Jeremiah 6th Chapter
"பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குவேன்.
மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,
அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;
எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்".
சீயோனின் குமாரத்தி என்பது யார்? இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட தேவமக்கள். இவர்கள் பாவம் செய்து, உடனே மனம்திரும்பாமல் பின்மாறி போனவர்கள். கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் கள்ள தீர்க்கத்தரசிகளின் குரலுக்கு செவி கொடுத்து தேவனின் கோபத்திற்கு உள்ளானவர்கள்.
செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குகிறார். மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள். அந்த கொடூரமான மக்கள் மேய்ப்பரும் அவனின் மந்தை போல கூடாரம் போட்டு ஒன்று சேர்ந்து சீயோன் குமாரத்தியை துன்புறுத்துவார்கள்.
"சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது".
எருசலமே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை. தேவனின் கண்களுக்கு நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஊழியங்களிலும் கொடுமை காணப்படுகிறது. சபை விசுவாசிகளை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமான வாழ்க்கை செய்து வரும் அநேக போதகர்கள். ஏழை விசுவாசிகளிடமிருந்தும் தசம பாகம் வாங்கப்படுகிறது. சபை மக்கள் உழைத்துக் கொடுக்கும் காணிக்கைகளை எப்படி செலவு செய்யப்படுகிறது என்று ஒரு கணக்கு (transparency missing) கொடுக்கப்படுவதில்லை.
கொடுமையும் அழிம்பும்; துக்கமும் காயங்களும் நித்தமும் தேவனுக்கு முன்பாகக் காணப்படுகிறது.
"எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.
என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்".
ஆண்டவரின் ஆத்துமா நம்மோடு எப்போதும் போராடிக்கொண்டிருக்காது. நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன் (வெளி 2:5). இன்று அநேக தேவபிள்ளைகளின் வாழ்க்கையிலிருந்து பரிசுத்தாவியானவர் போய்விட்டார். விசேஷமாக அநேக போதகமார்களிடமிருந்து ஆவியானவர் போய்விட்டார். அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார், பாழும் குடியற்ற தேசமாக மாறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆராதனை செய்துவருகிறார்கள். ஆராதனையில் வாசமாயிருக்கும் ஆவியானவரே என்று பாடி வருகிறார்கள்.
"திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".
இயேசுவின் வசனத்தில் நிலைத்திருக்காத பட்சத்தில் அந்திகிறிஸ்துவின் பொல்லாத ஆவிகள் சபைகளில் புகுந்து வஞ்சிக்கப்படாமல் மீதியாயிருக்கும் ஆத்துமாக்களையும் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று தீர்க்கதரிசனம் நம்மை எச்சரிக்கிறது. ஆகவே நாம் நாம் ஆண்டவரிடம் தனியாக ஜெபித்து அவரின் வேதத்தை வாசித்து சத்தியத்தை அறிந்துக்கொண்டு இந்த கடைசி காலத்தில் வஞ்சிக்கப்படாமல் ஜாக்கிரதையாக இருப்போமாக.
"அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை".
நமது செவி தேவ வசனத்தை கேட்கமுடியாமல் விருத்தசேதனமில்லாமலிருக்கிறதா? இயேசுவின் வார்த்தைகளோ அப்போஸ்தலர்களின் உபதேசமோ நமக்கு நிந்தையாயிருக்கிறதா? விருப்பமில்லாமலிருக்கிறோமா?
"ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்".
தேவனின் நியாயத்தீர்ப்பு வெளிப்படும்போது நமது பிள்ளைகள் வாலிபர்கள் பெண்கள் முதியவர்கள் எல்லோர்களுடய மேலும் வருகிறது. ஆகவே நாம் தேவனுக்குப் பயந்து அவரின் வசனத்திற்கு கீழ்ப்படியவேண்டும். பழைய ஏற்பாட்டில் தீர்க்கத்தரசிகள் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தனர்.
"அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.
சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்".
