Jeremiah 14th chapter
ஆவிக்குரிய வறட்சியின் காலம்
மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
"யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.
அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர்செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்".
ஆவிக்குரிய மழை பெய்யாததால் எல்லா ஊழியங்களிலும் சபைகளிலும் ஆவிக்குரிய வறட்சி காணப்படுகிறது. வெறும் ஆராதனைகளும், பிரசங்கங்களும் நடைபெறலாம். பரிசுத்த ஆவியானவரின் கிரிகைகள் காணப்படவில்லை. அவரின் வழிநடத்தல் இல்லை. மனிதர்களின் மகிமை வெளிப்படுகிறது. தேவனின் நாமம் மகிமைப்படுவதில்லை. தேவமக்களின் கூக்குரல் எழும்புகிறது. அவர்களின் ஜெபங்கள் கேற்கப்படவில்லை. கிறிஸ்தவ உலகத்தில் பிரபலமானவர்கள் தங்களது சிறுவர்களை அனுப்பி தேவனின் ஆசிர்வாதத்தை தேடி வந்தும் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள். தேவன் விரும்பும் பாத்திரங்கள் காணவில்லை. வனாந்தரத்தில் காணப்படும் தாழ்மையான ஊழியர்கள் இல்லை . சத்தியத்திற்கு கீழ்ப்படியும் தேவ மக்கள் இல்லை.
தேசத்தின்மேல் ஆவியானவரின் கிரியை இல்லாததினால் நமது மத்தியில் தேவனின் ஆசிர்வாதம் இல்லை. ஊழியங்களில் பலன் இல்லை. பயிர்செய்கிறவர்கள், ஊழியக்காரர்கள்,உலகத்தாரின் முன்பு வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளும் நிலைமை உருவாகிவருகிறது
"வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.
காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.
கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்".
புல் இல்லாத காலம். இயேசுவை அறிந்த விசுவாசியான மக்களுக்கு ஆவிக்குரிய ஆகாரம் கொடுக்க ஊழியர்கள் இல்லை. அந்த விசுவாசிகள் புல் இல்லததால் தங்களின் மேய்ப்பரான இயேசுவை விட்டு வெறும் காற்றை மாத்திரம் கொடுக்கும் கள்ள ஊழியர்களின் பின்னால் சென்று தங்களின் ஆவிக்குரிய கண்களின் பார்வையை இழந்து வருகின்றனர்.
உங்களுக்கு விரோதமாக சாட்சி கொடுப்பது உங்களின் அக்கிரமங்கள்! இந்த நிலையில் நீங்கள் தேவனை நோக்கி "உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்" என்று அறிக்கை செய்யவேண்டும்..
"இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?
நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களை விட்டுப் போகாதிரும்".
மேற்கொண்டு மனம்திரும்பி தேவனை நோக்கி,"இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?
நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களை விட்டுப் போகாதிரும்" என்று கதறி அழுவோமானால் இரட்சிப்பு நம்மேல் மறுபடிவரும்..
"அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.
கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்".
தேவனுக்கு விரோதமாக நீங்கள் செயல்படும்போது கர்த்தர் உங்கள் மேல் பிரியமாயிராமல், இப்பொழுது உங்களின் அக்கிரமத்தை நினைத்து, உங்கள் பாவங்களை விசாரிப்பார். ஆகவே பாவத்தை மறுக்காமல் அதை வெறுத்துவிட்டு அறிக்கை செய்து விட்டுவிடவேண்டும். இன்று நாம் அநேக கள்ள ஊழியர்கள் பயங்கரமான பாவங்களை செய்துவிட்டு துணிகரமாக மக்களின் முன்பு மறுத்து வருகிறார்கள். நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம். பாவத்தை மறைத்து மக்களை ஏமாற்றும் கள்ள ஊழியர்கள் உபவாசித்தாலும், தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், தேவன் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் அவர்களை நிர்மூலமாக்குவார். அவர்களுக்கு இரட்டிப்பான ஆக்கினை தீர்ப்பு காத்திருக்கும்.
"அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்த தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்".
இன்று அநேக கள்ள தீர்க்கத்தரசிகள் எழும்பி தேவனுக்கு விரோதமாக விபச்சாரம், வேசித்தனம் செய்யும் கள்ள போதகர்களை கண்டித்து வழிநடத்தாமல் அவர்களுக்கு உதவி செய்துவரும் கள்ள தீர்க்கத்தரசிகளை பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் தேவன் அழிப்பார். அவர்கள் சாவார்கள். தேவன் அனுப்பாதிருந்தும், அவரின் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லிவரும் பிரசித்தமான ஊழியர்களை நாம் இன்று காணலாம். இந்த கள்ள தீர்க்கத்தரசிகளை பின்பற்றி மோசம் போகும் ஒரு பெரிய கூட்டத்தைக் காணலாம். அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். தேவன் என்னோடு பேசினார் என்று உங்களை வஞ்சிக்காமல் இருக்க கவனமாக இருக்கவேண்டும். அவர்களின் செய்திகளை யூடுய், television மூலமாகவோ கேட்கவேண்டாம்.
"அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்".
நீங்கள் இந்த கள்ள தீர்க்கத்தரசிகளின் செய்திகளை கேட்டு வஞ்சிக்கப்பட்டால் உங்களின் குடும்பத்தாரும், பிள்ளைகளும் தேவனின் ஆக்கினை தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அந்த கள்ள தீர்க்கத்தரசிகளின் கூட்டங்களிலோ சபைகளிலோ இருக்கவேண்டாம் .எரேமியா தீர்க்கதரிசி போன்ற உண்மையான தீர்க்கர்கள் உங்களுக்காக இரவும்பகலும் விண்ணப்பம் பண்ணி தேவனின் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகையாக இருக்கும் நீங்கள் மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் அடிபட்டு வேதனை அனுபவிக்கும் உங்களுக்காக விண்ணப்பம் பண்ணி எச்சரித்து வருகிறார்கள்.
"நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்".
தேவனின் நியாத்தீர்ப்பிற்கு ஓடி மறைந்துகொள்ளமுடியாது. பட்டயம், பஞ்சம் உங்களை பின்தொடரும். தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள். இன்று நடப்பது இதுதான். வேதத்தை எடுத்து போதிப்பவர்களை நம்பாதே. அவர்கள் சத்தியத்தை அறியாதவர்கள்.
எரேமியா தீர்க்கன் இவ்விதமாக கதறி அழுகிறான். "யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
கர்த்தாவே, எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
எரேமியவைப்போல மேலேயுள்ள மன்றாட்டு ஜெபத்தை ஏறடுப்போமாம்! நாம் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று கதறுவோமா. ஒருவேளை தேவன் மனமிரங்கி தனது கோபத்தை நீக்கக்கூடும்.