்தியம் என்று நம்பும்படி, நாம் ஆண்டவரின் வேத வாக்கியங்களை தியானித்து சத்தியத்தை அறிந்துக்கொள்ளாதபடி நமது மனக்கண்களை குருடாக்கி வருகிறான். இந்த கள்ள உபதேசத்தால் வஞ்சிக்கப்பட்டு இந்த ஊழியர்களை கண்மூடித்தனமாக பின்பற்றி வரும் ஜனங்களை நமக்கு விரோதமாக எழுப்பி நம்மை நிந்தித்துத் துன்பப்படுத்தி வருகிறான்.

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் நமது பலன் மிகுதியாயிருக்கும்.


நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்

13. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

நாம் இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறோமா? இன்று கிறிஸ்துவை எல்லோரும் காணும்படியாக தொலை காட்சிகளிலும் பொது கூட்டங்களிலும் பறை சாற்றி வருகிற ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளிப்படுத்திகிறார்களா? கோடிக்கணக்கான மக்கள் இயேசுவை காண முயற்சிப்பது இவர்கள் அளிக்கும் செய்திகள் மூலமாக மாத்திரம் அல்ல, இவர்களின் வாழ்க்கையின் மூலமாகவும் தான். இவர்களின் ஆடம்பர வாழ்க்கை கிறிஸ்துவை பிரதிபலிக்கிறதா?

நமது எல்லோரது வாழ்க்கைகளை இந்த உலக மக்கள் காண்கிறார்கள். நாம் எவ்விதம் துயரப்படும் மக்களுக்கு உதவுகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

இன்று நம்மிடம் கிறிஸ்துவின் அன்பு இல்லாவிட்டால், நாம் சாரமற்றுப்போனவர்களாக காட்சியளிப்போம். நாம் வேதாகமத்தை தூக்கிக்கொண்டு ஆலயங்களுக்கு செல்வதாலும், ஆலயங்களில் ஆராதிப்பதினாலும், கூட்டம்கூட்டமாக ஜெபக் கூட்டங்களிலோ, "தேவ செய்தி" கேட்கும்படி விசேஷித்த "ஆசீர்வாத" கூட்டங்களிலோ பங்கு எடுத்தாலும், நாம் இந்த பூமிக்கு உப்பாயிருக்கமாட்டோம். நல்ல அல்லது அன்பின் கிரிகைகளினாலும், பரிசுத்த வாழ்க்கையினாலும் தான், நாம் இந்த பூமிக்கு உப்பாயிருப்போம். இன்று நமது கிறிஸ்தவ சமுதாயமே சாரமற்று, வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாமல் இருக்கிறது. இது தான் நமது இன்றைய நிலைமை.


நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்

14-16 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது

யேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாம் இந்த உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறோம். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. நாம் இந்த உலகத்திலுள்ள மக்கள்யாவருக்கும் நல்ல கிறிஸ்தவ சாட்சியமுள்ள வாழ்க்கை ஜீவித்து வெளிச்சம் கொடுக்கிறோமா?

நமது நற்கிரியைகளை மனுஷர் காண்கிறார்களா? நற்கிரியைகள் இல்லாத கிறிஸ்தவ ஜீவிதம் பிதாவை ஒருக்காலும் மகிமைப்படுத்தாது. நீங்கள் உண்மையாவே பரிசுத்தாவியானவரைப்பெற்றிருந்தால், நற்கிரியைகளை கண்டிப்பாக செய்வீர்கள்.

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


கற்பனைகளைப் போதிப்பவர்கள்

17-19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

பழைய ஏற்பாட்டின் மோசேயின் பத்து கட்டளைகளையும், தீர்க்கதரிசன புத்தகங்களின் கட்டளைகளையும் நமக்கு அவசியமில்லை என்று அநேகர் போதிக்கிறார்கள். தீர்க்கதரிசன புத்தகங்களை தியானிப்போமானால் அநேக தேவனின் எச்சரிப்புக்களை அறியலாம். நமக்கு புதிய ஏற்பாட்டின் மூலமாக அருளப்பட்ட கிருபையினால் நம்மால் இந்த கட்டளைகளை கீழ்ப்படிய முடியும். விழுந்து விழுந்து நம்மால் எழுந்துநிற்க முடியும்.