இன்று நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட மக்கள். பாவத்தை கண்டிக்காமல் சமாதானமத்தை உங்களுக்கு கட்டளையிடுகிறோம் என்று தேவ ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறோமா? இயேசு கட்டளையிட்ட சமாதானம் நம்மோடு நிலைத்திருக்கவேண்டுமானால் பாவ வாழ்க்கையை விட்டு மனம்திரும்பி அவரோடு ஒப்புரவாகவேண்டும். தேவனின் கிருபை பெரிதானதுதான். மனம்திரும்புவர்களுக்குத் தான் கிருபை கிடைக்கும்.
"அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
தேவனுக்கு அருவருப்பானதைச் செய்கிறோமா? பாவம் மாத்திரம் அல்ல . அக்கிரமும் அநீதியுமான காரியங்கள் அவரின் பார்வையில் அருவருப்பானவைகள். தேவன் விசாரிக்குங் காலத்தில் இடறுண்டு போவோம், அவரின் மகா தயவினால் விசாரிக்கும் காலம் தள்ளிப்போகிறது. ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் இந்த வாழ்க்கையிலே வரும். ஆகவே ஜாக்கிரதையாக இருப்போமா.
"வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்".
பூர்வ பாதைகள் என்றால் பழைய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்களின் பரிசுத்த பாதை.
ஆதி அப்போஸ்தலர்களின் நடந்த பாதைகள். இன்று வஞ்சிக்கப்பட்ட போதகர்கள் காண்பிக்கும் பாதைகள் அல்ல. நல்ல வழி எங்கே என்று உங்கள் உள்ளில் வாசமாயிருக்கும் ஆவியானவர் தெளிவாக காண்பிக்கிறார். அந்த வழியில் நடக்கமாட்டோம் என்று கூறாதிருங்கள்.
"நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்".
இன்றும் நமக்கு காவலாளர்களை எக்காளம் ஊதும்படி தீர்க்கத்தரசிகளாக கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில் இரண்டாவது இடத்தில் , அதாவது அப்போஸ்தலர்களுக்கு கீழே நியமித்திருக்கிறார். அப்படி கேளாமல் போனால் நம்மேல் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவார். நாம் பயப்படும் காரியங்கள் நேர்ந்துவிடும்.
"சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
புதிய ஏற்பாட்டின் தேவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் எந்தவிதமான மனிதர்களை கவர்ந்து இழுக்கும்படியான துதி ஆராதனைகளை நடத்தியும், காணிக்கைகளை கொடுத்ததும் தேவனை பிரியப்படுத்தமுடியாது. நாம் அப்படி செய்ய முற்பட்டால் நமக்கு விரோதமாக இடறல்களை அவர் வைப்பார். நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. நமது வயதுமுதிர்ந்த குடும்பத்தார், பிள்ளைகள், நம்மை சார்ந்த மக்கள் எல்லோரும் இடறல் அடைவார்கள். நம் மூலமாக வரும் ஆசிர்வாதங்கள் தடைப்பட்டுவிடும்.
"இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.
அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கணும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.
வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்".
சீயோன் குமாரத்திக்கு விரோதமாக எழும்புவது பலம் வாய்ந்த புற ஜாதி மக்களின் கூட்டம். இவர்கள் இரக்கம் இல்லாத கொடியர். நாம் இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பி அழவேண்டும்.
"நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்".
தேவன் தீர்க்கதரிசி எரேமியாவைப் போல தன் ஜனங்களுக்காக அழுது தேவனிடத்தில் விண்ணப்பம் செய்து அந்த ஜனங்களை இயேசுவின் கிருபையால் தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப வைக்கும் தீர்க்கத்தரசிகள் அவசியம்.
கீழ்ப்படியாமல் பின்மாறிப்போன தனது ஜனத்தின் தன்மையை ஆண்டவர் மேலேயுள்ள வசனங்களில் தேவன் வர்ணிக்கிறார். தீர்க்கதரிசன புத்தகம் பயங்கரமாயுமான வார்த்தைகளால் நம்மை எச்சரிக்கிறது.