பறந்து காக்கிற பட்சிகளைப்போல காக்கும் தேவன்

இந்த உலகத்தில்  ஆண்டவரின் மூலமாக ஆசிர்வாதம் பெறாமல் "சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" இந்த உலகத்தில் அரசியல், பண செல்வந்தம் உள்ளவர்களை நாடி பெற்ற குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, அநேக ஆஸ்திகளை சம்பாதித்து அவைகள் மேல் நம்பிக்கை மகா பெலசாலிகளாகயிருப்போமானால் ஐயோ! புகழ், பணம், ஆஸ்திகள், செல்வாக்கு போன்றவைகளை பெற்று அவைகள் உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்று நம்பினால் நீங்கள் எகிப்தின் குதிரைகள்மேல் நம்பிக்கை வைத்தால் ஆண்டவரின் கோபாக்கினை கண்டிப்பாக வரும்.

 

ஞானமுள்ள கர்த்தர், தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். ஆகவே நாம் தீமை செய்யாமல் நன்மை செய்வோமாக.

 

எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள். எகிப்தியரை போல அரசியல், பண செல்வாக்கம் மிகுந்த மனிதர்களை நம்பினால் நாம் தோற்றுப்போவோம் (1-3).

 

கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும்  யுத்தம்பண்ண இறங்குவார். நாம் சீயோன் மலையில் இருந்தால் நமக்கு விரோதமாக யாரும் எழும்பமுடியாது.

 

பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். கர்த்தர் நம்மை சூழ்ந்து நின்று நமக்கு விரோதமாக எழும்பும் மனிதர்களோடு யுத்தம் பண்ணி பறந்து காக்கிற பட்சிகளைப்போல நம்மை பாதுகாப்பார்  (4-5).

 

"இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்". நாம் கள்ள உபதேசத்தால் வஞ்சிக்கப்பட்டு எகிப்தியரை முற்றிலும் நம்பி ஆண்டவரை விட்டு விலகிவிட்டோம். இப்போது கர்த்தரிடம்  திரும்புங்கள்.

 

"உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்". உங்களின் கைகள் மூலம் ஆவிக்குரிய உலகில் அநேக வெள்ளி, பொன் விக்கிரகங்களை உருவாக்கி வளர்த்து வருகிறீர்கள். திருமறையை சரியாக விளக்கம் அளிக்கும் உண்மையான தீர்க்கத்தரசிகளை விட்டுவிட்டு திருமறையை புரட்டி ஒரு கோணலாக போதிக்கும் கள்ள போதகர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள். அவர்கள்தான் இந்த விக்கிரகங்கள்.

 

இந்த காலத்தில் ஆண்டவர் தம் மக்களை அசீரியனை போல கொடுங்கோல் ஆட்சி புரியும் அரசர்களை தண்டிப்பார்.  "வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்". ஆண்டவர் அசீரியனை அவனது வாலிப பலத்தை மேற்கொண்டு பறந்து காக்கிற பட்சிகளைப்போல நம்மை பாதுகாப்பார். அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்.

 

அந்த அசீரியனின் கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார். அந்த யுத்தத்தில் தம்மை “சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர்” என்று வெளிப்படுத்துவார் (6-9)