இந்த கட்டளைகளை நமது மாமிச பலத்தினால் கண்டிப்பாக கீழ்ப்படிய முடியாது. பரிசுத்தாவியானவரின் உதவியோடு கீழ்ப்படிய முடியும்.

இந்த தேவ வார்த்தைகளில் சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் கூட்டியோ குறைக்கவோ கூடாது. இவைகள் ஒழிந்தே போகாது.

இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான். இவைகளில் ஒரு சில கட்டளைகளை மீறி மனுஷருக்குப் போதிப்போமானால் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவனாக காட்சியளிப்போம். இன்று காணும் பெரிய போதகர்கள் ஏதாவது ஒரு கட்டளையை மீறி மற்றவர்களுக்குப் போதித்தால் பரலோகராஜ்யத்தில் சிறியவர்களாக இருப்பார்கள்.

இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிற ஒரு சிறிய ஊழியன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

நாம் பரலோகத்தில் ஒரு பெரிய ஆச்சரியத்தைக் காண்போம். பூமியில் அற்புதம் அடையாளங்களோடு ஊழியம் செய்து வந்த ஒரு பெரிய ஊழியனை பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் ஆக காணப்படுவான். ஏனென்றால் அவன் எந்த கட்டளையைக்குறித்து போதித்தானோ அந்த கட்டளையை கைக்கொள்ளாமல் இருந்துவிட்டான். ஆனால், தேவனின் எல்லா கட்டளைகளைக் கைக்கொண்டு ஊழியம் செய்த ஒரு சிறிய ஊழியனை பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் பெரியவன் என்னப்படுவான்.


வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதி

10. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீதி என்றால் நியாயம், உண்மை (வாய்மை), நேர்மை, இரக்கம், போன்ற தன்மைகளை உள்ளடக்கும்.

நமது மத்தியில் வேதபாரகர் பரிசேயர் என்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தேவனின் கட்டளைகளை எழுத்து மூலம் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் ஆவியினால் கடைப்பிடிக்க மாட்டார்கள். இவர்களிடம் வெளிப்படையாக எந்த பாவத்தையோ காணமாட்டோம். அவர்களிடம் நீதியும் காணப்படும். இவர்கள் மற்ற மதங்களை சேர்ந்தவர்களாவும் இருக்கக்கூடும்.

ஆனால் கிறிஸ்துவை பின்பற்றும், இதை வாசிக்கும் உங்களின் நீதியோ அவர்களுடைய நீதியிலும் அதிகமாக இருக்கவேண்டும்.அவர்களின் பரிசுத்தத்தை விட உங்களின் பரிசுத்தம் அதிகமாய் காணப்படவேண்டும். அவர்களை விட கூடுதல் நீங்கள் நியாயம் விசாரிக்கவேண்டும். அவர்களின் உண்மையை விட உங்களின் உண்மை அதிகமாக விளங்க வேண்டும். அவர்களுடைய தானதர்ம கிரியைகளை விட உங்களது தானதர்ம கிரியைகள் கூடுதலாய் காணப்படவேண்டும்.

பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க கிறிஸ்துவின் மூலமாக பாவமன்னிப்பின் நிச்சயம் இருந்தால் மட்டும் போதாது. நமது நீதியானது வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் அதிகமாக காணப்படவேண்டும்.

கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,

பலிபீடத்தின் முன் உன் காணிக்கை

21-24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

நாம் நமது ஆவிக்குரிய சகோதரர்களிடத்தில் நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளக்கூடாது. நியாயம் இருக்குமானால் கோபித்துக்கொள்ளலாம். ஆண்டவருடைய வார்த்தைகளைத் திரித்து பிரசங்கம் பண்ணும் சகோதர சகோதரிகளுடன் தர்க்கம் செய்ததின் விளைவாக நீங்கள் நியாயத்தோடு கோபித்துக்கொள்ளலாம். ஆனால் நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளக்கூடாது. நம் மேல் நியாயத்தோடு குற்றச்சாட்டுகள் கொண்டுவரும் தேவமக்களோடு கோபித்துக்கொள்ளக்கூடாது. அப்படி கோபித்துக்கொண்டால் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்போம். ஜாக்கிரதை!

தன்னை எச்சரித்து நல்வழி படுத்தும் சகோதரனை பகைக்காதே! அவனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

ஆகையால், இப்படி நம்மை எச்சரித்து வழிநடத்தும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் சகோதரர்களை பகைத்து அவர்களின் உள்ளத்தில் உங்கள்மேல் குறைவு இருக்குமானால் நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வரும்போது அங்கே நினைவுகூறவேண்டும். அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

இன்று அநேக தேவமக்கள், தங்களின் பாவத்தைக்குறித்தோ அல்லது தேவ வசனங்களை மீறுதலைக் குறித்தோ எச்சரித்த தீர்க்கத்தரசிகளைப் பகைத்து தேவ சன்னதியில் வந்து பலி செலுத்த வரக்கூடாது.


எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில்

25-26 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

நம் மேல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டால் நாம் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவோம். ஆனால் விவேகத்தோடு நடந்து கொள்வோமானால் நமது எதிராளியோடு உடனே ஒப்புரவு ஆகவேண்டும். நீதி மன்றத்திற்கு போகும் முன்பே ஒப்புரவாகவேண்டும்.

ஒரு தேவ ஊழியனுக்கு விரோதமாக சட்டத்தின் கீழே குற்றச்சாட்டு வருமென்றால் உடனடியாக அவனது எதிராளியோடு ஒப்புருவாகவேண்டும். நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேவனது நாமம் தூஷிக்கப்படும்.

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.


ஒரு ஸ்திரீயை இச்சையோடு

17-28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

புதிய ஏற்பாட்டின் கீழே விபச்சார பாவம் செய்பது விபச்சார எண்ணம் கற்பனை உலகத்தில் வந்தாலே போதும். இன்று நாம் கிறிஸ்தவ தொலைக் காட்சிகளிலும் வாலிபப்பெண்கள் அழகான ஆடைகள் அணிந்து கடற்கரையின் ஓரமோ காட்டுகளிலோ நடனம் ஆடி வருவதை காண்கிறோம். ஒரு பெண் பிள்ளை வித விதமான நவீன ஆடைகளை அணிந்துக்கொண்டு நடனம் ஆடி வரும்போது இந்த காட்சிகளைக் காணும் ஒரு வாலிப பையனுக்கு மனதில் அந்த பெண்ணை மணந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை வராதா? அவனது உள்ளத்தில் விபச்சார பாவம் செய்ய தூண்டுதல் வராதா? இதற்கு யார் காரணம்? அந்த தொலை காட்சியை உண்டுபண்ணும் ஊழியர் தானே பொறுப்பு! அந்த வாலிபபெண்ணை குற்றம் சுமற்றக்கூடாது. இதேபோல வாலிபபையன்களும் பெண்பிள்ளைகளைக் கவரும்படியாக மேடையில் ஆடியோ, பாடியோ வசீகரிக்கக்கூடாது. எல்லாவற்றிலும் ஒழுக்கமும் கண்ணியமும் கட்டுப்பாடும் அவசியம்.

இன்று அநேக Youtube சேனல்களிலும் இந்த காட்சிகளைக் காணலாம். எது சினிமா உலகத்தைப் போல ஒரு entertainment தான்!


உன் வலது கண் வலது கை

29-30. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

உங்களது வலது கண்ணின் மூலம் எதையாவது இட்சித்து பாவம் செய்ய ஏதுவாயிருந்தால் அந்த கண்ணை பரிசுத்தாவியானவரின் உதவியோடு அடக்கிக்கொள்ளலாம். இன்று நமது கண் மூலமாக அநேக காட்சிகளைக் காண்கிறோம். இச்சையை தூண்டும் படங்களை டிவி மூலமாகவோ இன்டர்நெட் மூலமாகவோ காண்கின்றோம்.

ஒரு பிரசித்திப்பெற்ற ஊழியர் ஒரு விலையுர்ந்த காரை வைத்து இருந்தாலோ ஒரு அடுக்கு மாடி கட்டிடம் கட்டினாலோ அதே போல இச்சிக்கிறோம். இந்தக் கண்ணின் மூலம் நரகத்திற்கான காரியங்களைச் செய்து வருகின்றோம்.

நமது வலது கையின் மூலமாக தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்ய முற்படுகிறோம். அந்த காரியங்களைச் செய்யாமல் ஆவியானவரின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுப்பது நல்லது. இந்த கையின் மூலம் நரகத்திற்கான காரியங்களைச் செய்து வருகின்றோம்.


உள்ளதை உள்ளதென்றும்

37. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

இன்று நாம் செய்யும் மிகவும் பொல்லானது என்னவென்றால் உள்ளதை உள்ளதென்று சொல்ல தயங்குகிறோம். அநேக ஊழியர்கள் தங்களது ஊழியங்களை மிகப்படுத்தியும், தேவன் செய்த அற்புதங்களை மிகப்படுத்தியும் எழுதுகிறார்கள். இன்று அவர்கள் உபயோகிக்கும் கருவி marketing ஆகும். பொய்யான காரியங்களை பரப்பினால் அது தீமையினால் உண்டானதாம். தேவன் தண்டிப்பார்.


மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடி

மத்தேயு, Chapter 7

1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

4. இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

5. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

இன்று நம்மிடம் எல்லா வசதிகள் இருக்க internet, video, television media போன்ற கருவிகளை பிரயோஜனப்படுத்தி மற்றவர்கள் செய்யும் பிழைகளை தப்பென்று தீர்க்கிறோமா? அதே பிழைகளை நாம் செய்கிறோமா? இல்லாவிட்டால், மற்றவர்கள் செய்யும் பிழைகளை விட கூடுதலாக செய்து நமது கண்களில் உத்திரம் இருக்கிறதா?

நமது சகோதரர்கள் கண்களில் துரும்புகள் இருக்குமானால் முதலாவது நமது கண்களிலுள்ள உத்திரங்களை ஆராய்ந்து பார்த்து அவைகளை களையவேண்டும்.

எது உத்திரம் என்று தீர்மானிப்பது தேவ வார்த்தையே!

தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாவிட்டால் அது ஒரு உத்திரமாக மாறிவிடும்.

ஜாக்கிரதையாக இருப்போம். நமக்கு தேவன் கொடுத்த நவீன வசதிகளை துர்பிரயோஜனம் செய்யாமல் இருப்போமாக. நமக்கு தேவ மக்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாவையும், மற்றவர்களை இழிவு படுத்த உபயோகப்படுத்த வேண்டாம்.

தீர விசாரியாமல் எந்த குற்றச்சாட்டுக்களையும் public domain க்கு கொண்டு வரக்கூடாது. அப்படியே கொண்டுவருவதாக இருக்குமானால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்களையும் பிரசுரிக்கவேண்டும்.


பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்

மத்தேயு, Chapter 7

6. பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

பரிசுத்தமானவைகள் என்றால் தேவ வசனத்தின் வெளிச்சமும் அதன் வெளிப்படுத்தல்களும் தான். இன்று நாம் வசனத்தின் சத்தியத்திற்காக போராட வேண்டும். ஆனால் அவைகளை தருக்க முறையில் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்னதான் புரிந்துகொள்ளும்படியாக விவாதித்தாலும், அவைகளை உதாசீனம் பண்ணிவிட்டு அவர்களுக்கு அன்போடும் தாழ்மையுடன் போதிப்பவர்களை ஏளனம் செய்து அவர்களை தகாத வார்த்தைகளால் துக்கப்படுத்துவது சோசியல் மீடியாவில் சகஜமாகிவிட்டது. நாயைப் போல குறைக்கும் குணம் குணமுள்ளவர்கள். சிந்திக்க மனமில்லாதவர்கள். மூளை சலவு செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் பன்றியைப் போலவும் குணமுள்ளவர்கள். தேவ வசனத்தின் சத்தியத்தை காலால் மிதித்து மனிதர்களின் குரலுக்கு செவிகொடுப்பவர்கள். இந்த குணம் உள்ளவர்கள் இயேசுவின் கிருபையால் இரட்சிக்க பட்ட மனிதர்கள் அல்ல. முத்துக்களை போலான தேவ வசனங்களை இவர்கள் முன்னால் போட்டுக்கொண்டே இருக்கவேண்டாம். சத்திய ஆவியானவர் இவர்களோடு எப்போதும் போராடிக்கொண்டிருக்க மாட்டார்.


கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

மத்தேயு, Chapter 7

7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

8. ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

10. மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?

11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

12. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

உங்களுக்கு என்ன தேவை? எந்த ஊழியரையும் தேடிப்போய் ஜெபிக்கவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அவர்களது அலுவலகத்திற்கோ தொடர்பு கொள்ள அவசியமில்லை. உங்களது அன்பான பரமபிதா உங்களின் வாயின் மூலமாக வரும் விண்ணப்பங்களை கேட்க ஆவலாயிருக்கிறார். அவரது இதயக் கதவை ஒரு தடவை தட்டியால் போதும். உடனே திறக்கப்படும். தட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை. அறியாத மக்களிடமோ அல்லது அறிந்த மக்களிடமோ கெஞ்சி ஜெபிக்கச் சொல்ல அவசியமில்லை.

தேவனுடைய வீட்டில் உங்களுக்கு வேண்டியவைகளை விசுவாசத்தில் தீர்க்கதரிசன கண்களின் மூலம், தட்டியவுடன் காணவேண்டும்.

பொல்லாதவர்களான நாம் நமது பிள்ளைகளுக்கு

நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

நாம் நமது பரம தேவனின் இரங்கும் மனதை அறியாமல் இருக்கிறோம். அவர் இரக்கம் இல்லாதவராகவும், நாம் கதறி கதறி அழுது ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் அவர் மனமிரங்குவார் என்ற தப்பான உபதேசத்தை கேட்டு வருகிறோம். ஊழியர்கள் தான் நமக்கு தேவ ஆசீர்வாதங்களை கொண்டுவருவார்கள் என்ற தப்பான உபதேசத்தை நம்பியே இருக்கிறோம்.

உங்களது பிள்ளை மீனைக் கேட்டால் பாம்பை கொடுப்பீர்களா?

இந்த தேவ வசனங்களை நன்கு அறிந்திருந்தும், நாம் நமது சபை போதகரையோ அல்லது ஒரு ஊழியரையோ நம்பி கிறிஸ்தவ வாழ்கையை வாழ்ந்து வருகிறோம். எந்த தீர்க்கத்தரசிகளையும் நம்பி ஓடவேண்டாம்.

நாம் சத்தியத்தை அறிந்துக் கொள்வதற்கு அநேக ஊழியர்கள் விரும்புவதில்லை.

ஏதாவது ஊழியர்கள் தம்மிடம் ஜெபத்திற்காக வரும் தேவ மக்களை இந்த வசனங்களைக் சுட்டிக்காட்டி, நீங்கள் தேவனிடம் நேராக ஜெபிக்கும்படி வழி நடத்துகிறார்களா? தாங்கள் ஜெபித்து அற்புதம் கிடைத்தால் அவர்களுக்கு வரும் புகழ்ச்சியையே மாத்திரமே விரும்புகிறார்கள். உண்மையான ஊழியன் தேவ நாமம் மகிமை அடைவதை மாத்திரம் விரும்புவான்.

இந்த வசனங்களை வைத்தே ஜெபிக்கவேண்டும்.

நீங்கள் எந்த காரியங்களுக்காக மனிதர்கள் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களோ அதே உதவிகளை அவர்களுக்கு செய்ய உதவுங்கள். இதுதான் ஆண்டவர் உங்களிடம் எதிர்பார்ப்பது. ஆண்டவரின் இதயக்கதவை தட்டியவுடன், நாம் எந்த காரியத்திற்காக அவரின் சமூகத்தில் ஜெபித்தோமோ, அதே காரியத்திற்காக உங்களிடம் உதவி கேட்டு யாரும் வந்தால் உங்களால் செய்ய முடிந்தால் முயற்சி செய்யவும். உங்களால் செய்யமுடிய விட்டாலும் பரவாயில்லை. ஆனால், இந்த மனப்பான்மை இருந்தாலே போதும். இதற்கு மேலாக எந்த தேவ கட்டளையும், தீர்க்கதரிசனமும் கிடையாது.

நீங்கள் இந்த சத்தியத்தைக் கண்டிப்பாக அறிந்த கொள்ளவேண்டும்.


கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்

மத்தேயு, Chapter 7

15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.

19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

கள்ள தீர்க்கத்தரசிகளை அவர்களின் கனிகளின் மூலம் தான் அறிவோம். அவர்கள் பிரசங்கிக்கும் "அருமையான செய்திகள்" மூலம் அல்ல. தாழ்மை என்ற கனிதான் எல்லா கனிகளிலும் உயர்ந்தது. தங்களை மற்ற மனிதர்களை விட மேலானவர்கள் என்று உயர்த்தி, தங்களை எதிர்ப்பவர்களின் கருத்துக்களை நிராகரிப்பவர்கள்! வேத அறிவு குறைவுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் தாழ்மை இருக்கிறதா?

இரண்டாவது கனி அயலாகத்தாரை தன் குடும்பத்தைப்போல நேசித்து, உதவுவது. அன்பை பற்றி செய்தி கொடுப்பது அல்ல.

மூன்றாவது கனி இச்சையடக்கம். தனது ஐம்புலன்களை பரிசுத்தஆவியானவரின் உதவியோடு சிலுவையில் அறையப்படுவது.

பணத்தின் மேல் இச்சை உள்ளவர்கள். புகழின் மேல் இச்சை உள்ளவர்கள். மாமிச இச்சை உடையவர்கள். இந்த மூன்று இச்சைகள் கொடுமையானவைகள். பணம், புகழ், மாமிசம் -

இந்த கனிகளை கொடுக்காத மரங்கள் எல்லாம், வெட்டுண்டு எறியப்படும். எந்த ஊழியமாகவும் இருக்கக்கூடும்.

கள்ள தீர்க்கத்தரசிகள் பட்சிக்கும் ஓநாய்கள். இவர்களை அடையாளம் கண்டுபிடித்து விலகி ஓடவும். அருகிலே போகவேண்டாம்.


பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன்

மத்தேயு, Chapter 7

21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

ஆண்டவரின் சித்தத்தை அறிந்து இன்று நாம் எந்த ஊழியம் செய்யவேண்டும் என்றோ அதை எப்படி செய்யவேண்டும் என்றோ அறிந்திருக்கிறோமா? இன்று நாம் காணும் ஊழியங்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒரு சபை ஆரம்பித்து, பின்பு தசமபாகம் வாங்கி குடும்பம் நடத்துவது! அல்லாவிட்டால் ஒரு சுவிசேஷ ஊழியத்தை ஆரம்பித்து, கட்டிடம், projects ஆரம்பிக்க பணம் பறிக்க துடங்குவது? யாரும் வேதத்தை ஆதாரம் வைத்து, தட்டிக்கேட்டால் ஆண்டவர் என்னோடு பேசினார் என்று சொல்லுவது!

எத்தனையோ, விதவிதமான ஊழியங்கள் இருக்கிறது.

ஆண்டவரின் சித்தத்தை அறியாமல், ஒரு ஊழியம் ஆரம்பித்து தீர்க்கதரிசனம் உரைக்கலாம். அல்லது அவரின் நாமத்தில் அற்புதங்கள் செய்யலாம். ஆனால் நமது ஊழியங்களை அளந்து பார்த்து, எடைப் போட்டுப் பார்த்து, judge பண்ணும் சமயத்தில் ஆண்டவர் "உங்களை அறிவேன்" என்று சொல்வார். நீங்கள் கோடிக்கணக்காக கட்டி வந்த கட்டிடங்கள் அவரின் கண்களில் தெரியாது. உங்களது "தேவ திட்டங்கள்" அவரது கண்களில் தெரியாது....

ஒரு பிரசத்திப்பெற்ற television ஊழியர் தேவனுக்கென்று ஒரு வீடடைக் கட்டி "தேவ திட்டம்" நிறைவேறுகிறது என்று கூறுகிறார். சதுர அடி ஊழியம், TV பங்காளர் என்ற தங்களது சொந்த திட்டங்களை ஆரம்பித்து, தேவனின் நாமத்தை வீணில் வழங்காதிருப்பார்களாக! தங்களின் சொந்த திட்டங்கள் என்று சொன்னால் என்ன?

நம்மை அதிரவைக்கும் எச்சரிப்பு என்னவெனில் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டோமாம்? ஆண்டவருக்கென்று ஆத்துமாக்களை ஆதாயம் செய்தும், அவரது சித்தத்தை செய்யாமல் இருப்போமானால் பரலோக ராஜ்யம் கிடையாதாம்.

அந்நாளில் "அநேகர்" இருப்பார்களாம். நீங்கள் அதில் இருக்கக்கூடும். ஆகவே உடனடியாக நீங்கள் செய்யும் ஊழியத்தை பரிசோதனை செய்து பார்க்கவேண்டும்.

#எழுப்புதல் #கள்ளத்தீர்க்கதரிசனம் #கொரோனாஜெபம் #revivalprayer


இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன்

மத்தேயு, Chapter 7

24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

6, 7 ம் அதிகாரங்களில் எழுதியுள்ள ஆண்டவரின் கட்டளைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எப்படி ஜெபிக்கவேண்டும், எப்படி உபவாசம் எடுக்கவேண்டும் என்றும், எப்படி தானதர்மங்கள் செய்யவேண்டும் என்றும், எப்படி முதலாவது தேவராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடி நாம் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்றும், எப்படி ஆண்டவரின் சித்தத்தை மாத்திரம் அறிந்து ஊழியம் செய்யவேண்டும் என்பதையும் குறித்தும், எப்படி ஆண்டவரிடம் கதவை தட்டிப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைக் குறித்தும் தெள்ளத்தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆடுகளின் தோலை போர்த்திக்கொண்டு வரும் ஓநாய்களை போன்ற கள்ள தீர்க்கத்தரசிகளை குறித்தும் எச்சரிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நாம் இந்த ஓநாய்களால் வஞ்சிக்கப்படுவோமானால், ஆண்டவரை குற்றப்படுத்தி, தப்பிக்கொள்ள சாக்கு சொல்ல முடியாது.

இவைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்று உரைப்பது ஒரு கள்ள தீர்க்கத்தரசியே?

இந்த வார்த்தைகளின் படி செய்யாதவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பாக இருக்கிறான்.

இன்றைக்கு பெரு வெள்ளமான #கொரோனா இன்று மணலின் மேல் கட்டப்பட்டு வந்த ஊழியங்களை மோதி அழித்துக்கொண்டிருக்கிறது.

இந்த மணலின் மேல் கட்டப்பட்ட ஊழியங்களை நம்பாமல் ஆண்டவரை முழு மனதுடனும் முழு ஆத்துமாவோடும் தேடி அன்பு கூறவும்.

#எழுப்புதல் #கள்ளத்தீர்க்கதரசி #revivalprayer

Home